May 27, 2022

ஜபம்-பதிவு-768 (சாவேயில்லாத சிகண்டி-102)

 ஜபம்-பதிவு-768

(சாவேயில்லாத

சிகண்டி-102)

 

ஓடிவந்த

துருபதன்

அம்பையின்

பார்வையின்

தாக்கத்தைத்

தாங்க

முடியாமல்

அப்படியே

சிலை போல

அந்த

இடத்திலேயே

நின்று

விட்டான்

 

அம்பை நடந்து

செல்லத்

தொடங்கினாள்

 

அம்பை

நடந்து செல்லும்

போது

அவள் கால் பட்டு

புற்கள் வாடின

 

செடிகள்

கருகின

 

மரங்கள்

அனைத்தும்

வேகமாக வீசின

 

மேகம்

இருட்டத்

தொடங்கியது

 

புழுதிக்

காற்று

பரந்தது

 

வெப்பக் காற்று

வீசியது

 

சுழற்சிக்

காற்று

சுழன்று

அடித்துக்

கொண்டு

இருந்தது

 

அந்த

சுழற்சிக்

காற்றுக்கு

நடுவே

அம்பை

நடந்து

சென்று

கொண்டிருந்தாள்

 

அரண்மனைக்

கதவில்

அம்பை

மாட்டி விட்டுச்

சென்ற

மாலையை

யாரும்

தொடக்கூடாது

என்று காவல்

போட்டிருந்தான்

துருபதன்

 

அந்த

வழியாக

செல்பவர்கள்

அந்த

மாலையை

அதிசயமாகப்

பார்த்த வண்ணம்

சென்று

கொண்டிருந்தார்கள்

 

நாளாவட்டத்தில்

அந்த

மாலையை

அனைவரும்

மறந்து

விட்டார்கள்

 

காவலும்

விலக்கிக்

கொள்ளப் பட்டது

 

அம்பை

மாட்டி விட்டு

சென்ற

அந்த

மாலையில்

அம்பையின்

இதயம் துடித்துக்

கொண்டிருந்ததை

யாரும்

அறியவில்லை

 

இப்போது

அம்பையின்

இதயம்

எங்கே

துடித்துக் கொண்டு

இருக்கிறது

தெரியுமா

 

அறிந்து

கொள்ள

வாருங்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment