August 11, 2022

ஜபம்-பதிவு-847 (சாவேயில்லாத சிகண்டி-181)

 ஜபம்-பதிவு-847

(சாவேயில்லாத

சிகண்டி-181)

 

நான் இருக்கிறேன்

என்பவர்களுக்கு

இருப்பவன் நான்

நான் இல்லை

என்பவர்களுக்கு

இல்லாதவன் நான்

என்னை

உணர்ந்தவர்களுக்கு

என்றும் இருப்பவன் நான்

 

பக்தர்களின்

தேவைகளை எல்லாம்

கொடுப்பவனல்ல

பக்தர்களின் தேவை

அறிந்து

கொண்டுப்பவன் நான்

 

எது எப்போது

எந்த காலத்தில்

எந்த நேரத்தில்

எந்த இடத்தில்

எந்த சூழ்நிலையில்

நடக்க வேண்டுமோ

அதை நடத்துபவன் நான்

 

எது நடக்க வேண்டும்

எது நடக்கக் கூடாது

 

எது முடிய வேண்டும்

எது முடியக் கூடாது

 

எது கிடைக்க வேண்டும்

எது கிடைக்கக் கூடாது

 

எது பிறக்க வேண்டும்

எது பிறக்கக் கூடாது

 

எது இருக்க வேண்டும்

எது இருக்கக் கூடாது

 

எது வாழ வேண்டும்

எது வாழக் கூடாது

 

என்பதை

நிர்ணயிப்பவன் நான்

 

காலத்தால்

கணிக்க முடியாத

குருக்ஷேத்திரப் போரை

நடத்திக்

கொண்டிருப்பவன் நான்

 

நிகழ வேண்டியது

தடுக்கப்படுமானால்

அது நிகழ்வதற்கு

கரம் கொடுப்பவன் நான்

 

மிகப்பெரிய நிகழ்வையே

நடத்தப் போகிறவன் நீ

உனக்கு கரம்

கொடுக்க மாட்டேனா

 

வெளிப்பட

வேண்டிய தர்மத்தை

வெளிப்பட விடாமால்

தடுப்பாக இருந்து

தடுத்துக் கொண்டிருப்பவரை

தகர்க்கப் போகிறவருக்கு

துணையாக

இருக்க மாட்டேனா

 

உடல் இயங்குவதற்கு

மூச்சுக் காற்றாக

இருக்கும் நான்

உலகமே நிம்மதி

பெருமூச்சு விடுவதற்கு

காரணமாக

இருக்கப் போகும்

உனக்கு

தேரோட்டியாக

இருக்க மாட்டேனா

 

மரணமற்றவனுக்கு

மரணத்தையே

பரிசாசத் தரப்

போகிறவனுக்கு

தேரோட்டியாக

இருக்க மாட்டேனா

 

சிகண்டியே

நாளை நடக்கப்போகும்

போரில்

இந்த கடவுளாகிய

கிருஷ்ணனே

உனக்கு தேரோட்டியாக

இருக்கப்போகிறான்

உலகத்திலேயே

சிறந்த வில் வீரனான

அர்ஜுனன் உனக்கு

பாதுகாவலனாக

வரப்போகிறான்

 

யாருக்கும் கிடைக்காத

இந்தப் பெருமை

உனக்குக் கிடைத்து

இருக்கிறது

 

இதை விட உனக்கு

வேறு என்ன வேண்டும்

சொல் செய்கிறேன்

 

சிகண்டி :

பரந்தாமா

உங்கள் கருணையே

கருணை

எனக்கு இதுவே

போதும்

 

இதை விட வேறு

என்ன பாக்கியம்

எனக்கு கிடைக்கப்

போகிறது

 

அனைத்தும்

அறிந்தவர் நீங்கள்

முக்காலமும்

உணர்ந்தவர் நீங்கள்

அனைத்தையும்

ஆட்டுவிப்பவர் நீங்கள்

நல்லதை

நடத்துபவர் நீங்கள்

கெட்டதை

அழிப்பவர் நீங்கள்

 

நடப்பதும் நடக்காததும்

உங்கள் கைகளில்

தான் இருக்கிறது

பிறப்பதும் இறப்பதும்

நீங்கள் இல்லாமல்

நடப்பதும் இல்லை

நீங்கள் இன்றி இந்த

உலகத்தில் எந்த

ஒன்றும்

அசைவதும் இல்லை

 

உங்களுக்கு

தெரியாதது

எதுவும் இல்லை

நான் சொல்லித் தான்

நீங்கள் தெரிந்து

கொள்ள வேண்டிய

அவசியமும் இல்லை

 

எது நல்லது

எது கெட்டது

என்பது

உங்களுக்கு தெரியும்

எதை செய்ய வேண்டும்

எதை செய்யக் கூடாது

என்பது

உங்களுக்கு தெரியும்

 

நீங்கள் இயக்குபவர்

நான் இயங்குபவன்

நீங்கள் கட்டளையிடுபவர்

நான் செயல்படுத்துபவன்

 

நீங்கள் என்னுடன்

இருந்தாலே போதும்

அனைத்தும் வெற்றியில்

தான் முடியும்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment