August 11, 2022

ஜபம்-பதிவு-850 (சாவேயில்லாத சிகண்டி-184)

 ஜபம்-பதிவு-850

(சாவேயில்லாத

சிகண்டி-184)

 

சிகண்டி :

உனக்கு தண்டனை

வழங்கவே

வந்திருக்கிறேன்

நீ செய்த

குற்றத்திற்கான

தண்டனையை

உனக்கு

வழங்குவதற்காகவே

வந்திருக்கிறேன்

குற்றவாளியான

உனக்கு தண்டனையை

வழங்குவதற்கு

வந்திருக்கிறேன்

 

ஒரு பெண்ணின்

வாழ்க்கை

பாதிக்கப்படுவதற்குக்

காரணமான

குற்றத்தைச்

செய்த குற்றவாளி நீ

 

நீ செய்த

குற்றத்திற்கான

தண்டனையைத் தான்

உனக்கு வழங்க

வந்திருக்கிறேன்

 

உனக்கு

தண்டனையை

வழங்க வந்தவன்

நான் என் கையில்

தான் ஆயுதம்

இருக்க வேண்டும்

 

தண்டனையைப்

பெறப் போகிறவன்  நீ

அதனால் நீ

நிராயுதபாணியாகத் தான்

இருக்க வேண்டும்

ஆயுதம்

ஏந்தாமல் தான்

இருக்க வேண்டும்

அமைதியாகத் தான்

இருக்க வேண்டும்

நான் வழங்கும்

தண்டனையை

ஏற்றுக்

கொள்வதற்குத்

தயாராகத் தான்

இருக்க வேண்டும்

 

நாளைய உலகம்

பீஷ்மன் என்ற

குற்றவாளிக்கு

தண்டனை

வழங்கினான் சிகண்டி

என்று தான் சொல்ல

வேண்டுமே தவிர

ஆயுதம் இல்லாமல்

நிராயுதபாணியாய்

நின்ற பீஷ்மனை

வீழ்த்தினான்

சிகண்டி என்று

சொல்லக் கூடாது

 

பீஷ்மர் :

உலகம் நீ சொன்னபடி

தான் சொல்லும்

என்று நினைக்கிறாயா

உலகம் அப்படி

சொல்லவே சொல்லாது

 

ஆயுதம் இல்லாமல்

நிராயுதபாணியாய்

நின்ற பீஷ்மனை

வீழ்த்தினான் சிகண்டி

என்று தான்

உலகம் சொல்லும்

 

உலகத்தைப் பற்றி

புரிந்து கொள்ளாமல்

பேசிக் கொண்டு

இருக்கிறாய்

உலகத்தைப் பற்றி

புரிந்து கொண்டு

இருந்தால் நீ

இவ்வாறு

பேசிக் கொண்டு

இருக்க மாட்டாய்

 

ஜென்மத்தைக்

கடந்து வந்தும்

இன்னும்

இந்த மனிதர்களின்

மனநிலையைப் புரிந்து

கொள்ளாமல் இருக்கிறாயே

 

இந்த மனிதர்கள்

தேவைப்பட்டால் தூக்கி

நிறுத்துவார்கள்

தேவையில்லை என்றால்

கழுத்தை அறுப்பார்கள்

 

சுயநலத்துக்காக

எதையும்

செய்யத் துணிவார்கள்

 

சொந்தமில்லாததை

சொந்தம் கொண்டாட

நினைப்பார்கள்

 

தான் வாழ்வதற்காக

பிறரை அழிக்கவும்

தயங்க மாட்டார்கள்

 

பாவம் என்று

தெரிந்தும் தெரிந்தே

பாவத்தை செய்வார்கள்

 

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருப்பவர்களுக்கு

இந்த உலகத்தில்

வாழ்வதற்கு

இடமே கிடையாது

 

நல்லவர்கள் இந்த

உலகத்தில்

வாழவே முடியாது

நல்லவர் போல்

நடிப்பவர்கள் மட்டுமே

இந்த உலகத்தில்

வாழ முடியும்

என்ற நிலையை

உருவாக்கி வைத்து

இருக்கிறார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment