August 08, 2022

ஜபம்-பதிவு-835 (சாவேயில்லாத சிகண்டி-169)

 ஜபம்-பதிவு-835

(சாவேயில்லாத

சிகண்டி-169)

 

அவர் வில்லை

ஒடிக்காமல் இருந்தாலும்

எனக்காக போரிட்டு

இருக்க மாட்டார்

 

அவர் எனக்கு ஆதரவாக

என் பக்கம் இருந்து

போர் செய்ய மாட்டார்

என்பது எனக்குத் தெரியும்

 

நான் சொன்னது சரிதான்

அவர் தாசி குலத்தில்

பிறந்தவர் தான்

தன்னுடைய சாதி

மேல் வைத்திருந்த

பக்தியை அவர் இந்த

உலகத்திற்கு

வெளிச்சம் போட்டு

காட்டி விட்டு

சென்று விட்டார்

 

கிருஷ்ணன் :

துரியோதனா

பெரியவர்களை

அவமதிப்பதே

உன்னுடைய

செயலாக இருக்கிறது

அதையே தொழிலாக

வைத்துக் கொண்டு

செயல்பட்டுக் கொண்டு

இருக்கிறாய்

 

வார்த்தைகளால்

அனைவருடைய

இதயங்களையும்

காயப்படுத்திக்

கொண்டே இருக்கிறாய்

காயங்கள்

ஆறாத வடுக்களை

உண்டாக்கி விட்டு

செல்லும் என்பதை

நீ நினைப்பதேயில்லை

 

மற்றவர்களுடைய

உணர்வுகளுக்கு

நீ மதிப்பு

கொடுப்பதே இல்லை

உன்னுடைய

உணர்வுகளையே

நீ பெரிதாக நினைத்துக்

கொண்டிருக்கிறாய்

 

ஆசை என்பது

வாழ்க்கையை அழிக்கக்கூடியது

அன்பு மட்டுமே

வாழ்க்கையை

வாழ வைக்கக் கூடியது

என்பதை மறந்து விட்டாய்

 

மற்றவர்களை

மதிக்கக் கற்றுக் கொள்

மதிப்பு உன்னைத்

தேடி வரும்

 

உன்னிடமுள்ள

கெட்டவைகளை நீக்கு

நல்லவைகள் தானாகவே

உன்னுள் வெளிப்பட்டு

உன்னை உயர்த்தும்

 

மற்றவரை வாழ வை

நீ வாழ்வாய்

மற்றவரை அழிக்க

நினைத்ததால்

நீ தான் அழிவாய்

 

அழிவு என்பது வெளியில்

இருந்து வருவதல்ல

நாமே நமக்கு ஏற்படுத்திக்

கொள்வது தான்

 

நல்லது எது

கெட்டது எது

ஆராய்ந்து பார்க்கத்

தெரியாமல்

செயலைச்

செய்பவனுடைய

எந்த செயலும்

தோல்வியில்

தான் முடியும்

அவமானத்தைத் தான்

உண்டாக்கும் நீங்காத

பழியைத் தான்

உண்டாக்கும்

 

உயர்வுகள் உன்னை

நாடி வர வேண்டுமானால்

நல்லவைகளை

உன்னுடைய

நினைவில் வை

கெட்டவைகளை

செய்யாமல் ஒதுக்கி வை

 

இன்று நாம் எடுக்கும்

எந்த ஒரு முடிவையும்

பொறுத்தும் தான்

நாளைய உலகம்

நம்மை வரவேற்கும்

 

முடிவுகள் தவறாக

இருந்தால்

திருத்த முடியாது

 

திருத்தவே முடியாத

தவறுகளைச்

செய்யவே கூடாது

 

தவறு என்று

தெரிந்தால் அதன்

பக்கமே போகக் கூடாது

 

தவறான எண்ணங்கள்

உன்னுடைய மனதை

மட்டுமல்ல

உன்னுடைய

வாழ்க்கையையே

அழித்து விடும்

 

திருந்துவதற்கான

வழிமுறைகளைத் தான்

பின்பற்ற

வேண்டுமே தவிர

திருந்தாமல்

இருப்பதற்கான

வழிமுறைகளைப்

பின்பற்றக் கூடாது

 

சத்தியத்தைப்

பின்பற்றினால் சரித்திரம்

படைக்கலாம்

சாதனைகள் நீ

இருக்கும் இடம்

தேடி வரும்

 

அறிவுரைகள் என்பது

சொல்வதற்காக அல்ல

வாழ்க்கையில்

கடைபிடிப்பதற்காக

 

நான்

சொன்னவைகளை

மனதில் நிறுத்து

உண்மை எது

என்பதை உணர்

நல்லதைப் பின்பற்று

தர்மத்தை நிலை நாட்டு

 

நல்லதே நடக்கும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment