August 08, 2022

ஜபம்-பதிவு-838 (சாவேயில்லாத சிகண்டி-172)

 ஜபம்-பதிவு-838

(சாவேயில்லாத

சிகண்டி-172)

 

என்னை

உணர்ந்தவர்கள்

என்னை

வணங்குவார்கள்

 

என்னைத்

தெரிந்தவர்கள்

என்னைப்

பின்பற்றுவார்கள்

 

என்னைப்

புரிந்தவர்கள்

என்னுடன்

இருப்பார்கள்

 

என்று

சொல்லிக் கொண்டே

கிருஷ்ணன்

தன்னுடைய

மானிட

உருவிற்கு வந்தார்

துரியோதனனைப்

பார்த்து சிரித்தார்

பின்பு பேசினார்

 

துரியோதனா

போர் என்பது

தவிர்க்க முடியாத

ஒன்றாகி விட்டது

போர்

நடந்தே ஆக

வேண்டும்

என்ற

சூழ்நிலையை

உருவாக்கி

விட்டாய்

 

சமாதானத்தின்

அனைத்து

கதவுகளும்

அடைக்கப்பட்டு

விட்டது

 

எது

நடக்கக் கூடாது

என்று

நினைத்தேனோ

அது

நடக்கக் கூடிய

நிலைக்கு

வந்து விட்டது

 

நல்லது நடக்கும்

என்று

எதிர்பார்த்தேன்

கெட்டது

நடப்பதற்கான

செயல்கள்

நடந்து விட்டது

 

விதியை

யாராலும்

மாற்ற முடியாது

விதியை

வென்றவர்

இந்த

அவனியில்

யார் உள்ளனர்

 

விதி வழிச்

சென்றவர்

வகுத்த வழி

வல்லமை

உடையது

மதி வழி

சென்றவர்

வகுத்த வழி

மயக்கத்தில்

தான் வீழ்வது

 

அமைதியைக்

கொண்டு

வருவதற்கும்

தர்மத்தை நிலை

நாட்டுவதற்கும்

இப்போதைய

நிலையில்

போர்

ஒன்றே வழி

 

போரைத் தவிர்க்க

நினைத்தேன்

ஆனால்

தவிர்க்க

முடியாத

ஒன்றாகி

விட்டது போர்

 

அடுத்து

நம்முடைய

சந்திப்பு

போர்க்களத்தில்

தான்

இருக்கும்

 

போர்க்களத்தில்

சந்திப்போம்

 

துரியோதனன் :

நானும்

அதற்காகத்

தான்

காத்திருக்கிறேன்

அந்த

அடிமைகளின்

அழிவைக் காண

வேண்டும்

என்பதற்காக

 

கிருஷ்ணன் :

யார்

அழிவார்கள்

என்பதை

இப்போதே

எப்படி

சொல்ல முடியும்

 

துரியோதனன் :

நீ தான்

பார்க்கப்

போகிறாயே

.

கிருஷ்ணன் :

நான் பார்ப்பேன்

நீ பார்ப்பாயா

 

(என்று

சொல்லி விட்டு

கிருஷ்ணன்

அந்த

அவையை விட்டு

வெளியே சென்று

விட்டார்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment