May 20, 2022

ஜபம்-பதிவு-757 (சாவேயில்லாத சிகண்டி-91)

 ஜபம்-பதிவு-757

(சாவேயில்லாத

சிகண்டி-91)

 

நீ செய்ய

நினைக்கும்

இந்த செயல்

கடவுளின்

அவதாரமாகக் கருதப்படும்

பரசுராமருக்கு

களங்கத்தை

ஏற்படுத்தும் வகையில்

அமைந்து விடும்

 

பரசுராமருக்கு

களங்கத்தை

ஏற்படுத்தும் எந்த

ஒரு செயலையும்

செய்யாதே

 

பரசுராமர் மேல்

செலுத்திய

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

திரும்ப

அழைத்துக் கொள்

 

திரும்ப

அழைத்துக் கொள்

பீஷ்மா

திரும்ப

அழைத்துக் கொள்

 

(நாரதர் இவ்வாறு

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போது

பீஷ்மர் அங்கே

நின்று கொண்டிருந்த

அந்த எட்டு

பிராமணர்களை

பார்க்கிறார்

அந்த எட்டு

பிராமணர்களும்
ஒன்றாகச் சேர்ந்து

பீஷ்மா

நாரதர்

சொல்படியே செய்வாயாக

அதுவே உனக்கும்

இந்த உலகத்துக்கும்

நன்மையாகும்

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

திரும்ப

அழைத்துக் கொள்

என்று

சொன்னவுடன் பீஷ்மர்

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

திருப்பி

வரவழைக்கும்

மந்திரத்தைச்சொல்லி

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை திரும்ப

அழைக்கிறார்

 

பிரஸ்வாபம் அஸ்திரம்

பீஷ்மரின் வலது

கையில் வந்து

அமர்கிறது

 

மந்திரம் சொல்கிறார்

பிரஸ்வாபம் அஸ்திரம்

கையில் இருந்து

மறைந்து விடுகிறது)

 

போர்க்களத்தில்

தன்னைத் தூங்க

வைத்து வெற்றி

பெற வேண்டும்

என்பதற்காக

பீஷ்மன் தன்

மீது பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

செலுத்தினார்

என்பதைத் தெரிந்து

கொண்ட பரசுராமர்

பீஷ்மரைப் பார்த்து

பேசத் தொடங்கினார்)

 

பரசுராமர் :

பீஷ்மா

போதும் நிறுத்து

 

தனக்கு எதிரியாக

வருபவர் யாராக

இருந்தாலும்

போரில்

அவரைக் கொன்று

வெற்றி பெறுபவன்

தான் வீரன்

 

போரில் என்னைக்

கொல்ல மாட்டேன்

என்று

சொல்லி விட்டு

என்னுடன்

போரிட்டது

இப்படி சூழ்ச்சி

செய்து

என்னை வீழ்த்தி

வெற்றி பெற

வேண்டும் என்ற

காரணத்திற்காகத் தானா

 

என்னைத்

தூங்க வைத்து

வெற்றி பெற

வேண்டும் என்பதற்காக

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

எப்போது என் மீது

செலுத்தினாயோ

அப்போதே நீ

ஒரு வீரனல்ல

ஒரு கோழை

என்பதை

நிரூபித்து விட்டாய்

 

இவ்வளவு நாள்

நான் ஒரு

வீரனுடன் தான்

போரிடுகிறேன் என்று

நினைத்து போரிட்டேன்

ஆனால்

இப்போது தான்

தெரிகிறது

நீ ஒரு

கோழை என்று

ஒரு கோழையுடன்

போரிட்டதை

நினைத்து நான்

வெட்கப்படுகிறேன்

 

என்னுடன் போரிட்ட

அனைத்து

ஷத்திரியர்களும்

என்னைக் கொன்று

வெற்றி பெற

வேண்டும் என்ற

எண்ணத்தில் தான்

போரிட்டார்களே தவிர

உன்னைப் போல்

சூழ்ச்சி செய்து

வெற்றி பெற

வேண்டும் என்று

என்ற எண்ணத்தில்

யாரும் இதுவரை

என்னுடன்

போரிட்டதில்லை

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment