May 01, 2021

பதிவு-9-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-9-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

ஒருவர் கஷ்டப்படாமல்

நன்றாக இருக்கிறார்

வீடு குடும்பம்

வேலை குழந்தை

என்று நன்றாக

இருக்கிறார் என்றால்

அவருடைய

புண்ணியப்பதிவுகள்

கழிந்து

கொண்டிருக்கிறது

என்று பொருள்

 

புண்ணியத்தின்

பலனால் தான்

நாம் இப்படி

இருக்கிறோம் என்று

நினைக்கக் கூடாது

புண்ணியத்தின்

பலன் கழிந்து

கொண்டிருக்கிறது

என்று நினைக்க

வேண்டும்

நாம் நன்றாக

இருக்கிறோம் என்பதற்காக

நாம் எந்தவிதமான

புண்ணியத்தைத்

தரக்கூடிய செயல்கள்

எதுவும் செய்யாமல்

இருந்தால் 

நம்முடைய

புண்ணியப் பதிவுகள்

அனைத்தும் கழிந்து

பாவப்பதிவுகள்

மட்டுமே

எஞ்சி நிற்கும்

அப்புறம் நாம்

வீடு இழந்து

குடும்பத்தை இழந்து

குழந்தைகளை இழந்து

சொத்தை இழந்து

கஷ்டப்பட

வேண்டியது தான்

அதாவது

பாவப்பதிவுகளை

அனுபவிக்க வேண்டிய

நிலை வரும் போது

இத்தகைய

நிலைகள் தான் வரும்.

 

புண்ணியத்தின் பலனாக

நல்ல வாழ்க்கை

கிடைத்து அப்போது

பாவத்தை தரக்கூடிய

செயல்களைச் செய்து

கொண்டிருந்தால்

புண்ணியத்தின் பலன்

முடிந்து பாவத்தின்

பலன் ஆரம்பிக்கும்

போது அவர் மிகுந்த

துன்பத்திற்கு உள்ளாவர்

அந்த சமயத்தில் தான்

உயிர் போவது

அனைத்தையும் இழந்து

நடுரோட்டிற்கு செல்வது

அனாதையாக இந்த

உலகம் தனியே

தவிக்க விட்டு

விட்டுச் செல்வது

அவமானங்கள்

அசிங்கங்கள்

இழப்புகள் ஏற்படுவது

ஆகியவை உண்டாகும்

 

ஆகவே புண்ணியத்தின்

பலனாக நாம்

நன்றாக இருக்கும் போது

யாருக்கும் எந்தவிதமான

கெடுதலையும் செய்யாமல்

எந்த ஒரு

குடும்பத்தையும்

அழிக்காமல்

யாருடைய

மனதையும் புண்படுத்தாமல்

பிறருடைய மனம்

வருத்தப்படும்படி

நடந்து கொள்ளாமல்

பாவப்பதிவுகளை

உண்டாக்கிக் கொள்ளாமல்

புண்ணியத்தைத்

தரக்கூடிய செயல்களை

மட்டும் செய்து வந்தால்

புண்ணியத்தின்

பதிவுகள் கழிய கழிய

நாம் தொடர்ந்து

செய்து வரும்

நல்ல செயல்களால்

உண்டாகும்

நல்ல விளைவானது

புண்ணியத்தை

அளித்து

புண்ணியத்தின் பலன்

நம்மை காக்கும் என்பதை

நாம் நினைவில்

கொள்ள வேண்டும்

 

புண்ணியப் பதிவுகளால்

உண்டாகும் பலன்கள்

இனிமையாக இருக்கும்

அதனால் யாரும்

அதனை பெரிதாக

எடுத்துக் கொள்வதில்லை

 

ஆனால் பாவப்பதிவுகளால்

உண்டாகும் பலன்கள்

மிகவும்

கொடுமையாக இருக்கும்

கஷ்டமானதாக இருக்கும்

வலியைத்

தரக்கூடியதாக இருக்கும்

வேதனையை

அளிக்கக்கூடியதாக

இருக்கும்

எனவே

கஷ்டம் வந்தால்

அனைவரும்

வருத்தப்படுகிறோம்

 

கஷ்டம் வந்தால்

நாம் செய்த பாவத்தால்

வந்த கஷ்டத்தை

அனுபவிக்கிறோம்

என்று எடுத்துக்

கொள்ளக்கூடாது

கஷ்டம் வந்தால்

பாவப்பதிவுகளில்

ஒன்று கழிகிறது

என்று கணக்கில்

எடுத்துக் கொள்ள

வேண்டும்

பாவப்பதிவுகள்

கழிவதால்

நம்முடைய ஆன்மா

தூய்மை பெறுகிறது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

நம்முடைய

ஆன்மா முக்தி

என்ற மோட்ச

நிலையை அடைந்து

கொண்டிருக்கிறது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

நமக்கு கஷ்டம்

வந்தால் இத்தகைய

நிகழ்வுகள்

அனைத்தும் நடந்து

கொண்டிருக்கிறது

என்பதை நினைத்து

நாம் மகிழ்ச்சி

அடைய வேண்டும்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment