May 20, 2022

ஜபம்-பதிவு-760 (சாவேயில்லாத சிகண்டி-94)

 ஜபம்-பதிவு-760

(சாவேயில்லாத

சிகண்டி-94)

 

காலம் தரும்

தீர்ப்புக்கு முன்னால்

பீஷ்மன் தன்னுடைய

சாவை தடுக்க

முடியாது

 

காலத்தின்

கணக்கை

யாராலும்

மாற்ற முடியாது

 

பீஷ்மனின்

சாவை காலத்தின்

கணக்கிற்கு

விட்டு விடுவோம்

 

பீஷ்மனின்

அழிவிற்காகக்

காத்திருக்கிறேன்

அவனுடைய

சாவைப்

பார்ப்பதற்காகக்

காத்திருக்கிறேன்

 

பீஷ்மனை

நான் பார்த்துக்

கொள்கிறேன்

 

நீங்கள் மனதில்

சஞ்சலம் கொள்ளாமல்

எடுத்த காரியத்தை

முடித்தேன்

என்ற மன

திருப்தியுடன்

செல்லுங்கள்

 

(என்று

சொல்லி விட்டு

அம்பை பரசுராமரின்

காலில் விழுந்தாள்)

 

அம்பை :

பரசுராமரே

என்னை

ஆசிர்வதியுங்கள்

 

பரசுராமர் :

அம்பையே

எந்த ஒரு

பிரச்சினை வந்தாலும்

அதை எதிர்த்து

நின்று நீ

வெற்றி பெறுவாய்

 

நீ கொண்ட

கொள்கை

வெற்றி பெற

கடவுள் உனக்கு

துணை புரியட்டும்

 

(என்று சொல்லி

விட்டு தவ

வாழ்க்கை

மேற்கொள்வதற்காக

முதல் பாதை

வழியாக

பரசுராமர் காட்டை

நோக்கி செல்லத்

தொடங்கினார்

 

இரண்டாவது

பாதை வழியாக

பீஷ்மரைக்

கொன்றே ஆக

வேண்டும் என்ற

கொள்கையுடன்

அம்பை நடக்கத்

தொடங்கினாள்

 

மூன்றாவது

பாதை வழியாக

பீஷ்மர்

தேரில் ஏறி

அஸ்தினாபுரம்

நோக்கி செல்லத்

தொடங்கினார்.

 

மூன்று

வெவ்வேறு

பாதைகளில்

பயணம் செய்து

கொண்டிருப்பவர்களுடைய

பயணத்தின் முடிவைத்

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

அம்பையைப்

பின்தொடர்ந்து

அம்பையின்

பாதை வழியே

சென்றாலே போதும்

பயணத்தின்

முடிவைத் தெரிந்து

கொள்ளலாம்

 

அம்பையைப்

பின்தொடர்வோம்

பயணத்தின்

முடிவைத் தெரிந்து

கொள்வோம்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

1 comment:

  1. I would like to get in contact with you. What's your email address?

    ReplyDelete