May 01, 2021

பதிவு-8-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-8-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

ஆனால்

புண்ணியப் பதிவுகளை

உண்டாக்கும்

நல்ல செயல்களை

நாம் தொடர்ந்து

செய்து கொண்டிருக்க

முடியாது. புண்ணியப்

பதிவுகளை உண்டாக்கும்

செயல்களை நாம்

நிறுத்தினாலோ அல்லது

நம்மால்

புண்ணியப் பதிவுகளை

உண்டாக்கும் செயல்களை

செய்ய முடியாமல்

போனாலோ

பாவப்பதிவுகள் எழுந்து

தன்னுடைய பலன்களை

கொடுக்க

ஆரம்பித்து விடும்.

 

இதனால்

மேல் பதிவின் மூலம்

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை முழுவதுமாக

கழிக்க முடியாது.

 

அடியோடு அழித்தல்

மனிதனுடைய ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாக்களை

முழுவதுமாக கழிப்பதற்கு

சித்தவித்தை எனப்படும்

வாசியோகத்தால்

தான் முடியும்

 

வாசியோகத்தைப்

பயன்படுத்தித் தான்

மனிதனுடைய ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாக்களைக்

கழிக்க முடியும்

 

இவ்வாறு மனிதன்

தன்னுடைய செயல்களின்

மூலம் தானாகவே

முயற்சி செய்தால்

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை கழிக்கலாம்

 

மனிதன் தன்னுடைய

வாழ்க்கையில்

துன்பத்தால் ;

கஷ்டத்தால் ;

சோகத்தால் ;

கவலையால் ;

வேதனையால் ;

அவதியுற்றால்

செய்த பாவத்திற்குரிய

பலனை அனுபவிக்கிறான்

என்கிறோம்

 

இந்த உலகத்தில் வாழும்

மனிதனுடைய

வாழ்க்கையில்

துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப் பதிவுகளுக்குரிய

பலன்களை

அனுபவிக்கிறான் என்று

இந்த உலகத்தில் உள்ள

பெரும்பான்மையான

மக்களால்

சொல்லப்பட்டு வருகிறது ;

ஆனால் இந்த கருத்து

உண்மையாதல்ல ;

தவறான கருத்தாகும் ;

 

இந்த உலகத்தில்

வாழும் மனிதனுடைய

வாழ்க்கையில்

துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த மனிதனின்

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப் பதிவுகளில்

ஒன்று கழிகிறது

என்று பொருள்.

அதாவது

ஒரு மனிதனுடைய

வாழ்க்கையில்

துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப்பதிவுகளுக்குரிய

பலன்களை

அனுபவிக்கிறான்

என்று பொருள்

எடுத்துக் கொள்ளக்கூடாது ;

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப்பதிவுகளுக்குரிய

பலன்களில்

ஒன்று கழிகிறது

என்று பொருள்

எடுத்துக்

கொள்ள வேண்டும்.

 

நம்முடைய வாழ்க்கையில்

ஒரு க‌ஷ்டம் வந்தால்

பாவத்தால் வந்த

பலன் கிடையாது

பாவப்பதிவு ஒன்று

கழிகிறது என்று பொருள்

 

அதைப் போல்

நம்முடைய வாழ்க்கையில்

இன்பம் வந்தால்

புண்ணியத்தில் ஒரு

பலன் கழிகிறது

என்று பொருள்

 

பாவப்பதிவுகள் எப்படி

கழிகிறதோ அவ்வாறே

புண்ணியப் பதிவுகளும்

கழிகிறது என்பதை

நாம் நினைவில்

கொள்ள வேண்டும்

 

நிறைய பேர்

சொல்வார்கள் நான்

கஷ்டப்படுகிறேன் பாவம்

செய்திருக்கிறேன் என்று

அப்படி என்றால்

அவர் செய்த

புண்ணியம் என்ன ஆனது

புண்ணியத்தை யாரும்

கணக்கில் எடுத்துக்

கொள்வதில்லை

 

நாம் நன்றாக

இருக்கிறோம் என்றால்

புண்ணியம்

செய்திருக்கிறோம்

என்று பொருள்

நாம் கஷ்டப் படுகிறோம்

என்றால் பாவம்

செய்திருக்கிறோம்

என்று பொருள்

 

ஒருவர் தன்

வாழ்நாளில்

கஷ்டப்பட்டுக் கொண்டு

மட்டும் இருக்க முடியாது

இன்பமாகவும் இருப்பார்

 

இன்பமும் துன்பமும்

கலந்துதான் வாழ்க்கை

அதாவது பாவப்பதிவுகளும்

புண்ணியப்பதிவுகளும்

சேர்ந்தது தான் வாழ்க்கை

 

பாவப் பதிவுகளுக்காக

கஷ்டத்தை

அனுபவிக்கிறோம்

என்றால்

புண்ணியப் பதிவுகளுக்காக

நாம் இன்பத்தை

அனுபவிக்கிறோம்

என்பதை நாம்

நினைவில்

கொள்ள வேண்டும்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment