February 19, 2023

ஜபம்-பதிவு-935 மரணமற்ற அஸ்வத்தாமன்-67 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-935

மரணமற்ற

அஸ்வத்தாமன்-67

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :

உயிரினங்கள் மீது

அன்பைக் காட்டினால்

அவைகள் நம்முடன்

நட்பாகி நாம் என்ன

சொல்கிறோமோ

அதன்படி கேட்டு நடக்கும்

 

ஆணவத்தைக் காட்டி

அடிமைப்படுத்த

முயன்றால்

உயிரினங்கள்

நம்மை எதிர்க்கும்

 

அர்ஜுனன் குதிரையை

அன்பைக் காட்டி

நட்பாக்கி தன்

சொற்படி கேட்டு

நடக்க வைக்க வேண்டும்

என்று நினைக்கவில்லை

குதிரையின் மீது

ஆணவத்தைக் காட்டி

அதை அடிமையாக்க

நினைத்தான்

அதனால் குதிரை

அவனை எதிர்த்தது

 

தன்னை சிறந்த

திறமைசாலி என்றும்

விற்போரில் தன்னை

வெல்ல இந்த

உலகத்தில் யாரும்

இல்லை என்றும்

அர்ஜுனன் தன்னை

நினைத்துக் கொண்டு

இருக்கின்ற காரணத்தினால்

அவன் கண்ணை

மறைத்துக் கொண்டு

இருக்கும் ஆணவம்

அவனை யோசிக்காமல்

இருக்கும்படிச்

செய்து விட்டது

இதனால்,

உயிரினங்களின் மீது

அன்பு காட்டி

நட்பாக்கினால் மட்டுமே

உயிரினங்கள் நம்

சொற்படி கேட்கும்

என்ற சிந்தனை

அவனுக்கு தோன்றாமல்

போய் விட்டது

அதனால் தான்,

அவன் குதிரையின்

மீது தன்னுடைய

ஆணவத்தைக் காட்டி

அந்தக் குதிரையை

தனக்கு அடிமையாக்க

நினைத்தான்

அதனால் தான்,

அந்தக் குதிரை

அவனை எதிர்த்தது

 

நான் என்னுடைய

அன்பைக் காட்டி

குதிரையை நட்பாக்கி

என்னுடைய சொல்படி

கேட்டு நடக்க வைக்க

வேண்டும்

என்று நினைத்தேன்

அதனால்,

குதிரையிடம்

நாம் இருவரும்

நண்பர்கள் என்றேன்

என்னுடைய உணர்வுகளை

வெளிப்படுத்தினேன்

என்னுடைய அன்பை

புரிந்து கொள்ளும்படி

பேசினேன்

நண்பர்களாக இருப்பவர்கள்

தங்கள் அன்பை

பரிமாறிக் கொள்ள

வேண்டும் என்றேன்

 

குதிரை என்னுடைய

அன்பை புரிந்து கொண்டது

என்னுடைய நட்பை

ஏற்றுக் கொண்டது

குதிரை தன் மேல்

என்னை அமர விட்டது

என்னை சுமந்தது

மைதானத்தை

சுற்றி வந்தது

 

அன்பைக் காட்டி

குதிரையை நட்பாக்கிய

காரணத்தால் குதிரை

என் சொல்படி கேட்டது

ஆனால் அர்ஜுனன்

ஆணவத்தைக் காட்டி

குதிரையை

அடிமையாக்க முயன்றான்

அதனால்

குதிரை அவனை

ஏற்றுக் கொள்ளவில்லை

அவனை காலால்

எட்டி உதைத்து

மண்ணில் விழ வைத்தது

மண்ணைக் கவ்வ வைத்தது

 

அன்பைக்காட்டி

குதிரையை நான்

நட்பாக்கிய காரணத்தால்

நான் வெற்றி பெற்றேன்

ஆவணத்தைக் காட்டி

குதிரையை

அடிமையாக்க முயன்ற

காரணத்தால் அர்ஜுனன்

தோல்வி அடைந்தான்

 

உயிரினங்களிடம் அன்பைக்

காட்டினால் மட்டுமே

நம்முடன் நட்பாகி

நம் சொற்படி கேட்கும்

உயிரினங்களிடம்

ஆவணத்தைக் காட்டி

அடிமையாக்க

முயற்சி செய்தால்

அவைகள் எதிர்க்கத்

தான் செய்யும்

 

அர்ஜுனன் தோற்றதற்கும்

நான் வெற்றி பெற்றதற்கும்

இது தான் காரணம்

 

அஸ்வத்தாமன்

பேசி முடித்ததும்

துரியோதனனின் தம்பிகள்

அனைவரும்

ஒன்றாகச் சேர்ந்து

அஸ்வத்தாமனை தோள்

மேல் தூக்கி

வைத்துக் கொண்டு

அஸ்வத்தாமன் வாழ்க

அர்ஜுனன் ஒழிக என்ற

கோஷத்தை

எழுப்பிய படியே

வகுப்பை விட்டு சென்று

கொண்டிருந்தனர்

 

துரியோதனன் அவர்கள்

முன்னால் நடந்து சென்று

கொண்டிருந்தான்

 

துரோணர் எழுந்து நின்றார்

அவர் அருகில்

அர்ஜுனன் உட்பட

பாண்டவர்கள் ஐவரும்

தலை குனிந்தபடி

நின்று கொண்டு இருந்தனர்

 

அஸ்வத்தாமனின்

வெற்றிப் பயணம்

ஆரம்பமாகி விட்டது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment