August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-128


               ஜபம்-பதிவு-620
       (அறிய வேண்டியவை-128)

“ராஜ நீதி என்றால்
உனக்கு
என்ன என்று
தெரியாத
காரணத்தினால் தான்
நான் செய்யும்
ராஜ நீதிகளை
சதி வேலைகள்
என்கிறாய்”

“சதி வேலைக்கும்
ராஜ நீதிக்கும்
வேறுபாடு
தெரியாமல்
பேசுகிறாய்”

“ராஜ நீதியை
சதி வேலை
என்று இகழுகிறாய்”

“ராஜநீதியை
பின்பற்றும்
என்னை
சதி வேலை
செய்பவன் என்று
என்னை
இகழுகிறாய்”

“நான் திட்டம்
போட்டு
செயல்படுத்தும்
திட்டங்கள்
அனைத்தும்
ராஜ நீதியைப்
பின்பற்றி
செய்யப்படுபவை
என்பதை
முதலில்
உணர்ந்து கொள்
கர்ணா”

கர்ணா :
“நீங்கள் போடும்
சதித்திட்டங்களை
ராஜ நீதி என்று
நீங்கள் தான்
சொல்கிறீர்கள் “

“ஆனால் இந்த
உலகம் உங்களை
சதித்திட்டம்
தீட்டுபவர்
என்று தானே
சொல்கிறது “

“சகுனி என்றாலே
சதித்திட்டங்களை
தீட்டுபவர்
என்று தானே
இந்த உலகம்
நினைக்கிறது “

“சகுனியை
கெட்டவன்
என்று தானே
இந்த உலகம்
பேசுகிறது”

சகுனி :
“நம்மைப் பற்றி
இந்த உலகம்
என்ன சொல்கிறது
என்று கேட்டுக்
கொண்டே
இருந்தால்
நம்மால்
நிம்மதியாக
வாழவே முடியாது”

“இந்த உலகத்திற்கு
நம்மால் காரியம்
ஏதேனும்
நடை பெற
வேண்டும் என்றால்
நம்மை
நல்லவன்
என்று சொல்லும்
நம்மால் காரியம்
எதுவும்
நடைபெறத்
தேவையில்லை
என்றால்
நம்மை கெட்டவன்
என்று சொல்லும்”

“இந்த உலகத்திற்கு
நாம் தேவைப்படும்
போது நம்மைப்
பயன்படுத்திக்
கொள்ளும்
நாம் தேவைப்படாத
போது நம்மை
தூக்கி எறிந்து விடும்”

“இந்த உலகத்திற்கு
நம்மைப்
பிடித்திருந்தால்
நம்மை
தலையில் தூக்கி
வைத்துக்
கொண்டாடும்
பிடிக்கவில்லை
என்றால்
நம்மை கீழே
தள்ளி விட்டு ஓடும்”

“இந்த உலகம்
கால் பிடித்து
வாழ்பவர்களை
அறிவாளிகள்
என்று சொல்லும்
அநீதியை
எதிர்த்து குரல்
கொடுப்பவர்களை
அறிவற்றவர்கள்
என்று சொல்லும்”

“இந்த உலகம்
திறமையில்லாதவர்களை
புகழின்
உச்சிக்கு
கொண்டு செல்லும்
திறமையுள்ளவர்களை
அவமானப்படுத்தி
அவர்களைக்
கொல்லும் “

“இந்த உலகம்
சிந்திப்பவர்களை
அழித்து விடும்
சிந்திக்காதவர்களை
உயர்ந்த நிலைக்கு
கொண்டு
சென்று விடும்”

“இந்த உலகம்
சொல்லிக்
கொண்டிருப்பவைகளை
நாம் காது
கொடுத்துக்
கேட்டுக்
கொண்டிருந்தால்
நம்மால் இந்த
உலகத்தில் வாழவே
முடியாது கர்ணா”

“இந்த உலகம்
தனக்கு
தேவையானவர்களுக்குத்
தான் ஆதரவு
கொடுக்கும்
தனக்கு
தேவையில்லாதவர்களுக்கு
ஆதரவு கொடுக்காது”

கர்ணன்  :
“ஏன் அவ்வாறு
சொல்கிறீர்கள்”

சகுனி  :
“நானும்
கிருஷ்ணனும்
ஒன்று தான்
நான் செய்யும்
செயல்களைத் தான்
கிருஷ்ணனும்
செய்கிறான்
ஆனால் இந்த
உலகம் என்னை
கெட்டவன் என்று
சொல்கிறது
கிருஷ்ணனை
நல்லவன் என்று
அல்லவா சொல்கிறது”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment