February 19, 2023

ஜபம்-பதிவு-927- மரணமற்ற அஸ்வத்தாமன்-59 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-927-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-59

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அதனால் தான்

பாண்டவர்களை

சிறந்த அடிமைகள்

என்கிறேன்

 

அதனால் தான்

அந்த அடிமைகளான

பாண்டவர்களை இந்த

உலகத்திற்குப்

பிடித்து இருக்கிறது

 

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

பெரும்பாலானவர்கள் 

அடிமைகளே

 

அடிமைகளுக்கு

அடிமைகளை

பிடிப்பதில்

வியப்பில்லையே

 

ஆனால் நான்

பாண்டவர்களைப்

போல கிடையாது

அவர்களைப் போல்

நான் அடிமை

கிடையாது

 

பீஷ்மர் விதுர்

கிருபர் உட்பட

யார் தவறான

விஷயத்தைச் சொன்னாலும்

தவாறாகச்

சொல்கிறீர்களே என்று

எதிர்த்துப் பேசுவேன்

 

ஏன் தவறாகச்

சொல்கிறீர்கள் என்று

கேள்வி கேட்பேன்

 

தவறாகச் சொன்னதை

சரி தான் என்று

நியாயப்படுத்தி

தலையாட்ட

மாட்டேன்

 

எனக்கு அறிவு

இருக்கின்ற

காரணத்தினால்

தவறை பின்

பற்றி நடக்க

மாட்டேன்

 

நான் அடிமையாக

இருக்க மாட்டேன்

அதனால் என்னை

இந்த உலகத்திற்கு

பிடிப்பதில்லை

 

இந்த உலகத்தில்

உள்ள அடிமைகளுக்கு

அடிமைகளைத்

தான் பிடிக்கும்

அதனால்

அவர்களுக்கு

பாண்டவர்களைப்

பிடித்து இருக்கிறது

என்னை

பிடிக்காமல் இருக்கிறது

அவ்வளவு தான்

 

அஸ்வத்தாமன் :

இந்த உலகம்

உன்னை

நாட்டுக்காக

ஆசைப்படுவன்

என்கிறதே

 

துரியோதனன் :

உண்மை தான்

நாட்டுக்காக

ஆசைப்படுபவன் தான்

என்னுடைய

நாட்டுக்காக நான்

ஆசைப்படுகிறேன்

அது தவறா

 

அஸ்வத்தாமன் :

உன்னுடைய நாடா

 

துரியோதனன் :

ஆமாம்

என்னுடைய

நாடு தான்

அஸ்தினாபுரம்

என்னுடைய

நாடு தான்

 

அஸ்வத்தாமன் :

அஸ்தினாபுரம் எப்படி

உன்னுடைய நாடாகும்

 

துரியோதனன் :

அஸ்தினாபுரத்தின்

அரியணை இந்த

துரியோதனனுக்கு

உரியது தான்

 

அதை இந்த

பாண்டவர்கள்

என்று தங்களை

சொல்லிக்

கொள்பவர்கள்

அபகரிக்க

முயல்கிறார்கள்

அதற்காக

நல்லவர்கள் போல்

வேடம் போடுகிறார்கள்

 

பீஷ்மர் கிருபர்

விதுரர் ஆகியோர்

அவர்களுக்கு

துணையாக

இருக்கின்றனர்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment