March 05, 2023

ஜபம்-பதிவு-941 மரணமற்ற அஸ்வத்தாமன்-73 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-941

மரணமற்ற

அஸ்வத்தாமன்-73

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணராகிய நான்

கற்றுக் கொடுத்ததை

வைத்துத் தான்

என்னைக்

கொல்ல முடியும்

என்பதையும்

வேறு யார்

கற்று கொடுத்ததை

வைத்தும் என்னை

கொல்ல முடியாது

என்பதையும்

 

என்னுடைய சீடர்களால்

மட்டுமே என்னைக்

கொல்ல முடியும்

என்பதையும்

என்னுடைய

சீடர்களைத்

தவிர்த்து வேறு

யாராலும் என்னைக்

கொல்ல முடியாது

என்பதையும்

இந்த உலகம்

உணர்ந்து கொள்ளும்

 

அஸ்வத்தாமா

எப்போதுமே

நிகழ்காலத்தில் நடக்கும்

நிகழ்ச்சிகளை மட்டுமே

கணக்கில் கொண்டு

எந்த ஒரு

முடிவையும்

எடுக்கக் கூடாது

 

எதிர்காலத்தைக்

கணக்கில் கொண்டு

தான் நிகழ்காலத்தில்

முடிவுகள்

எடுக்க வேண்டும்

 

நிகழ்காலத்தை

மட்டும் கணக்கில்

கொண்டு

எடுக்கப்படும்

எந்த ஒரு முடிவும்

சரியாக இருக்காது

 

எதிர்காலத்தை

கணக்கில் கொண்டு

நிகழ்காலத்தில்

எடுக்கப்படும்

முடிவே

சரியானதாக

இருக்கும்

 

எந்த ஒரு

விஷயத்தையும்

தொலைநோக்குப்

பார்வையுடன்

யோசித்துப் பார்க்க

முயற்சி செய்

 

எந்த ஒரு

விஷயத்தையும்

தொலைநோக்கு

பார்வையுடன்

யோசிக்கும்

போது தான்

உண்மை எது

பொய் எது

என்பது தெரியும்

 

நல்லது எது

கெட்டது எது

என்பது தெரியும்

 

திருஷ்டத்யும்னனுக்கு

நான் கல்வி

கற்றுக் கொடுப்பதை

தொலைநோக்கு

பார்வையுடன் பார்

நான் செய்வது

சரியானது

என்பது தெரியும்

 

ஒவ்வொருவரும்

அவரவருக்கு என்று

நிர்ணயிக்கப்பட்ட

பணியை செய்ய

வேண்டும்

 

எனக்கென்று

நிர்ணயிக்கப்பட்ட

பணியை என்னைச்

செய்ய விடு

 

அஸ்வத்தாமா

நீ என் அருகில்

இருக்கும் போது

திருஷ்டத்யும்னன்

என்னைக்

கொல்ல முடியுமா

என்னுடைய

உயிரைப் பறிக்க

முடியுமா

 

என்னைக் கொன்றாலும்

அவனை நீ சும்மா

விட்டுவிடுவாயா

 

அஸ்வத்தாமன் :

உங்களைக்

கொன்றவனை

அணு அணுவாகச்

சித்திரவதை

செய்துகொல்வேன்

 

ஏன் இந்தச்

செயலைச்

செய்தோம் என்று

எண்ணும்படி

கொல்வேன்

 

கொடிய முறையில்

கொல்வேன்

 

யாரும் நினைத்துகூட

பார்க்க முடியாத

அளவுக்கு

அவனைக்

கொல்வேன்

 

இதுவரை இந்த

உலகம் பார்த்திராத

அளவுக்கு அவனைக்

கொல்வேன்

 

துரோணர் :

எனக்கு அது

போதுமே

 

நான் செல்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

எங்கு செல்கிறீர்கள்

 

துரோணர் :

மரணத்திற்கே பாடம்

எடுக்க செல்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

திருஷ்டத்யும்னனை

சொல்கிறீர்களா

 

துரோணர் :

அஸ்வத்தாமா

மரணத்திற்கே பாடம்

எடுக்கும் வல்லமை

எனக்கு இருக்கின்றன

காரணத்தினால் தான்

மரணமற்ற

அஸ்வத்தாமன்

என்று நீ

எனக்கு மகனாகப்

பிறந்திருக்கிறாய்

என்பதை

நினைவில் கொள்

 

(என்று சொல்லி

விட்டு துரோணர்

செல்கிறார்)

 

மரணமற்ற

அஸ்வத்தாமன்

மரணத்திற்கே பாடம்

எடுக்கச் செல்லும்

தன்னுடைய

தந்தை துரோணர்

செல்வதையே

பார்த்துக்

கொண்டிருக்கிறான்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment