March 06, 2022

ஜபம்-பதிவு-709 (சாவேயில்லாத சிகண்டி-43)

 ஜபம்-பதிவு-709

(சாவேயில்லாத

சிகண்டி-43)

 

பீஷ்மர் :

முடியாது

 

பிரம்மச்சரிய விரதம்

பூண்டவன் நான்

 

யாரையும் திருமணம்

செய்து கொள்ள

மாட்டேன் என்று

சபதம்

செய்திருப்பவன் நான்

 

என்னால்

உங்களை

மட்டும் அல்ல

யாரையும்

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அம்பை :

சபதம் ஏற்றவர்கள்

யாரும் வாழ்நாளின்

இறுதி வரை

சபதத்தை

பின்பற்றுவதில்லை

 

சபதத்தை

விலக்குவதால்

நன்மை கிடைக்கும்

என்றால்

சபதத்தை

விட்டு விட

வேண்டியது தானே

 

பீஷ்மர் :

என்னுடைய உயிர்

இந்த உடலில்

இருக்கும் வரை

என் சபதம்

இருக்கும்

 

அம்பை :

யாரும் இல்லாத

அனாதையாக நின்று

கொண்டிருக்கும்

ஒரு பெண்ணின்

மன வேதனை

உங்களுக்கு

கேட்கவில்லையா

 

சபதத்தை விட்டு

விட்டு என்னை

திருமணம் செய்து

கொள்ள மாட்டீர்களா

 

உங்களால்

பாதிக்கப்பட்ட

பெண்ணிற்கு

நீங்கள் வாழ்க்கை

தர மாட்டீர்களா

 

நிர்க்கதியாக

இருக்கும் ஒரு

பெண்ணின்

வாழ்க்கையை

அழிக்க

நினைக்காதீர்கள்

அனைவராலும்

கைவிடப்பட்ட

ஒரு பெண்ணின்

வாழ்க்கையை

அழித்து விடாதீர்கள்

 

என்னை ஏற்றுக்

கொள்ளுங்கள்

 

பீஷ்மர் :

முடியாது

 

அம்பை :

யோசித்துச் சொல்லுங்கள்

 

பீஷ்மர் :

யோசித்தாலும்

என்னுடைய முடிவு

ஒன்று தான்

என்னால் உங்களை

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அம்பை :

முடியவே முடியாதா

 

பீஷ்மர் :

ஆமாம்

முடியவே முடியாது

 

அம்பை :

(அம்பை ஆவேசத்துடன்

பேசத் தொடங்கினாள்)

 

பீஷ்மா

அஸ்தினாபுரத்தின்

எல்லையை

விரிவாக்கம் செய்யவும்,

படை வலிமையைப்

பெருக்கவும்

சந்தனு மகாராஜா

கங்கர் குல இளவரசி

கங்கா தேவியை

மணந்து

உங்களைப் பெற்றார்

அதில் அரசியல்

இருக்கிறது

அதற்குப் பெயர்

தான் ராஜ தந்திரம்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment