July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-84


               ஜபம்-பதிவு-576
        (அறிய வேண்டியவை-84)

வியாசர் :
“மகளே காந்தாரி
ஒரு தாயால் தான்
தன்னுடைய மகனுக்காக
எத்தகைய ஒரு
செயலையும் செய்ய
முடியும் என்பதை
உன்னுடைய
வார்த்தையின் மூலம்
தெரிந்து கொண்டேன்”

“ஒரு தாயால் தான்
தன்னுடைய மகனுக்காக
தன்னுடைய உயிரையே
கொடுக்க முடியும்
என்பதை
உன்னுடைய
வார்த்தையின் மூலம்
தெரிந்து கொண்டேன்”

“தாயின் அன்பிற்கு
எல்லை இல்லை
என்பதை
உன்னைப் பார்த்துத்
தான் தெரிந்து
கொண்டேன்”

“பெற்ற மகன்
உயிரோடு இருக்க
வேண்டும் என்பதற்காக
நரக வாழ்க்கையைம்
ஏற்றுக் கொள்வதற்கு
தயாராக இருக்கும்
தாய்ப் பாசத்தை
உன்னிடம் இருந்து
தான் தெரிந்து
கொண்டேன் “

“பெற்ற மகனின்
மேல் உள்ள
பாசத்தால் தன்னுடைய
உயிரையே
கொடுப்பதற்குத்
தயாராகி விட்ட
காந்தாரி
உன்னால் தாய்மார்கள்
இனமே பெருமை
கொள்கிறது “

“பெற்ற மகனின்
மேல் உள்ள பாசத்தால்
தான் நரகம்
சென்றாலும்
பரவாயில்லை
தன்னுடைய
புண்ணியப் பலன்களை
தன்னுடைய மகனுக்கு
அளிப்பதற்குத்
தயாராக இருக்கும்
காந்தாரி - உன்னால்
தாய்மார்கள் இனமே
உயர்வு கொள்கிறது”

“பெற்ற மகனுக்காக
தன்னுடைய
புண்ணியங்களையே
கொடுப்பதற்குத் தயாராகி
விட்ட காந்தாரியே
நான் சொல்வதை
கவனமாகக் கேள்”

“உன்னுடைய மகனைக்
காப்பாற்ற வேண்டும்
என்பதற்காக நீ
கொடுக்க நினைக்கும்
புண்ணியப் பதிவுகளின்
மொத்த சக்தியானது
சூட்சும நிலையில்
இருப்பது”

“சூட்சும நிலையில்
இருக்கும் சிலவற்றை
நாம் பிறருக்கு
கொடுக்க வேண்டும்
என்றால்
நாம் கொடுக்க
நினைக்கும் சக்தியை
நம் மூலமாக
பிறருக்கு பாய்ச்ச
வேண்டும் “

“நம்மிடம் இருக்கும்
புண்ணியப் பதிவுகள்
அடங்கிய சக்தியாக
இருந்தாலும் சரி
நம்மிடம் இருக்கும்
பாவப் பதிவுகள்
அடங்கிய சக்தியாக
இருந்தாலும் சரி
எந்த ஒரு
சக்தியாக
இருந்தாலும் சரி
நம்மிடம் உள்ள
சக்தியை
நம் மூலமாக
பிறருக்கு கொடுக்க
வேண்டும் என்றால்
நாம் கொடுக்க
நினைக்கும் சக்தியை
பிறருக்கு பாய்ச்ச
வேண்டும்”

“இந்த உலகத்தில்
மனிதனாகக் பிறந்த
ஒவ்வொருவரும்
தன்னிடம் உள்ள
சக்தியை பிறருக்கு
கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால்
அவனால் மூன்று
நிலைகளில் தான்
தன்னுடைய சக்தியை
பிறருக்கு
பாய்ச்ச முடியும்”

ஒன்று :
“தொடுதலின் மூலம்
சக்தியை பாய்ச்சுவது”

இரண்டு :
“கண்களின் மூலம்
சக்தியை பாய்ச்சுவது”

மூன்று : 
“நினைவின் மூலம்
சக்தியை பாய்ச்சுவது”

“தொடுவதின் மூலமும்  
நினைவின் மூலமும்
உன்னால்
புண்ணிய பலன்களைப்
பிறருக்கு
பாய்ச்ச முடியாது
ஏனென்றால் அதற்குரிய
தகுதியை நீ
இன்னும் பெறவில்லை”

“கண்களின் மூலம்
தான் உன்னுடைய
புண்ணியப் பலன்களை
உன்னுடைய மகனுக்கு
உன்னால்
பாய்ச்ச முடியும் “

காந்தாரி :
“பாய்ச்சுவது எப்படி
என்பதை சொல்லுங்கள்
முனிவரே”

வியாசர் :
“அதற்கென்று ஒரு
முறை உள்ளது
அந்த முறையைப்
பின்பற்றித் தான் அதைச்
செய்ய வேண்டும் “

காந்தாரி :
“என்ன முறை”

வியாசர் :
“நீ உன்னுடைய
கண்களின் மூலமாக
உன்னுடைய சக்தியை
உன்னுடைய மகனுக்கு
பாய்ச்சுவதற்கு
முன்பாக - உன்
மகன் துரியோதனனை
பிறந்த மேனியாக
ஆற்றில் சுத்தமாகக்
குளித்து விட்டு
நேரடியான பிறந்த
மேனியாக-உன்
எதிரில் வந்து நிற்க
வேண்டும் என்று சொல் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment