August 24, 2022

ஜபம்-பதிவு-862 (சாவேயில்லாத சிகண்டி-196)

 ஜபம்-பதிவு-862

(சாவேயில்லாத

சிகண்டி-196)

 

இந்த உண்மையை

மறைத்து

பாண்டவர்களும் அந்த

கபடவேடதாரி 

கிருஷ்ணனும்

இணைந்து

குருக்ஷேத்திரப் போர்

திரௌபதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பதற்காக

நடத்தப்பட்ட போர்

என்று பொய் சொல்லி

இந்த உலகத்தையே

நம்ப வைத்து

விட்டனர்

 

உண்மையில்

குருக்ஷேத்திரப் போர்

அஸ்தினாபுரத்தைக்

கைப்பற்றி ஆள

வேண்டும்என்ற

ஆசையினால்

பாண்டவர்கள்

எடுத்த போர் தான்

 

பல நாட்டு

மன்னர்கள்

இறப்பதற்கும்

பல லட்சக்கணக்கான

மக்கள்

இறப்பதற்கும்

பெண்கள்

விதவைகளாக

ஆனதற்கும்

பிள்ளைகளுக்கு

தந்தை

இல்லாமல்

போனதற்கும்

பெரும் பொருட்செலவு

உயிர் இழப்பு

ஆகியவை

ஏற்பட்டதற்கும்

காரணமே

பாண்டவர்களுக்கு

அஸ்தினாபுரத்தின்

அரியணையின் மேல்

மேல் ஏற்பட்ட

ஆசை தான்

 

திரௌதிக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைக்கப்போகிறோம்

தர்மத்தை

நிலைநாட்டப்

போகிறோம்

என்று பொய்

பேசிக் கொண்டு

குருக்ஷேத்திரப்

போரின் மூலம்

அனைத்தையும்

அழித்து விட்டனர்

 

இதற்கு மேல்

அழிப்பதற்கு இந்த

உலகத்தில்

எதுவும்இல்லை

என்ற நிலையை

பாண்டவர்கள்

உருவாக்கி

வைத்து விட்டனர்

 

செய்த போரைக்

கூட பாண்டவர்கள்

நேர்மையாக

செய்யவில்லை

நேர்மையற்று தான்

செய்தார்கள்

சூழ்ச்சிகளைப்

பயன்படுத்தித் தான்

போர் செய்தார்கள்

போர் விதிமுறைகளை

மீறித் தான் போர்

செய்தார்கள்

 

பாண்டவர்கள்

பெரும்பாலும்

ஆயுதம் ஏந்தி போர்

செய்தவர்களை

கொல்லவில்லை

ஏனென்றால்

ஆயுதம் ஏந்தி

அவர்களை

எதிர்த்தவர்களை

அவர்களால் கொல்ல

முடியவில்லை

 

ஆயுதம் இல்லாமல்

நிராயுதபாணியாக

இருந்தவர்களைத்

தான் அவர்களால்

கொல்ல முடிந்தது

என்பதற்கு

துரோணரின்மரணம்

கர்ணனின்மரணம்
ஆகியவையே சாட்சி

 

சிகண்டியே

பாண்டவர்களைப் போல்

நான் கோழை அல்ல

ஒரு வீரன்

 

நிராயுதபாணியாக

நிற்கும் உன்னைக்

கொல்ல மாட்டேன்

நீ வீரனாக இருந்தால்

வாளை

எடுத்துக் ‘கொள்

முடிந்தால்

மரணம் உன்னைத்

தழுவாமல்

உன்னைப்

பார்த்துக் கொள்

உன்னுடைய உயிரைக்

காப்பாற்றிக் கொள்

 

(இருவருக்குமிடையே

பயங்கரமாக

வாட் போர்

நடைபெற்றுக்

கொண்டிருந்தது

 

இரண்டு யானைகள்

மோதிக் கொண்டால்

எப்படி இருக்குமோ

அப்படி

இருவருக்குமிடையே

சண்டை நடைபெற்றது

 

வாட்கள்

இரண்டும் உரசியதால்

நெருப்புப் பொறி

கிளம்பியது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment