March 05, 2023

ஜபம்-பதிவு-939 மரணமற்ற அஸ்வத்தாமன்-71 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-939

மரணமற்ற

அஸ்வத்தாமன்-71

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அவனுக்கு

கொலைவெறி

இருக்கின்ற

காரணத்தினால் தான்

உங்களைக்

கொல்வதற்காக

ஒரு மகனை

உருவாக்கி

இருக்கிறான்

 

துரோணர் :

துருபதன் நடந்த

நிகழ்வுகளை தவறாக

புரிந்து கொண்ட

காரணத்தினால் தான்

என்னைக்

கொல்வதற்காக

ஒரு மகனை

உருவாக்கி

இருக்கிறான்

 

அவன்

அவமானப்படுத்தப்பட்டதாக

நினைத்துக்கொண்டு

அதைத் துடைக்க

நினைக்கிறான்

அவன்

அவமானப்பட்டதற்கு

நான் தான் காரணம்

என்று நினைக்கிறான்

அதனால் என்னை

கொல்ல துடிக்கிறான்

 

அவன் என்னை

அவமானப்படுத்தியபோது

அவனை

நான் கொல்ல

நினைக்கவில்லை

அவன்

செய்த தவறை

அவனுக்கு

சுட்டிக் காட்டத் தான்

நினைத்தேன் அந்த

வாய்ப்புக்காகத்தான்

காத்திருந்தேன்

வாய்ப்பு வந்தவுடன்

அதைப் பயன்படுத்திக்

கொண்டேன்

என் சீடர்களின் மூலம்

அவன் மேல் போர்

தொடுக்கச் செய்து

அவனை கைதியாக்கி

அழைத்து வந்து

அவன் செய்த

தவறைத்தான் சுட்டிக்

காட்டினேன்

ஆனால் துருபதன்

அவனை நான்

அவமானப்படுத்தியதாக

நினைத்துக்

கொண்டான்

அதன் காரணமாக

என்னை கொல்லத்

துடித்துக்

கொண்டிருக்கிறான்

அதற்காகக் காத்துக்

கொண்டிருக்கிறான்

 

அவன் எனக்கு

கொடுப்பதாகச்

சொன்ன

ராஜ்ஜியத்தின்

பாதியைத் தான்

நான் எடுத்துக்

கொண்டேனே தவிர

பாஞ்சாலம்

முழுவதையும் நான்

எடுத்துக்

கொள்ளவில்லையே

 

நான் அவனை

அவமானப்படுத்த

வேண்டும் என்று

நினைத்து இருந்தால்

பாஞ்சாலநாடு

முழுவதையும் அல்லவா

எனக்காக எடுத்துக்

கொண்டு இருப்பேன்

 

நான் அவ்வாறு

செய்யவில்லையே

 

அவன் செய்த தவறை

அவனுக்கு சுட்டிக்

காட்ட நினைத்தேன்

அதை அவன் தன்னை

அவமானப்படுத்தியதாக

நினைத்துக் கொண்டான்

அதற்காக என்னைக்

கொல்ல நினைத்தான்

அதற்காக என்னைக்

கொல்வதற்கு ஒரு

மகனை உருவாக்கி

இருக்கிறான்

 

அஸ்வத்தாமன் :

திருஷ்டத்யும்னனைக்

கொல்ல வேண்டாம்

என்கிறீர்களா

 

துரோணர் :

திருஷ்டத்யும்னனைக்

கொல்வதால் என்ன

நன்மை ஏற்பட்டு

விடப்போகிறது

 

திருஷ்டத்யும்னன்

என்னை

கொல்வதற்காகவே

பிறப்பெடுத்து

வந்திருக்கிறான்

 

திருஷ்டத்யும்னன்

என்னைக் கொல்வது

என்பது

நிர்ணயிக்கப்பட்ட

ஒன்று என்றால்

அதை மாற்ற முயற்சி

செய்யக் கூடாது.

 

மனிதன் இந்த

உலகத்தில் பிறப்பதே

கர்மவினையை

அனுபவித்து

கழிப்பதற்காகத் தான்

 

கர்மவினையின் பாதிப்பு

அதிக அளவில்

இருக்கிறது என்பதற்காக

கர்மவினையை

மாற்ற முயற்சி

செய்யக் கூடாது

 

கர்மவினையை

மாற்ற முயற்சி

செய்தால் அந்த

கர்மவினையானது

வேறு ஒரு

கர்மவினையாக

வெளிப்பட்டு

அதை விட

மிகப்பெரிய

பிரச்சினைகளை

எல்லாம் கொண்டு

வந்து விடும்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment