August 24, 2022

ஜபம்-பதிவு-861 (சாவேயில்லாத சிகண்டி-195)

 ஜபம்-பதிவு-861

(சாவேயில்லாத

சிகண்டி-195)

 

அஸ்வத்தாமன் :

இல்லை

இல்லவே இல்லை

 

குருக்ஷேத்திரப் போர்

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பதற்காக

நடைபெற்ற

போர் கிடையாது

 

அஸ்தினாபுரத்தின்

அரியணையின்

மேல் உள்ள

ஆசையால்

பாண்டவர்களால்

நடத்தப்பட்டபோர்

 

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைக்க வேண்டும்

என்றுபாண்டவர்கள்

முடிவெடுத்திருந்தால்

திரௌபதிக்கு

அவமானத்தை

ஏற்படுத்தியவர்களாகக்

கருதப்படும்

துரியோதனன்

துச்சாதானன்

கர்ணன்

ஆகியோர்களை

பாண்டவர்கள்

நேருக்கு

நேர் நின்று

போர் செய்யும்

தனிப்போருக்கு

அழைத்திருக்க

வேண்டும்

 

அவர்களுடன்

பாண்டவர்கள்

நேருக்கு நேராக

நின்று போரிட்டு

இருக்க வேண்டும்

அவர்களைக்

கொன்று

இருக்க வேண்டும்

 

அவர்கள் அவ்வாறு

செய்து இருந்தால்

பாண்டவர்களுக்கு

நேர்ந்த

அவமானமும்

துடைக்கப்பட்டிருக்கும்

திரௌதிக்கு நேர்ந்த

அவமானமும்

நீக்கப்பட்டிருக்கும்

திரௌபதியின்

சபதமும்

நிறைவேறியிருக்கும்

 

ஆனால்

அவர்கள் அவ்வாறு

செய்யவில்லை

 

ஏனென்றால்

அவர்களுடைய எண்ணம்

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பது இல்லை

 

அவர்களுடைய எண்ணம்

அஸ்தினாபுரத்தின்

அரியணையைக்

கைப்பற்றுவது தான்

 

அஸ்தினாபுரத்தை

அரசாள்வது தான்

 

அதனால் தான்

பாண்டவர்கள்

போரே எடுத்தார்கள்

 

போர் நடந்தால் தான்

பாண்டவர்களால்

கௌரவர்கள்

அனைவரையும்

கொல்ல முடியும்

கௌரவர்களைச்

சார்ந்தவர்கள்

அனைவரையும்

கொல்ல முடியும்

கௌரவர்களை

முற்றிலுமாக

அழிக்க முடியும்

 

கௌரவர்களையும்

கௌரவர்களைச்

சார்ந்தவர்களையும்

முற்றிலுமாக

அழித்தால் மட்டுமே

பாண்டவர்களால்

அஸ்தினாபுரத்தைக்

கைப்பற்ற முடியும்

அப்போது தான்

அஸ்தினாபுரத்தை

ஆள முடியும்என்ற

காரணத்தினால் தான்

குருக்ஷேத்திரப்

போரையே

நடத்தினார்கள்

 

பாண்டவர்கள்

அஸ்தினாபுரத்தின் மேல்

உள்ள ஆசையினால்

தான் போர்

செய்தார்கள்

 

அஸ்தினாபுரத்தைக்

கைப்பற்ற வேண்டும்

என்ற ஆசையினால்

தான் போர்

செய்தார்கள்

 

அஸ்தினாபுரத்தை

ஆள வேண்டும் என்ற

ஆசையினால் தான்

போர் செய்தார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment