March 05, 2023

ஜபம்-பதிவு-938 மரணமற்ற அஸ்வத்தாமன்-70 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-938

மரணமற்ற

அஸ்வத்தாமன்-70

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

பதில் தெரிந்து

தன்னுடைய அறிவை

வளர்த்துக்

கொள்ள வேண்டும்

என்ற நினைப்பில்

யாரும் கேள்விகள்

கேட்பதில்லை

மற்றவர்களுக்கு

எவ்வளவு அறிவு

இருக்கிறது என்பதை

சோதித்து

பார்க்க வேண்டும்

என்ற நினைப்பில்

தான் அனைவரும்

கேள்விகளையே

கேட்கின்றனர்

 

பதிலைத் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்ற எண்ணத்தில்

கேள்விகளைக்

கேட்பவர்கள்

பதிலைச் சொல்பவர்

பதிலை சொல்லி

முடிக்கும் வரை

காத்திருப்பார்கள்

ஆனால்

மற்றவருக்கு என்ன

தெரிந்து இருக்கிறது

என்று சோதித்து

பார்க்க

வேண்டும் என்ற

எண்ணத்தில்

கேள்விகளைக்

கேட்பவர்கள்

பதில் சொல்பவர்

பதில் சொல்லி

முடிப்பதற்குள்

எதிரே இருப்பவரை

பதில் சொல்லவிடாமல்

சரமாரியாக

தொடர்ச்சியாக

கேள்விகளைக்

கேட்டுக் கொண்டே

இருப்பார்கள்

கேள்விகளைக்

கேட்டுக் கொண்டு

இருப்பதன் மூலம்

தான் சிறந்த

அறிவாளி என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபிக்க

முயல்கின்றனர்

எதிரே இருப்பவரை

பதில் சொல்ல

விடாமல் தடுத்து

தொடர்ந்து கேள்விகள்

கேட்டு தாங்கள் தான்

அறிவாளிகள்

என்ற கருத்தை

மக்கள் மனதில்

விதைக்க

விரும்புகின்றனர்

 

இந்த சமுதாயமும்

இவ்வாறு கேள்வி

கேட்பவர்களைத் தான்

அறிவாளி என்று

நினைக்கிறது

சோதிப்பதற்காக

கேள்வி கேட்பவர்களைத்

தான் இந்த

உலகம் பெரிதாக

நினைக்கிறது

 

பதில் சொல்பவரை

இந்த உலகம் கண்டு

கொள்வதேயில்லை

கேள்விக்கு பதில்

சொல்பவரை

இந்த உலகம்

பெரிதாக

நினைப்பதேயில்லை

 

நீயும் பதில் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்ற நினைப்பில்

கேள்வி கேட்கவில்லை

 

என்னிடம் இருந்து

பதில் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்ற எண்ணத்தில்

கேள்வியை நீ

கேட்டிருந்தால்

நான் பதில்

சொல்லும் வரை

பொறுமையாக காத்துக்

கொண்டிருந்திருப்பாய்

 

ஆனால்

நான் பதில்

சொல்லி முடிப்பதற்கு

முன்பாகவே

அடுத்த கேள்வியை

நீ கேட்டதில்

இருந்தே

தெரிந்து விட்டது

எனக்கு என்ன

தெரிந்து இருக்கிறது

என்பதை

சோதித்துப் பார்க்கவே

கேள்வியைக் கேட்டு

இருக்கிறாய் என்று

 

அஸ்வத்தாமன் :

உங்களை சோதித்துப்

பார்ப்பதற்காக

நான் எந்த ஒரு

கேள்வியையும்

கேட்கவில்லை

உங்களுக்கு விஷயம்

தெரியவில்லை

என்றால்

விஷயத்தைத்

தெரியப்படுத்தலாம்

என்பதற்காகக்

கேட்டேன்

 

இப்போது ஒரு

வார்த்தை

சொல்லுங்கள்

உங்களைக் கொல்லப்

பிறந்தவனை

கொன்று அவன்

தலையை உங்கள்

காலடியில் கொண்டு

வந்து போடுகிறேன்

 

துரோணர் :

ஏன் இந்த

கொலைவெறி

 

அஸ்வத்தாமன் :

கொலைவெறி

எனக்கு இல்லை

நீங்கள் நண்பன்

என்று

சொன்னீர்களே அந்தத்

துருபதனுக்குத் தான்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment