February 19, 2023

ஜபம்-பதிவு-925- மரணமற்ற அஸ்வத்தாமன்-57 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-925-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-57

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

நம்முடன்

நட்புறவுடன் இருக்கும்

நண்பர்களின்

தனித்திறமையை

அறிவுக் கூர்மையை

செயலாற்றும்

தன்மையை

புரிந்து கொண்டும்

பாராட்ட

மனம் இல்லாமல்

இருந்தாலும்

பரவாயில்லை

 

அவமானப்படுத்துவது

என்பது தகாத

செயலாகும்

 

இவ்வாறு

அவமானப்படுத்தியவர்கள்

தாங்கள்

எந்த நிலையில்

இருந்தார்களோ

அந்த

நிலையிலேயே

தான் இருப்பார்கள்

சிந்தனை செய்யும்

திறனற்ற

அவர்களால்

வாழ்க்கையை

வாழ்க்கையாக

வாழ முடியாது

 

வாழ்க்கையின்

உயர்ந்த நிலைகளை

தங்களுடைய

வாழ்க்கையில்

அவர்களால்

காணவே

முடியாது ஆனால்

அவமானப்படுத்தப்பட்டவர்கள்

வாழ்க்கையின்

உயர்ந்த நிலைகளை

அடைவார்கள்

சாதனை

செய்வார்கள்

சரித்திரம்

படைப்பார்கள்

யாரும் செய்யாத

செயலைச்

செய்வார்கள்

யாராலும் செய்ய

முடியாததையும்

செய்வார்கள்

 

ஏனென்றால்

அவமானப்படுத்தப்பட்டவர்கள்

வாழ்க்கை என்றால்

என்ன என்பதைப்

புரிந்து

கொண்டவர்கள்

 

அவமானப்படுத்தியவர்கள்

வாழ்க்கை

இழந்து நிற்பார்கள்

ஆனால்

அவமானப்படுத்தப்பட்டவர்கள்

வாழ்க்கையில்

உயர்ந்து

நிற்பார்கள்

 

அவமானத்தை

சந்திக்காதவர்கள்

இந்த

உலகத்தில் யாருமே

இருக்க முடியாது

 

அவமானத்தை

அனுபவத்தின்

படிக்கட்டுக்களாக மாற்றி

செயலாற்றியவர்களே

வாழ்க்கையில் வெற்றி

பெற்றிருக்கிறார்கள்

அவமானத்தை

எதிர்த்து நிற்க

தைரியம்

இல்லாதவர்கள்

அழிந்து தான்

போய்

இருக்கிறார்கள்

 

அவமானம்

என்பது

சாதாரணமானது

கிடையாது

 

அவமானத்தை

அசிங்கமாக

கருதினால்

அது நமக்கு

இழப்பு தான்

அவமானத்தை

அனுபவமாக

கருதினால்

அது நமக்கு

வெற்றி தான்

 

அவமானத்தை

இழிவாக

நினைக்காதே

வாழ்க்கை

உனக்கு

கற்றுத் தந்த

பாடமாக

எடுத்துக்கொள்

 

ஏழை என்று

நினைத்துத்தானே

உன்னை

அவமானப்படுத்தினார்கள்

சாப்பிட்டிற்கு வழி

இல்லாதவன்

என்று

தானே உன்னை

அவமானப்படுத்தினார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment