August 24, 2022

ஜபம்-பதிவு-863 (சாவேயில்லாத சிகண்டி-197)

 ஜபம்-பதிவு-863

(சாவேயில்லாத

சிகண்டி-197)

 

அஸ்வத்தாமன் :

சிகண்டி

 

நீ பாண்டவர்களைப்

போல கோழை அல்ல

வீரன் என்பதை

நிரூபித்துக்

கொண்டிருக்கிறாய்

 

பீஷ்மரையே எதிர்த்து

பீஷ்மருடன்

போரிட்டவனல்லவா நீ

உன்னிடம் வீரம்

விளையாடுவதில்

வியப்பில்லை

 

உண்மையிலேயே

நீ ஒரு சிறந்த

வீரன் தான்

 

மரணமற்றவனுக்கு

மரணத்தையே

பரிசாகத் தந்தவன்

அல்லவா நீ

நானும்

மரணமற்றவன் தான்

என்னை உன்னால்

கொல்ல முடியுமா

என்று பார்க்கிறேன்

 

சிகண்டி :

பீஷ்மரை வீழ்த்த

வேண்டும்

என்று சிவனிடம் வரம்

வாங்கி வந்தேன்

அதனால் அவரை

வீழ்த்தினேன்

 

உன்னைக்

கொல்வதற்கு

நான் எந்த வரமும்

வாங்கி

வரவில்லையே

 

மரணமற்றவனை

என்னால் எப்படி

கொல்ல முடியும்

ஆனால் ஒன்று

இந்த சிகண்டியின்

உடலில்

உயிர் இரூக்கும்

வரைக்கும்

உன்னை எதிர்த்துப்

போரிடுவேன்

 

மரணமற்றவனுக்கு

மரணத்தையே

பரிசாகத் தந்த

எனக்கு

மரணமற்றவனால்

தான் மரணம்

என்றால்

அதை யாராலும்

மாற்ற முடியாது

 

அஸ்வத்தாமன் :

என்னுடைய

கையால்நீ

சாகப்போகிறாய்

 

உன்னுடைய

வாழ்க்கைக்கு

முகவுரையை யார்

எழுதினார்கள் என்று

எனக்குத் தெரியாது

ஆனால்

உன் வாழ்க்கையின்

முடிவுரையை

நான் தான்

எழுதப்போகிறேன்

 

வா

சிகண்டி

இறப்பதற்கு

என்னிடம் வா

இறப்பைப்

பரிசாகத்

தருகிறேன் வா

மரண

அன்னையை

முத்தமிட வா

 

(இருவருக்கும்

இடையே

கடுமையான சண்டை

தொடர்ந்து

நடைபெற்றது

 

இரத்தம்

சொட்ட சொட்ட

சண்டை போட்டுக்

கொண்டு இருந்தான்

சிகண்டி

 

எதற்கும் கலங்காமல்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

அஞ்சாமல் சண்டை

போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

உயிரைப் பற்றிக்

கவலைப்படாமல்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

இறக்கப் போகிறோம்

என்று தெரிந்தும்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

வாழ்க்கையின்

இறுதி நிமிடங்கள்

வந்து விட்டது என்று

தெரிந்த பிறகும்

சண்டை போட்டுக்

கொண்டிருந்தான்

சிகண்டி

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment