January 22, 2022

பதிவு-7-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-7-வினைவலியும்-

திருக்குறள்-

 

அரசியல் சூழ்ச்சிக்கு

வித்தாகத் திகழ்ந்தவர்

அரசியல் களத்தில்

ராஜதந்திரியாக

விளங்கியவர்

அன்பை

நாடுபவர்களுக்கு

அன்பைக் காட்டுபவர்

எதிரியாக

இருந்தாலும்

ஆதரவுக் கரம்

நீட்டினால்

அரவணைத்துக்

கொள்பவர்

தன்னை அழிக்க

நினைக்கும்

எதிரிகளை இந்த

உலகத்திலேயே

இல்லாமல்

செய்பவர்

கிளியோபாட்ரா

 

உலக

அழகியாகவே

கிளியோபாட்ராவை

இந்த உலகம்

பார்ப்பதால்

கிளியோபாட்ராவின்

மற்றொரு முகமான

ராஜதந்திரத்தை

பார்க்க முடியாமல்

இந்த உலகம்

செய்து விட்டது

 

ரோமபுரி நாட்டின்

வரலாற்றை

எழுதியவர்கள்

ரோமானியர்கள்

என்ற காரணத்தினால்

அவர்கள்

ஜுலியஸ் சீசரையும்

ஆன்ட்டனியையும்

கிளியோபாட்ரா

மயக்கினார் என்று

எழுதி வைத்து

விட்டார்கள்

 

அது சூழ்ச்சி

நிறைந்த

ரோமானியர்களால்

தவறாக

எழுதப்பட்ட வரலாறு

 

ஜுலியஸ் சீசர்

மற்றும்

ஆன்ட்டனியின்

செல்வாக்கு

குறையாமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

எழுதப்பட்ட வரலாறு

 

ஜுலியஸ் சீசர்

மற்றும்

ஆன்ட்டனியின்

செல்வாக்கை

உயர்த்த வேண்டும்

என்பதற்காக

எழுதப்பட்ட வரலாறு

 

கிளியோபாட்ராவை

இழிவு படுத்த

வேண்டும் என்ற

நோக்கத்திற்காக

எழுதப்பட்ட வரலாறு

 

ஜுலியஸ் சீசரும்

ஆன்ட்டனியும்

கிளியோபாட்ராவின்

கண்ணசைவுக்கு

கட்டுப்பட்டவர்களாக

இருந்தார்கள்

 

கிளியோபாட்ராவின்

வார்த்தைகளை

அமல்படுத்தக்

கூடியவர்களாக

இருந்தார்கள்

 

கிளியோபாட்ரா

சொல்லக்கூடிய

வேலைகளை செய்யக்

கூடியவர்களாக

இருந்தார்கள்

 

கிளியோபாட்ராவின்

ஏவலை ஏற்று

செயல் படுத்தக்

கூடியவர்களாக

இருந்தார்கள்

 

கிளியோபாட்ராவின்

கட்டளைக்கு

அடிபணிந்து

சேவகம்

செய்யக்கூடிய

சேவர்களாக

இருந்தார்கள்

 

சுருக்கமாக

சொல்ல வேண்டும்

என்றால்

ஜுலியஸ் சீசரும்

ஆன்ட்டனியும்

கிளியோபாட்ராவுக்கு

அடிமையாக

கிளியோபாட்ராவின்

காலடியில்

வீழ்ந்து கிடந்தார்கள்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment