May 27, 2022

ஜபம்-பதிவு-766 (சாவேயில்லாத சிகண்டி-100)

 ஜபம்-பதிவு-766

(சாவேயில்லாத

சிகண்டி-100)

 

துருபதன் :

எந்த இடத்தில்

சுயநலக் காரனாக

இருக்க வேண்டுமோ

அந்த இடத்தில்

சுயநலக் காரனாக

இருந்து தானே

ஆக வேண்டும்

 

அம்பை :

பொது வெளியில்

வீரர்களாக

தங்களை

அடையாளப் படுத்திக்

கொள்பவர்கள்

 

பிறருக்கு உதவி

செய்பவர்களாக

நடித்துக்

கொண்டிருப்பவர்கள்

 

அறிவாளிகளாக

தங்களை

வெளிப்படுத்திக்

கொள்பவர்கள்

 

சமுதாயத்தை

தாங்கள் தான்

காப்பாற்றுவதாக

பொய் சொல்லி

திரிந்து

கொண்டிருப்பவர்கள்

 

புனிதர் வேடம்

போட்டுக் கொண்டு

நயவஞ்சக நரிகளாக

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

 

அனுபவமே

இல்லாமல் கருத்து

சொல்பவர்கள்

 

ஆகிய

அனைவருமே

மக்கள் மத்தியில்

பொதுநலவாதியாக

நடித்துக் கொண்டு

உள்ளுக்குள்

தனது குடும்பம்

தனது உறவினர்கள்

என்று

சுயநலவாதியாகத்

தான் வாழ்ந்து

கொண்டு

இருக்கிறார்கள்

என்பதற்கு

நீயே சாட்சி

துருபதா

 

ஆமாம்

நீ ஒரு

சுயநலவாதி

துருபதா

சுயநலவாதி

 

நாம் கஷ்டப்படும்

போது இன்னொரு

மனிதனிடம் சென்று

உதவி

கேட்கக் கூடாது

 

அப்படி உதவி

கேட்டால் எந்த

மனிதனும் உதவி

செய்ய மாட்டான்

நமக்கு உதவி

வேண்டும் என்றால்

கடவுளிடம் சென்று

உதவி கேட்க

வேண்டும்

என்பதற்காகத் தானே

இந்த உலகத்தில்

கோயில்களையே

கட்டி வைத்து

இருக்கிறார்கள்

 

கோயில்கள் இந்த

உலகத்தில் அதிக

அளவில் கட்டி

வைக்கப்பட்டிருப்பதற்குக்

காரணம்

கஷ்டப்படும்

மனிதனுக்கு

இன்னொரு மனிதன்

உதவி செய்ய

மாட்டான் என்ற

காரணத்தினால்

தானே

 

உன்னுடைய நாட்டில்

அதிக அளவில்

கோயில் இருக்கும்

போதே

நான் உணர்ந்து

இருக்க வேண்டும்

கஷ்டப்படும் ஒரு

மனிதனுக்கு

இன்னொரு மனிதன்

உதவி செய்யாத

நாடு இது என்று

 

தவறு

செய்து விட்டேன்

உன்னிடம் உதவி

கேட்டு வந்து

விட்டேன்

 

இப்போது

தெரிந்து கொண்டேன்

உதவி கேட்டு

யாரிடமும்

செல்லக் கூடாது

என்று

தெரிந்து கொண்டேன்

 

உதவி கேட்டு

யாரிடமும் சென்று

நிற்கக் கூடாது

என்று

தெரிந்து கொண்டேன்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment