March 05, 2023

ஜபம்-பதிவு-940 மரணமற்ற அஸ்வத்தாமன்-72 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-940

மரணமற்ற

அஸ்வத்தாமன்-72

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கர்மவினையின்

பாதிப்பிலிருந்து

நம்மைக் காத்துக்

கொள்வதற்கும்

கர்மவினையின்

பாதிப்பை குறைத்துக்

கொள்வதற்கும்

மட்டுமே நாம்

முயற்சி

செய்ய வேண்டும்

 

கர்மவினையை

மாற்ற முயற்சி

செய்யக்கூடாது

 

மனிதன்

எப்போது எப்படி

எந்த இடத்தில்

எந்த நேரத்தில்

எந்த காலத்தில்

எந்த சூழ்நிலையில்

யாரால் இறப்பான்

என்பது

யாருக்கும் தெரியாது

ஆனால்

எனக்கு யாரால்

இறப்பேன்

என்பது தெரியும்

எப்போது எப்படி

எந்த இடத்தில்

எந்த நேரத்தில்

எந்த காலத்தில்

எந்த சூழ்நிலையில்

இறப்பேன் என்பது

மட்டும் தெரியாது

 

மனிதனுக்கு

இறக்கும்

தேதி தெரியாத

காரணத்தினால் தான்

நம்பிக்கையுடன்

வாழ்ந்து

கொண்டிருக்கிறான்

 

இறக்கும் தேதி

தெரிந்து விட்டால்

மனிதனால்

நம்பிக்கையுடன்

வாழ முடியாது

 

மனிதன்

நம்பிக்கையுடன்

வாழ்வதற்கு

முக்கிய காரணமே

மனிதனுக்கு

இறக்கும் தேதி

தெரியாத

காரணத்தினால் தான்

 

சூரிய உதயத்தைக்

காண்போம் என்ற

நினைப்பில்தான்

ஒவ்வொருவரும்

இரவில் உறங்கவே

செல்கிறோம்

 

காலையில் உயிரோடு

எழுந்திருப்போம் என்ற

நம்பிக்கையில் தான்

நாம் நம்

கடமையையே

செய்கிறோம்

 

நம்பிக்கையில் தானே

வாழ்க்கையே

ஒடிக் கொண்டு

இருக்கிறது

நம்பிக்கை இல்லை

என்றால் வாழ்க்கையை

ஓட்ட முடியுமா

 

அஸ்வத்தாமன் :

இருந்தாலும் உங்களைக்

கொல்வதற்காகவே

பிறந்தவனுக்கு கல்வி

கற்றுக்கொடுப்பது

என்பது

 

துரோணர் :

தேவையானது தான்

 

என்னைக்

கொல்வதற்காகப்

பிறந்தவன்

நான் கல்வி

கற்றுக் கொடுத்தாலும்

என்னைக்

கொல்லத்தான்

போகிறான்

நான் கல்வி கற்றுக்

கொடுக்கவில்லை

என்றாலும் என்னைக்

கொல்லத்தான்

போகிறான்

 

அவன் யாரிடமாவது

கல்வி கற்றுக்

கொண்டு வந்து

என்னைக் கொன்றால்

என்னைவிட

சிறந்த குரு இந்த

உலகத்தில்

இருக்கிறார்கள்

என்பதும்

என்னைவிட

திருஷ்டத்யும்னன்

திறமைசாலி

என்பதும் இந்த

உலகம் ஏற்றுக்

கொண்டு விடும்

 

திருஷ்டத்யும்னனுக்கு

நான் கல்வியைக்

கற்றுக் கொடுத்தால்

துரோணரைக்

கொல்லப் பிறந்தவன்

திருஷ்டத்யும்னன்

என்று தெரிந்தும்

துரோணர்

திருஷ்டத்யும்னனுக்கு

கல்வியைக்

கற்றுக் கொடுத்தார்

என்று இந்த உலகம்

என்னை வாழ்த்தும்

 

திருஷ்டத்யும்னனுக்கு

கல்வியைக்

கற்றுக் கொடுத்தால்

நான் கற்றுக்

கொடுத்த கல்வியை

வைத்துத்தான்

அவனால் என்னைக்

கொல்ல முடியும்

 

நான் கற்றுக்

கொடுத்த கல்வியை

வைத்துத்தான்

அவன் என்னைக்

கொல்வான் என்றால்

குருவையே

சீடன் கொன்றான்

என்று இந்த உலகம்

அவனை பழிக்கும்

குருத் துரோகி

என்று இந்த

உலகம் அவனை

இழித்துரைக்கும்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment