February 04, 2022

பதிவு-12-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-12-செயற்கரிய-

திருக்குறள்

 

ஜீலம்

நதிக்கரையில்

அந்தக்

குதிரையைப்

புதைத்து

அந்த இடத்தில்

நகர் ஒன்றை

அமைக்கிறான்

அலெக்சாண்டர்

அதற்குத் தன்

அருமைக்

குதிரையின்

நினைவாக

பியூசிபேலியா

என்று

பெயரிடுகிறான்

 

அலெக்சாண்டர்

தன்னுடைய தாய்

ஒலிம்பியஸ் பார்க்க

அவர் அறை

செல்கிறான்.

அம்மா நான்

குதிரையை

அடக்கி விட்டேன்.

அப்பா பியூசிபேலஸ்

குதிரையை எனக்கு

வாங்கிக் கொடுத்தார்.

 

அப்பா என்னை

வீரன் என்றார்.

நான் வெற்றி

பெறுவதற்காகவே

பிறந்தவன் என்றார்

இந்த உலகத்தையே

வெல்லப்

போகிறேன் என்றார்

உன் வெற்றியின்

ஆரம்பம்

இங்கு தான்

தொடங்குகிறது

என்றார்.

 

இவ்வாறாக

அலெக்சாண்டர்

சொல்லிக் கொண்டு

இருக்கும் போதே

ஒரு தாயாக தன்

மகனின்

பெருமையை

நினைத்து

மகிழ்ச்சி

அடைந்து கொண்டே

இருந்ததால்

அலெக்சாண்டரின்

தாய் ஒலிம்பியஸ்

கண்களிலிருந்து

ஆனந்தக் கண்ணீர்

வழிந்து

கொண்டிருந்தது

அவள் வாயிலிருந்து

வார்தைகள்

வரவில்லை.

 

அந்த சமயம்

பார்த்து வெளியே

ஆரவாரம் கூச்சல்

கேட்கிறது

அலெக்சாண்டரைப்

பார்க்க வேண்டும்

என்று மக்கள்

கூடி இருந்தனர்.

குரல் கேட்டு

வெளியே வந்த

அலெக்சாண்டர்

மக்களைப் பார்த்து

கையை அசைக்கிறான்.

 

அலெக்சாண்டரைப்

பார்த்தவுடன் மக்கள்

அலெக்சாண்டர் வாழ்க

அலெக்சாண்டர் வாழ்க

என்று கைதட்டி

ஆரவாரம் செய்தனர் 

 

எங்களை வாழ

வைப்பீர்கள் என்ற

நம்பிக்கை

எங்களுக்குப்

பிறந்திருக்கிறது

 

எங்கள் வருங்காலம்

உங்களின் கைகளில்

இருக்கிறது

 

எங்களை நீங்கள்

பாதுகாப்பீர்கள்

எங்களை வாழ

வைப்பீர்கள்

என்ற நம்பிக்கை

எங்களுக்கு

பிறந்திருக்கிறது

 

எங்கள் நாடு

பாதுகாப்பாகவும்

அமைதியாகவும்

இருக்கும்

என்று நம்புகிறோம்

 

நாங்கள் அனைவரும்

உங்கள் பக்கம்

இருக்கிறோம்

உங்கள் வார்த்தைக்கு

கட்டுப்படுகிறோம்

நீங்கள் இடும்

கட்டளைகளை

ஏற்று நடக்கிறோம்.

 

நீங்கள் நீடூழி

வாழ வேண்டும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment