May 01, 2021

பதிவு-10-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-10-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

அதாவது நமக்கு

துன்பம் வந்தால்

வேதனை இருக்கத்

தான் செய்யும்

கஷ்டம் இருக்கத்

தான் செய்யும்

மனவருத்தம்

இருக்கத் தான்

செய்யும்

ஆனாலும்

துன்பம் வரும் போது

நாம் யோசிக்க

வேண்டும்

வந்த இந்த

துன்பத்தால் நம்முடைய

பாவப்பதிவுகளில்

ஒன்றோ அல்லது

பலவோ கழிகிறது

என்பதையும்,

பாவப்பதிவுகள்

கழிவதன் மூலம்

நம்முடைய ஆன்மா

தூய்மையடைகிறது

என்பதையும்

முக்தியை நோக்கி

சென்று

கொண்டிருக்கிறோம்

என்பதையும்

இறவா நிலையையும்

பிறவா நிலையையும்

அடையப் போகிறோம்

என்பதையும்

நாம் நினைத்துப்

பார்க்க வேண்டும்

 

அவ்வாறு நினைத்துப்

பார்த்தோமேயானால்

துன்பம் வரும் போது

கஷ்டப்பட்ட நாம்

அதனுடைய பலன்

என்ன என்று

தெரியும் போது நாம்

மகிழ்ச்சியடைவோம்

எனவே,

நமக்கு துன்பம்

வரும் போது

நம்முடைய

பாவப்பதிவுகளில்

ஒன்று கழிகிறது என்று

எடுத்துக் கொண்டால்

நாம் மகிழ்ச்சி

அடைவோம்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

இடுக்கண் வருங்கால்

நகுக அதனை

அடுத்தூர்வது

அஃதொப்பது இல்

 

என்ற

திருக்குறளின் மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

--------சுபம்

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment