February 19, 2023

ஜபம்-பதிவு-934 மரணமற்ற அஸ்வத்தாமன்-66 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-934

மரணமற்ற

அஸ்வத்தாமன்-66

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அமைதி

அமைதியாக இருங்கள்

 

வெற்றி பெறுவது

சாதாரண விஷயம் இல்லை

இடம் நேரம்

காலம் சூழ்நிலை

ஆகியவற்றைப் பொறுத்து

எந்த செயலை

எப்படி செய்ய

வேண்டுமோ

அப்படி செய்தால்

மட்டுமே வெற்றி

பெற முடியும்

 

வெற்றி பெறுவது

சாதாரண விஷயம் இல்லை

எவ்வளவு தான்

அறிவாளியாக இருந்தாலும்

எவ்வளவு தான்

உழைப்பைக்

கொடுத்தாலும்

வாழ்க்கையில்

ஏற்படக்கூடிய

அவமானங்கள்

ஏளனங்கள்

அசிங்கங்கள்

இழப்புகள்

கஷ்டங்கள்

சோதனைகள்

எதிர்ப்புகள்

ஆகிய எல்லாவற்றையும்

கடந்து வந்தால் தான்

வெற்றி பெற முடியும்

 

வெற்றி பெறுவது

சாதாரண விஷயம் இல்லை

மற்றவர்களால்

செய்ய முடியாததை

நாம் செய்தால் மட்டுமே

நம்மால் வெற்றி

பெற முடியும்

மற்றவர்கள்

செய்தைதையே

நாம் மீண்டும்

செய்தால்

நம்மால் தோல்வி

தான் அடைய

முடியும்

 

வெற்றி பெற்றதால்

ஒருவர் திறமைசாலி

என்றோ

தோல்வியுற்றதால்

ஒருவர் திறமைசாலி

இல்லை

என்றோ சொல்லி

விட முடியாது

 

இருவருமே வெற்றி

பெறுவதற்காக கடினமாக

உழைத்தவர்கள் தான்

இருவருமே

திறமைசாலிகள் தான்

இருவருமே

அறிவாளிகள் தான்

வெற்றி பெற்றவருக்கு

உழைப்புக்கேற்ற

ஊதியம்

பரிசாகக்

கிடைத்திருக்கிறது

தோல்வி

அடைந்தவருக்கு

உழைப்புக்கேற்ற ஊதியம்

கிடைக்கவில்லை

என்று தான்

சொல்ல வேண்டும்

 

வெற்றியும் தோல்வியும்

நிரந்தரம் அல்ல

இன்று வெற்றி பெற்றவர்

நாளை தோல்வி அடைவார்

இன்று தோல்வி

அடைந்தவர்

நாளை வெற்றி பெறுவார்

 

வெற்றி பெற்றவர்

தன்னுடைய வெற்றியைத்

தக்க வைத்துக்

கொள்வதற்கு

தன்னுடைய திறமையை

மேலும் வளர்த்துக்

கொள்ள வேண்டும்

 

தோல்வியுற்றவர்

தன்னுடைய

தோல்விக்கான

காரணத்தை

அறிந்து அதை நீக்கி

வெற்றி பெறுவதற்கான

பயிற்சிகளைச்

செய்ய வேண்டும்

 

வெற்றி பெறுவது

கடினம் தான்

அதை விட கடினம்

பெற்ற வெற்றியைத்

தக்க வைத்துக் கொள்வது

 

சமுதாயத்தில் பலர்

போராடி வெற்றி

பெறுகிறார்கள்

அவர்கள் மக்களால்

புகழப் படுகிறார்கள்

ஆனால் வெற்றி

பெற்றவர்களால்

தாங்கள் பெற்ற

வெற்றியை

தக்க வைத்துக்

கொள்ள முடிவதில்லை

சமுதாயத்தில் காணாமல்

போய் விடுகிறார்கள்

 

வெற்றி பெறுவது

மட்டும் முக்கியமில்லை

பெற்ற வெற்றியைத்

தக்க வைத்துக்

கொள்வதும் முக்கியம்

 

சண்டையிட்ட

இருவரில் வெற்றி

பெற்றவரால் மட்டுமே

தோல்வி

அடைந்தவர் ஏன்

தோல்வி அடைந்தார்

என்று சொல்ல முடியும்

 

தோல்வி அடைந்தவர்

எதைப் பயன்படுத்தாத

காரணத்தால்

தோல்வி அடைந்தார்

என்று சொல்ல முடியும்

 

எதைப் பயன்படுத்தி

இருந்தால் வெற்றி

பெற்று இருக்க முடியும்

என்பதைச்

சொல்ல முடியும்

 

தோல்வி அடைந்தவரிடம்

என்ன குறை இருந்தது

என்பதைச்

சொல்ல முடியும்

 

வேடிக்கை பார்ப்பவர்களால்

சொல்ல முடியாது

வேடிக்கை பார்ப்பவர்கள்

சொன்னால்

அது விமர்சனமாக

இருக்குமேயொழிய

உண்மையானதாக இருக்காது

 

அஸ்வத்தாமா

அர்ஜுனனிடம்

சண்டையிட்டவன் நீ தான்

 

அர்ஜுனன் ஏன் தோற்றான்

நீ எப்படி வெற்றி

பெற்றாய் என்பதை

நீ தான் சொல்ல வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment