February 04, 2022

பதிவு-8-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-8-செயற்கரிய-

திருக்குறள்

 

குதிரையை

சூரியன் இருக்கும்

திசையில் நிற்க

வைத்து விட்டால்

அதன் நிழல்

தரையில் விழாது

அப்போது

குதிரை பயப்படாது

அதனால்

குதிரையை

சூரியன் இருக்கும்

திசைக்கு மாற்ற

வேண்டும்

என்று

குதிரையை

மெதுவாக

தடவிக் கொண்டே

அதன் காதுகளில்

கவலைப்படாதே

நான் உன்னை

ஒன்றும்

செய்ய மாட்டேன்

நான் உன்

நண்பன்

உன்னுடைய

நண்பனே உன்னை

பயமுறுத்துவானா

என்னைப்

பார்த்து

பயப்படாதே

நான் செய்வது

உன்னுடைய

நல்லதுக்குத் தான்

என்று

பேசிக் கொண்டே

குதிரையின்

கவனத்தைத்

திருப்பிக் கொண்டே

குதிரையை

சூரியன் இருக்கும்

திசையை

நோக்கி திருப்பினான்

அலெக்சாண்டர்

 

குதிரையின்

நிழல் மறைந்தது.

குதிரை

சாதாரண நிலைக்கு

வந்து விட்டது.

கொஞ்சம்

கொஞ்சமாக

அதன் அச்சம்

விலகுவதை

குதிரையின்

கண்களைப் பார்த்து

அலெக்சாண்டர்

தெரிந்து கொண்டான்

 

நீயும் வீரன்

நானும் வீரன்

இரண்டு பேருமே

இணையில்லாத

வீரர்கள்

யாருடனும்

ஒப்பிட முடியாத

வீரர்கள்

சாதனை

படைப்பதற்காகவே

பிறந்திருப்பவர்கள்

வரலாற்றை

உருவாக்குவதற்காகவே

வாழ்ந்து கொண்டு

இருப்பவர்கள்

 

இரண்டு பேரும்

ஒன்றாக இணைந்தால்

வரலாற்றைப்

படைத்து

காலத்தை

வென்று நிற்கலாம்

 

நாம் இருவரும்

ஒன்று சேர்ந்து

சாதனைகள்

பல படைக்கலாம்.

 

நான் சொல்வதைக்

கேட்டு நடந்தால்

நீ என்னுடனே

இருக்கலாம்.

நாம் இருவரும்

இணைபிரியாமல்

இருக்கலாம்.

எப்போதும்

ஒன்றாகவே

இருக்கலாம்.

நண்பர்களாக

இருக்கலாம்

 

நீயும் நானும்

ஒன்றாக சேர்ந்தால்

இந்த உலகத்தையே

வெல்லலாம்..

 

நான் உன்னை

என்னுடைய

நண்பனாக

ஏற்றுக் கொண்டேன்

நீ என்னை

நண்பனாக

ஏற்றுக் கொண்டால்

நான்

சொல்வதைக் கேள்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment