March 06, 2022

700-வது பதிவு!

 700-வது பதிவு!

 

அன்பிற்கினியவர்களே!

 

திருக்குறளுக்கு

விளக்கங்கள்

சித்தர்

பாடல்களுக்கு

விளக்கங்கள்

இலக்கியங்களுக்கு

விளக்கங்கள்

இராமாயணம்

மகாபாரதம்

வரலாற்றுக்

கதைகள்

புராணக் கதைகள்

வாழ்க்கைக்

கதைகள்

உண்மைக் கதைகள்

ஆகியவற்றிற்கு

திரைக்கதை

வசனங்கள்

ஆகியவற்றை

2011-ஆம்

ஆண்டு முதல்

11 ஆண்டுகளுக்கும்

மேலாக

ஜபம் என்ற பெயரில்

பல்வேறு

தலைப்புகளில்

எழுதிக் கொண்டு

இருக்கிறேன்

 

இக்கட்டான

சூழ்நிலைகள்

என்னுடைய

இதயத்தைத் தாக்கி

பாதிப்பு அடையச்

செய்தாலும்

 

சோதனைகள்

என்னைத் தாக்கி

கீழே விழச்செய்து

எழுந்திருக்க

முடியாமல்

செய்தாலும்

 

அவமானங்கள்

ஏளனங்கள்

அசிங்கங்கள்

என் வாழ்க்கையின்

மேல் ஏறி

விளையாடினாலும்

 

அனைத்தையும்

கடந்து நான்

வாழ்க்கைப்

பாதையில்

பயணித்துக் கொண்டு

இருக்கிறேன் என்றால்

அதற்கு

முக்கியக் காரணம்

நான் எழுதிக்

கொண்டிருக்கின்ற

காரணத்தினால் தான்

 

என்னுடைய

எழுத்துக்கள் தான்

என்னை

இந்த உலகத்தில்

வாழ வைத்துக்

கொண்டு இருக்கிறது

 

நான் எழுதுவதையும்

படிப்பதையும்

நிறுத்தும் போது

என்னுடைய உயிர்

என்னுடைய உடலில்

இருக்காது

 

என்னுடைய

எழுத்துக்களால்

உயிர் வாழ்ந்த
கொண்டிருக்கின்ற

நான்

இன்று

ஜபத்தின்

700-வது பதிவை

பதிவு செய்து

இருக்கிறேன்

 

எந்தக் கவலைகளை

எல்லாம்

வாழ்க்கையில்

சந்திக்கக் கூடாதோ

அந்தக்

கவலைகளை

எல்லாம் கடந்து

வந்து

இந்த 700-வது

பதிவை

நிறைவு செய்து

இருக்கிறேன்

என்றால்

இந்தச் செயல்

எனக்கு மிக்க

மகிழ்ச்சியை

அளிக்கிறது

என்று சொல்வதில்

நான் மிக்க

பெருமையடைகிறேன்

என்று

சொல்லிக் கொள்கிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

-------K.பாலகங்காதரன்

 

-------06-03-2022

////////////////////////////////////////////

No comments:

Post a Comment