February 19, 2023

ஜபம்-பதிவு-922- மரணமற்ற அஸ்வத்தாமன்-54 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-922-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-54

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

வாழ்க்கை

என்பது ஒரு

பூந்தோட்ம்

அதை ரசித்து

வாழ வேண்டும்

போர்க்களமாக

நினைத்து

போராடி

வாழக்கூடாது

 

வாழ்க்கையை

பூந்தோட்டமாக

நினைத்து

ரசித்து வாழ்

 

போர்க்களமாக

நினைத்து

போராடி

வாழ்க்கையைத்

தொலைத்து

விடாதே

 

அஸ்வத்தாமன் :

அவமானத்தைத்

துடைப்பதற்கு

போராட

வேண்டாம்

என்கிறாயா

 

துரியோதனன் :

வழியைத் தேடு

என்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

வழியை

எப்படி

தேடுவது

 

துரியோதனன் :

உனக்கு நேர்ந்த

அவமானத்தைச்

சொல்

வழியை நான்

சொல்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

இது போல்

யாரும்

என்னிடம்

பேசியது

கிடையாது

 

உன்னுடைய

வார்த்தைகள்

என் உயிரில்

ஏதோ ஒரு

மாற்றத்தை

ஏற்படுத்துகிறது

 

துரியோதனன் :

பிறருடைய

சொல்

உடல் வரை

தான் பாயும்

ஆனால்

நண்பனின்

சொல் மட்டுமே

உயிர் வரை

பாயும்

 

நீ என்னை

நண்பனாக

ஏற்றுக் கொண்டு

வருகிறாய்

என்பதையே

இது காட்டுகிறது

 

அஸ்வத்தாமன் :

நீ சொல்வதும்

உண்மையாகத்தான்

இருக்கும் போல்

இருக்கிறது

என்னுடைய

மனக்குறைகளை

உன்னிடம் சொல்ல

வேண்டும் போல்

இருக்கிறது

 

துரியோதனன் :

உன் மனதை

அழுத்திக்

கொண்டிருக்கும்

பாரங்களை

என் மேல்

இறக்கி

வைத்து விடு

 

உன் மனம்

அமைதி

அடைந்து

விட்டதை

நீ காண்பாய்

 

அஸ்வத்தாமன் :

இளவயதில்

என்னுடைய

நண்பர்கள்

எனக்கு எதைக்

கொடுத்தாலும்

சாப்பிடுவேன்

காரணம்

என்னுடைய

நண்பர்கள்

எனக்கு நல்லது

செய்வார்கள்

கெட்டது

செய்ய

மாட்டார்கள்

என்ற

காரணத்தினால்

தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment