August 11, 2022

ஜபம்-பதிவு-849 (சாவேயில்லாத சிகண்டி-183)

 ஜபம்-பதிவு-849

(சாவேயில்லாத

சிகண்டி-183)

 

பீஷ்மர் :

என்னை வீழ்த்த

வேண்டும் என்றால்

நீ தனியாக

வந்திருக்கலாமே

எதற்காக அர்ஜுனனையும்

கிருஷ்ணனையும்

கூட்டிக்

கொண்டு வந்தாய்

 

சிகண்டி :

நான் தான்

உன்னை வீழ்த்தினேன்

இந்த சிகண்டி தான்

உன்னை வீழ்த்தினான்

என்று இந்த

உலகம் நம்ப

வேண்டும் அல்லவா

 

அதற்கு

சாட்சியாகத் தான்

அவர்களைக்

கூட்டிக் கொண்டு

வந்தேன்

 

பீஷ்மர் :

எனக்கு முன்னால்

நிற்பதற்கே யோசிப்பார்கள்

ஆயுதம் எடுப்பதற்கு

பயப்படுவார்கள்

 

என்னைப் பார்த்து

உனக்கு பயம்

இல்லையா

 

சிகண்டி :

உன் மீது பயம்

இருந்திருந்தால்

உன்னை

நான் எதிர்த்தே

இருக்க மாட்டேனே

 

பிறப்பு எடுத்து

ஜென்மங்களைக்

கடந்து வந்து

இருக்க மாட்டேனே

 

உன்னைக்

கொல்வதற்காக

போர்க்களம்

புகுந்திருக்க மாட்டேனே

 

உன்னிடம்

போர் புரிவதற்கு

உன் எதிரே வந்து

நின்று இருக்க

மாட்டேனே

 

உன்னைக்

கொல்வதற்கு ஆயுதம்

ஏந்தி இருக்க

மாட்டேனே

 

பீஷ்மர் :

போர்க்களத்தில்

பெண்ணுக்கு எதிராக

நான் ஆயுதம்

எடுக்க மாட்டேன்

என்பது

உனக்குத் தெரியுமா

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறியவன் நீ

உனக்குள் ஒரு

பெண் மறைந்து

இருக்கின்ற

காரணத்தினால்

உனக்கு எதிராக

நான் ஆயுதம்

ஏந்தப் போவதில்லை

போர் புரியப்

போவதில்லை

எந்தவித

எதிர்ப்பையும் நான்

தெரிவிக்கப்

போவதில்லை

 

என்னை வீழ்த்த

உனக்கு சிரமமே

ஏற்படப்போவதிலை

எளிதாக என்னை

வீழ்த்தி விடலாம்

 

போர்க்களத்தில்

நிராயுதபாணியாக

நிற்கும் என்னை

வீழ்த்தி உன்

சபதத்தை

நிறைவேற்றிக்

கொள்ளலாம்

 

போர்க்களத்தில்

போரிட வந்த

சிகண்டிக்கு எதிராக

ஆயுதம் ஏந்தாமல்

நிராயுதபாணியாய்

நின்ற பீஷ்மனைக்

கொன்றான் சிகண்டி

என்று தான்

நாளைய உலகம்

உன்னை சொல்லும்

 

சிகண்டி :

உன்னுடன் போரிட

வந்தால் தானே

நாளைய உலகம்

அவ்வாறு சொல்லும்

நான் தான்

உன்னுடன்

போர் புரியவே

வரவில்லையே

 

பீஷ்மர் :

என்ன போர் புரிய

வரவில்லையா

அப்படி என்றால்

போர்க்களத்திற்கு

எதற்காக

வந்திருக்கிறாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment