April 21, 2024

ஜபம்-பதிவு-951 மரணமற்ற அஸ்வத்தாமன்-83 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-951

மரணமற்ற அஸ்வத்தாமன்-83

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :  பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களைத் ஆட்டுவிப்பவர்கள் என்கிறேன்.

 

மக்களை முட்டாளாக வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

தாங்கள் சொல்வதை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக

வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் தலையாட்டிக் கொண்டு இருக்கும்

தலையாட்டி பொம்மைகளாக மக்களை வைத்திருக்கிறார்கள் என்கிறேன்.

 

அவர்களால் தான் நல்ல விஷயமும், கெட்ட விஷயமும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறேன்.

 

நல்ல விஷயத்தை கெட்ட விஷயமாகவும், கெட்ட விஷயத்தை நல்ல விஷயமாகவும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள்

என்கிறேன்.

 

அவர்கள் நினைத்தால் நல்லவர்களை கெட்டவர்களாக்கவும் முடியும், கெட்டவர்களை நல்லவர்களாக்கவும் முடியும் என்கிறேன்.

 

நல்ல விஷயம் மக்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். மீறி சேர்ந்து விட்டால் அந்த நல்ல விஷயத்தை கெட்ட விஷயமாக மாற்றி விடுகிறார்கள் என்கிறேன்.

 

கெட்ட விஷயத்தை உருவம் மாற்றி நல்ல விஷயமாக கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள் என்கிறேன்.

 

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களால் நல்ல விஷயம் கெட்ட விஷயமாகவும், கெட்ட விஷயம் நல்ல விஷயமாகவும் மக்களின்

மனதில் திணிக்கப்படுகிறது என்கிறேன்.

 

பணம், பதவி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு

யாரைப் பிடித்து இருக்கிறதோ அவர்களை நல்லவர்கள் என்பார்கள்,

 

யாரைப் பிடிக்கவில்லையோ அவர்களை கெட்டவர்கள் என்பார்கள்.

 

தங்களுக்கு பிடித்தவர்களை,

தங்களுக்கு அடிமைகளாக இருப்பவர்களை

எதிர்த்துக் கேள்வி கேட்காதவர்களை,

சுயமாக சிந்திக்காதவர்களை,

சுய அறிவு இல்லாதவர்களை,

பிறரை அண்டி வாழ்பவர்களை

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் உயர்வான நிலைக்கு கொண்டு வருவார்கள்.

 

அவர்களுக்கு திறமை இல்லாவிட்டாலும் திறமை இருக்கிறது என்று சொல்லி மக்களை நம்ப வைத்து அவர்களை வளர்த்து விடுவார்கள்.

 

அப்படி வளர்ந்தவன் தான் அர்ஜுனன்.

அப்படி வளர்க்கப்பட்டவன் தான் அர்ஜுனன்.

திறமை எதுவும் இல்லாவிட்டாலும் சிறந்த திறமைசாலி என்று பொய்யான மாயையில் வளர்க்கப்பட்டவன் தான் அர்ஜுனன்.

 

வில் விடுவதில் சிறந்த திறமைசாலிகள்

இந்த உலகத்தில் நிறைய பேர்கள் இருந்தும்

வில்லுக்கு விஜயன் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் அர்ஜுனன்.

 

உலகத்திலேயே வில் வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன் என்று சொல்ல வைக்கப்பட்டவன்.

 

வில் விடுவதில் மிகுந்த திறமைசாலி என்று மக்களால்

ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டவன் தான் அர்ஜுனன்.

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களால் வளர்க்கப்பட்டவன் தான் அர்ஜுனன்

 

பீஷ்மரை விடவா சிறந்த வில்லாளி அர்ஜுனன்?

 

ஏன் உங்களை விட மேலானவனா அந்த அர்ஜுனன்?

 

பீஷ்மர், துரோணர் இவர்களை விடவா உயர்ந்தவன் அந்த அர்ஜுனன்.

 

மக்களுக்கு உண்மை எது? பொய் எது? என்று தெரியாது

எது சரி? எது தவறு? என்று தெரியாது

எதையும் சிந்தித்தே பார்க்க மாட்டார்கள்.

 

தலையாட்டிகளாக இருப்பார்கள்.


அடிமைகளாக இருப்பார்கள்.

 

அதனால் தான் திறமை இல்லாமல் இருக்கும் அர்ஜுனனை திறமைசாலி என்று மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment