January 22, 2022

பதிவு-9-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-9-வினைவலியும்-

திருக்குறள்-

 

காதல்

எங்கே

ஆரம்பிக்கிறது

என்று தெரியாது

 

காதலை

உணர்ந்தவர்கள்

பிரபஞ்சத்தின்

அதிசயத்தைக்

கண்டவர்கள்

 

காதலின்

ஆழத்தை

தரிசித்தவர்கள்

பரம்பொருளின்

மகத்துவத்தைப்

புரிந்தவர்கள்

 

இந்த உலகத்தில்

உள்ள யாரையும்

காமத்தால்

வீழ்த்தி

நீண்ட நாட்கள்

தன்னுடன்

வைத்துக் கொள்ள

முடியாது என்பது

கிளியோபாட்ராவுக்கு

தெரியும்

 

காமத்தால்

ஒருவரை

வீழ்த்துவது

புத்திசாலித்தனமல்ல

காமத்தால்

ஒருவரை

வீழ்த்தக்கூடாது

என்பது

கிளியோபாட்ராவுக்கு

தெரியும்

 

இந்த உலகத்தில்

உள்ள யாரையும்

காதலால்

வீழ்த்தினால்

அவர் உடலில்

உயிர் இருக்கும்

வரைக்கும்

நம்முடன்

இருப்பார் என்பது

கிளியோபாட்ராவுக்கு

தெரிந்த

காரணத்தினால்

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரையும்

ஆன்ட்டனியையும்

காமத்தால்

வீழ்த்தவில்லை

காதலால்

வீழ்த்தினாள்

 

மொத்தத்தில்

சொல்ல வேண்டும்

என்றால்

ஜுலியஸ் சீசரும்

ஆன்ட்டனியும்

கிளியோபாட்ரா

ஒரு சிறந்த

ராஜதந்திரி என்பது

தெரியாமல் அவர்

காலடியில் விழுந்து

கிடந்தார்கள்

என்று தான்

சொல்ல வேண்டும்

 

ஜுலியஸ் சீசரையும்

ஆன்டனியையும்

காதலால் வீழ்த்திய

கிளியோபாட்ரா

நாளடைவில்

தானும் காதலில்

வீழ்ந்தார்

 

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரையும்

காதலித்தார்

ஆன்டனியையும்

காதலித்தார்

 

ஒருத்தரை

காதலித்தவர்

மற்றொருவரை

எப்படி

காதலிக்கமுடியும்

இது உண்மையான

காதல் கிடையாது

தவறான காதல்

என்பர்

 

காதல்

என்றால்

காதல் மட்டுமே

 

காதலில்

உண்மையான காதல்

பொய்க்காதல்

நல்ல காதல்

கெட்ட காதல்

கள்ளக் காதல்

என்று எதுவும்

கிடையாது

 

காதல்

என்றால்

காதல் மட்டுமே

 

ஒருவரைக்

காதலித்தாலும்

பலரைக்

காதலித்தாலும்

யாரைக்

காதலித்தாலும்

காதல்

என்றால்

காதல் மட்டுமே

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment