June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-50


              ஜபம்-பதிவு-542
        (அறிய வேண்டியவை-50)

கிருஷ்ணன் :
“பரிட்சித்
இறந்து
உயிர்ப்
பெற்று
இருக்கிறான்;
இறந்து
உயிர்த்தெழுந்திருக்கிறான்
இறப்பை
வென்று
வந்திருக்கிறான்
இறப்பு
கூட
பரிட்சித்திடம்
தோற்று
விட்டது
இறப்பை
வென்று
உயிர்த்தெழுந்து
வந்த
பரிட்சித்
கிருபரிடம்
விற்பயிற்சி
பெற்று
அறுபது
ஆண்டுகள்
இந்த
உலகத்தை
ஆளுவான்
பாண்டவர்களின்
புகழை
நிலை
நாட்டுவான்
தர்மத்தை
நிலை
நாட்டுவான்
மக்களை
நல்வழியில்
வழி
நடத்துவான்
பரிட்சித்தால்
பாண்டவர்கள்
புகழ்
மேலும்
ஓங்கும்”

(என்று
பரிட்சித்தை
ஆசிர்வதித்தார்
கிருஷ்ணன்)

இந்தக்
கதையின்
மூலம்
நாம்
தெரிந்து
கொள்ள
வேண்டிய
உண்மை
என்னவென்றால்
வித்தையைப்
பயன்படுத்தி
ஒன்றைச்
செலுத்தத்
தெரிந்தவனுக்கு
அதை
திரும்ப
அழைக்கும்
வழி
தெரிந்திருக்க
வேண்டும்
தெரியாமல்
அதை
பயன்படுத்தக்
கூடாது
அப்படி
பயன்
படுத்தினால்
அது
நம்முடைய
அழிவிற்கே
காரணம்
ஆகிவிடும்”

“பிரம்மாஸ்திரத்தை
செலுத்தத்
தெரிந்த
அஸ்வத்தாமனுக்கு
அதை
திரும்ப
அழைக்கும்
வித்தை
தெரியவில்லை
அதனால்
ஏற்பட்ட
பாவத்தால்
தான்
இன்றும்
கூட
அஸ்வத்தாமன்
நிம்மதி
இல்லாமல்
அலைந்து
கொண்டிருக்கிறான் “

“இந்த
அண்ட
சராசரங்களின்
கடைசி
நாள்
வரை
நிம்மதி
இல்லாமல்
அலையக்கூடிய
நிலை
அஸ்வத்தாமனுக்கு
ஏற்பட்டு
இருக்கிறது
என்பதை
நாம்
தெரிந்து
கொள்ள
வேண்டும்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment