March 05, 2023

பதிவு-5- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-5- ஆய பதிதான்-

-திருமூலர்

 

ஆதியும் நீ , அந்தமும் நீ,  அந்தத்தின் அருளும் நீ !

எண்ணும் நீ ,எழுத்தும் நீ , எழுத்தின் இலக்கணம் நீ !

எண்ணமும் நீ , சொல்லும் நீ, சொல்லின் செயலும் நீ !

கண்ணும் நீ , காட்சியும் நீ, காட்சியின் யதார்த்தம் நீ !

அறிவும் நீ , ஆற்றலும் நீ ,ஆற்றலின் இயல்பு நீ !

ஆள்பவனும் நீ , ஆளப்படுபவனும் நீ, ஆளுமையின் பிராணனும் நீ !

விண்ணும் நீ , மண்ணும் நீ , மண்ணின் மூலம் நீ !

அன்பும் நீ , ஆசியும் நீ , ஆசியின் கருணையும் நீ !

ஓசையும் நீ , ஓம்காரமும் நீ,  ஓம்காரத்தின் உருவமும் நீ !

ஒளியும் நீ , வளியும் நீ , வளியின் விதியும் நீ !

மதியும் நீ , மனதும் நீ,  மனதின் பிறப்பும் நீ !

அண்டமும் நீ , அகிலமும் நீ,  அகிலத்தின் சான்று நீ !

உரையும் நீ , உள்ளும் நீ , உள்ளின் உருவகமும் நீ !

பாடலும் நீ , பொருளும் நீ ,பொருளின் மெய்யும் நீ !

இறப்பும் நீ , அழிவும் நீ , அழிவின் ஆக்கமும் நீ !

சான்று நீ , சன்மார்க்கம் நீ , சன்மார்க்கத்தின் விழி நீ !

பார்ப்பவன் நீ , பார்க்கப்படுபவன் நீ,  பார்க்கப்படுபவனின் பாதை நீ !

இதயம் நீ , இல்லறம் நீ , இல்லறத்தின் நல்லறம் நீ !

சாந்தம் நீ , சித்தம் நீ , சித்தத்தின் சிந்தை நீ !

பாரும் நீ , பகலவனும் நீ, பகலவனின் தோற்றம் நீ !

இம்மையும் நீ  ,மறுமையும் நீ, மறுமையின் சாரம் நீ !

முதலும் நீ , முடிவும் நீ, முடிவின் முதலும் நீ !

என்பதில் தெளிவு பெற்று யாருக்கு அறிவு ரேகை திறந்து கொள்கிறதோ

அவருக்கு பதி பசு பாசம் இவற்றுக்கு இடையே உள்ள

ஒற்றுமை வேற்றுமை தெரியும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment