May 27, 2022

ஜபம்-பதிவு-764 (சாவேயில்லாத சிகண்டி-98)

 ஜபம்-பதிவு-764

(சாவேயில்லாத

சிகண்டி-98)

 

அம்பை :

நல்ல காலம்

நடந்து

கொண்டிருப்பவரை

நான் எப்படி

கண்டு பிடிப்பது

 

முருகன் :

இந்த மாலையை

யார் அணிந்து

கொள்கிறாரோ

அவருக்கே நல்ல

காலம் நடந்து

கொண்டிருக்கிறது

என்று அர்த்தம்

 

அவரே பீஷ்மரை

எதிர்த்து போரிடுவார்

என்று அர்த்தம்

 

அவரே பீஷ்மரைக்

கொல்வார்

என்று அர்த்தம்

 

பெற்றுக் கொள்

அம்பையே

 

(முருகப்

பெருமானிடமிருந்து

வாடாத தாமரை

மாலையை

அம்பை

பெற்றுக் கொள்கிறாள்

 

அந்த தாமரை

மாலையை கைகளில்

வாங்கிக் கொள்கிறாள்

கண்களில்

ஒற்றிக் கொள்கிறாள்

 

அவள் கண்களில்

இருந்து

வழிந்த கண்ணீர்

அந்த மாலையை

நனைத்தது

 

முருகப் பெருமான்

மறைந்த பிறகு

நாட்டுக்குள்

வந்த அம்பை

நடந்த விஷயத்தை

இந்த உலகத்தில்

உள்ள அரசர்கள்

ஷத்திரியர்கள்

வீரர்கள்

ஆகியோரை

நேரில் சந்தித்து

சொன்னாள்

 

யாரும் பீஷ்மருக்கு

எதிராக

போர் செய்ய

முடியாது என்று

மறுத்து விட்டார்கள்

 

கடைசியாக

அம்பை

பாஞ்சால நாட்டு

மன்னன் துருபதனை

நேரில் சந்திக்க

அவன்

அரண்மனை சென்றாள்

 

அரண்மனைக்

காவலர்கள் அனுமதி

இல்லாமல்

உள்ளே நுழைய

முயன்ற

அம்பையை

தடுத்து

நிறுத்திய போது

அம்பை

அரண்மனைக்

காவலர்களை

விலக்கி விட்டு

அரண்மனைக்குள்

சென்றாள்

 

இக்காட்சியைக்

கண்ட துருபதன்

அம்பையிடம் பேசத்

தொடங்கினான்

 

துருபதன் :

நீங்கள் இவ்வளவு

கோபத்துடன் வர

வேண்டிய

அவசியம் இல்லை

 

இன்னும் உங்கள்

கோபம்

தணியவில்லையா

 

அம்பை :

பீஷ்மரைக்

கொல்லாமல்

என்னுடைய கோபம்

தணியாது

 

துருபதன் :

உறவுடன்

வருபவர்களை

உணவு கொடுத்து

உபசரிப்பது தான்

பாஞ்சால நாட்டின்

பழக்கம்

 

அம்பை :

நான் உணவு

உண்டு செல்ல

வரவில்லை

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற கோரிக்கையை

வைக்க

வந்திருக்கிறேன்

 

துருபதன் :

உங்களுடைய

கோரிக்கையை

என்னால்

ஏற்றுக் கொள்ள

முடியாது

 

அம்பை :

ஏன் ஏற்றுக்

கொள்ள முடியாது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment