May 27, 2022

ஜபம்-பதிவு-765 (சாவேயில்லாத சிகண்டி-99)

 ஜபம்-பதிவு-765

(சாவேயில்லாத

சிகண்டி-99)

 

துருபதன் :

பீஷ்மருடன்

போரிட்டால் அழிவு

நிச்சயம் என்று

தெரிந்த பிறகும்

பீஷ்மருடன்

எப்படி

போரிட முடியும்

 

அம்பை :

பயப்படுகிறாயா

 

துருபதன் :

எந்த விஷயத்திற்கு

பயப்பட வேண்டுமோ

அந்த விஷயத்திற்கு

பயந்து தானே

ஆக வேண்டும்

 

அம்பை :

பயப்படாதே

துருபதா

இந்த மாலையை

போட்டுக் கொண்டு

பீஷ்மரை

எதிர்த்து போரிடு

 

இந்த மாலையை

போட்டுக் கொண்டு

பீஷ்மரை எதிர்த்துப்

போரிட்டால்

பீஷ்மரைக்

கொல்லலாம்

 

துருபதன் :

என்ன

மாலை இது

 

அம்பை :

தாமரை மாலை

 

துருபதன் :

யார் கொடுத்தது

 

அம்பை :

முருகப் பெருமான்

கொடுத்தது

 

துருபதன் :

உங்களுக்கு

எப்படி கிடைத்தது

 

அம்பை :

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்று

நான் தவம்

செய்த போது

முருகப் பெருமானே

நேரில் வந்து

என்னிடம்

கொடுத்தது

 

துருபதன் :

நம்ப முடியவில்லை

 

அம்பை :

எதை நம்ப

முடியவில்லை

கடவுளையா

அல்லது

என்னுடைய

வார்த்தைகளையா

 

துருபதன் :

ஒருவரைக்

கொல்வதற்காக

கடவுளே நேரில்

வந்து கொடுத்தார்

என்பதைத் தான்

என்னால் நம்ப

முடியவில்லை

 

அம்பை :

என்னுடைய

கோரிக்கை சரியானது

என்று

தெரிந்ததால்

முருகப் பெருமானே

நேரில் வந்தார்

 

துருபதன் :

உண்மை என்று

எப்படி நம்புவது

 

அம்பை :

இந்த மாலையை

அணிந்து கொண்டு

பீஷ்மரை எதிர்த்து

போரிடுங்கள்

பீஷ்மரைக்

கொல்லும் போது

நான் சொன்னது

உண்மை என்பதைத்

தெரிந்து கொள்வீர்கள்

 

துருபதன் :

சோதனை செய்து

பார்க்க நான்

விரும்பவில்லை

 

அம்பை :

ஒரு பெண்ணின்

கண்ணீரைக்

கண்டுமா

உன் மனம்

இரக்கம்

கொள்ளவில்லை

 

துருபதன் :

ஒரு பெண்ணின்

கண்ணீருக்காக நான்

வேண்டுமானாலும்

அழியலாம்

 

என்னுடைய

குடும்பம்

என்னுடைய

உறவினர்கள்

என்னுடைய நாடு

என்னுடைய மக்கள்

ஏன் அழிய

வேண்டும்

 

அம்பை :

சுயநலக் காரனாக

இருக்கிறாய்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment