May 01, 2021

பதிவு-2-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-2-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

இந்தத் திருக்குறளின்

உண்மையான

அர்த்தத்தை நாம்

சரியாக புரிந்துகொண்டு

இருந்திருந்தால்

திருவள்ளுவர் எழுதிய

இந்தத் திருக்குறளை

தவறான திருக்குறள்

என்று நாம் சொல்லி

இருக்க மாட்டோம்.

 

இந்தத் திருக்குறளின்

அர்த்தத்தை

புரிந்து கொள்ள

முடியாதவர்கள் தான்

இந்த திருக்குறளை

தவறான திருக்குறள்

என்று சொல்வார்கள்.

 

தெய்வப் புலவர்

என்று புகழப்படும்

திருவள்ளுவரால்

இயற்றப்பட்டட

திருக்குறளின்

இந்தபாடல் எப்படி

தவறாக இருக்கும்

தவறாகவே இருக்காது

என்பதை உணர்ந்து

இந்த திருக்குறளின்

அர்த்தத்தை

தொடர்ந்து பார்ப்போம்.

 

எந்த ஒரு

செயலைச் செய்தாலும்

செய்த செயலுக்குரிய

விளைவினால்

உண்டாகும் பலனானது

செயலைச் செய்தவருக்கு

கண்டிப்பாக உண்டு

செயலைச் செய்து

விட்டு அதனுடைய

விளைவினால்

உண்டாகும்

பலனிலிருந்து

செயலைச் செய்தவர்

தப்பிக்கவே முடியாது

செய்த செயலுக்குரிய

விளைவினால்

உண்டாகும் பலனை

ஒவ்வொருவரும்

கண்டிப்பாக

அனுபவித்துத் தான்

ஆக வேண்டும்.

 

செய்த செயலைப்

பொறுத்து

பாவமும் புண்ணியமும்

உண்டாவதில்லை ;

செய்த செயலின்

விளைவைப் பொறுத்தான்

பாவமும் புண்ணியமும்

உண்டாகிறது ;

அதாவது, ஒரு

மனிதன் செய்யும்

செயலின் விளைவைப்

பொறுத்துத் தான்

பாவமும்

புண்ணியமும்

உண்டாகிறது.

 

நிகழ்வு-1

 

விவசாயி

ஒருவரின் நிலத்தை

நம்முடைய

சுயநலத்திற்காக ;

நம்முடைய

சுகபோகங்களுக்காக ;

நம்முடைய

சந்தோஷத்திற்காக ;

நாம் ஏமாற்றி

அபகரித்து வைத்துக்

கொள்கிறோம்.

 

இதனால்

அந்த நிலத்தை

நம்பி வாழ்க்கையை

ஓட்டிக் கொண்டிருந்த

அந்த விவசாயி,

விவசாயினுடைய

மனைவி

மற்றும்

விவசாயினுடைய

குழந்தைகள்

அனைவரும்

மிகவும் கஷ்டமான

சூழ்நிலைக்கு

தள்ளப்படுகின்றனர் ;

வேதனைக்கு

உட்படுகின்றனர் ;

சாப்பாட்டுக்கு

இல்லாமல்

பசியால் வாடுகின்றனர் ;

ஏழ்மையில்

திண்டாடுகின்றனர் ;

வறுமையில்

மூழ்குகின்றனர் ;

கவலைக்கு

ஆட்படுகின்றனர் ;

 

இந்த நிகழ்வில்

நாம் செய்த

செயலானது ஏழை

விவசாயினுடைய

நிலத்தை அபகரித்தது ;

இதனால் உண்டான

விளைவானது

நன்மையை

உண்டாக்கவில்லை ;

தீமையை

உண்டாக்கியிருக்கிறது ;

அதாவது

விவசாயி

மற்றும்

விவசாயினுடைய

குடும்பத்தை

வறுமையில்

தள்ளி கஷ்டப்பட

வைத்திருக்கிறது.

 

ஏழை விவசாயினுடைய

நிலத்தை அபகரித்த

நம்முடைய

செயலினால்

பாவம் என்பது

உண்டாகவில்லை ;

ஏழை

விவசாயினுடைய

நிலத்தை

அபகரித்ததினால்

உண்டான

விளைவினால்

அதாவது

ஏழை விவசாயி

மற்றும்

விவசாயினுடைய

குடும்பம்

வறுமையில்

தள்ளப்பட்டு

அவதியுற்றதால்

நமக்கு

பாவம்

என்பது ஏற்பட்டது .

நாம் செய்த

செயலின்

விளைவினால் தான்

பாவம் என்பது

உண்டானதே ஒழிய

நாம் செய்த

செயலைப் பொறுத்து

பாவம் என்பது

உண்டாகவில்லை.

 

அதாவது செய்த

செயலுக்குரிய

விளைவானது

தீமையைத் தருகிறது ;

தீமையைத் தருவதாக

அமைகிறது.

 

செய்த செயலுக்குரிய

விளைவானது

தீய விளைவாக

இருப்பதால்

அந்த செயலைச்

செய்தவருக்கு

பாவம் என்பது

கிடைக்கும்

பாவப் பதிவுகள்

பதியும்.

 

நிகழ்வு-2:

 

விவசாயத்தை

மட்டுமே நம்பி

வாழ்க்கையை

ஓட்டிக் கொண்டு

தன்னையும்

தன்னுடைய

குடும்பத்தையும்

காப்பாற்றிக் 

கொண்டிருந்த

ஏழை விவசாயி

ஒருவனுடைய

நிலத்தை

பணக்காரன் ஒருவன்

நிலத்தை ஏமாற்றி

அபகரித்து வாங்கி

வைத்துக் கொண்டான்.

 

பணக்காரன் அபகரித்து

வாங்கி வைத்திருந்த

ஏழை

விவசாயினுடைய

நிலத்தை - நாம்

பணக்காரனிடமிருந்து

அபகரித்து மீண்டும்

அந்த ஏழை

விவசாயியிடமே

திருப்பி

கொடுக்கிறோம்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment