April 21, 2024

ஜபம்-பதிவு-955 மரணமற்ற அஸ்வத்தாமன்-87 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-955

மரணமற்ற அஸ்வத்தாமன்-87

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆன்ம சக்தி என்று சொல்லப்படக்கூடிய      பிரம்மத்தை உணர வேண்டும். அதற்குப் பிறகு உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களையும் செயல்பாட்டுக் கொண்டு வந்து உடம்பும், மனதும் சேர்ந்து திரட்டிய சக்தியை ஏதாவது ஒரு             ஆயுதத்தின் மீதோ அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீதோ இறக்க வேண்டும்.

 

அப்படி உருவாக்கப்படும் எந்த ஒரு ஆயுதமும் பிரம்மாஸ்திரமாக மாறும்.

 

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த பிரம்மாஸ்திரத்தை உருவாக்கி பயன்படுத்தலாம்.

 

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்குள் இருக்கும் ஆன்ம சக்தி என்று சொல்லப்படக்கூடிய பிரம்மத்தை உணரக்கூடிய சக்தியையும், உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களையும் செயல்பாட்டுக் கொண்டு வந்து உடம்பையும், மனதையும் இணைத்து சக்தியை யாரால் பிறப்பிக்க முடிகிறதோ அவரால் மட்டுமே இந்த பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்க முடியும்.

 

பிரம்மாஸ்திரம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆன்ம சக்தியைப் பொறுத்துத் தான் பிரம்மாஸ்திரம் செயல்படும். பிரம்மாஸ்திரம் என்பது அதைப் பயன்படுத்துபவரின் ஆன்ம சக்தியைப் பொறுத்து மாறுபடும்.

 

அர்ஜுனன் விட்டால் அதற்கு ஒரு சக்தி இருக்கும், யுதிஷ்டிரன் விட்டால் அதற்கு ஒரு சக்தி இருக்கும், சிவன் விட்டால் அதற்கு ஒரு சக்தி இருக்கும். இவ்வாறு பிரம்மாஸ்திரம் அதை விடுபவரின் ஆன்ம சக்தியைப் பொறுத்து சக்தியில் வேறுபடும்.

 

இதனை பிரயோகித்த உடனேயே மிகக் கொடிய நச்சுத் தன்மை கொண்ட கதிர்வீச்சுக்கள் வெளிப்படும்.

 

பிரயோகம் செய்த இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு புல், பூண்டுகள் கூட முளைக்காது.

 

பிரம்மாஸ்திரத்தைப் பலகீனமானவர்கள் மீது பிரயோகம் செய்யக்கூடாது.

 

பிரம்மாஸ்திரத்தின் உயர்ந்த நிலை ஒன்று இருக்கிறது அது தான் பிரம்மசிரா. மும்மூர்த்திகளின் சக்தியின் ஒரு பகுதி தான் பிரம்மாஸ்திரம். மும்மூர்த்திகளின் பெரும் பகுதி சக்திளைத் தன்னுள் கொண்டதுதான் பிரம்மசிரா.

 

பிரம்ம சீராவை ஏவினால் உலகம் அழியும்

 

பிரம்மாஸ்திரம், பிரம்ம சீரா இந்த இரண்டையும் விட சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது அது தான் பிரம்ம பானம்

 

இந்த அஸ்திரத்துக்கு இணையாக எந்த ஒரு அஸ்திரமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

 

இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு அஸ்திரத்தாலேயும் எந்த ஒரு படையை அழிக்க முடியவில்லையோ அந்த படையின் மீது மட்டும் தான் இந்த பிரம்மபானத்தை பிரயோகிக்க முடியும்.

 

இவ்வாறு பல்வேறு படிநிலைகளைத் தன்னுள் கொண்டது தான் பிரம்மாஸ்திரம்

 

இப்போது தெரிந்ததா பிரம்மாஸ்திரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று

அதை கற்றுக்க கொள்ள அமைதி பொறுமை நிதானம் தேவை என்று

 

மற்ற அஸ்திரங்களை விட பிரம்மாஸ்திரம் வித்தியாசம் கொண்டது என்று

அறிந்து கொண்டாயா

 

பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கும் வித்தையை உனக்கு சொல்லித் தருகிறேன்

 

அஸ்வத்தாமன்: மீதி பாதி என்று எதைச் சொல்கிறீர்கள்?

 

பிரம்மாஸ்திரத்தை திருப்பி வரவழைக்கும் மந்திரத்தைத் தான் மீதி பாதி என்கிறேன்.

 

இப்போது நான் உனக்கு பிரம்மாஸ்திரத்தை திருப்பி வரவழைக்கும் மந்திரத்தை உனக்கு சொல்லித் தரப்போவதில்லை,

 

ஏற்கனவே நான் சொல்லியபடி அமைதி, பொறுமை, நிதானம் கொண்டவனாக நீ மாறிய பிறகு, உன் நடத்தையில் நல்லவைகள் வெளிப்பட்ட பிறகு மீதி பிரம்மாஸ்திரத்தைச் சொல்லித் தருகிறேன்.

 

 துரோணர்:  நீங்கள் பிரம்மாஸ்திரத்தைச் சொல்லித் தருகிறேன் என்று சொன்னதே பெரிய விஷயம். பாதி கற்றுக் கொள்வதில் எனக்கு வருத்தம் இல்லை. மீதி பாதியை விரைவிலேயே கற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

தாங்கள் எனக்கு பிரம்மாஸ்திரத்தைக் கற்றுத் தாருங்கள். நான் கற்றுக் கொள்கிறேன்.

 

(துரோணர் பிரம்மாஸ்திரத்தை எப்படி பிரயோகம் செய்வது என்பதை கற்றுக் கொடுக்கிறார். அஸ்வத்தாமனும் அதை கற்றுக் கொள்கிறான். பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கும் முறையைக் கற்றுக் கொள்கிறான். எப்படி திரும்ப அழைப்பது என்பது அவனுக்கும் தெரியாது. )

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment