June 28, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தன்னைத்தான்-பதிவு-45

அன்பிற்கினியவர்களுக்கு ,
இந்த கட்டுரை என்னுடைய 100 வது ஆன்மீக கட்டுரை !
எனது உடலில் உயிர்  தங்கி இருக்க , நான் இந்த கட்டுரைகளை எழுதுவதற்கு,  முக்கிய காரணமாக இருந்தவர்  இருவர்.
ஒன்று எனது அம்மா சொர்ணம் ; இரண்டு என்னுடைய மனைவி பிரதிபா; என்னுடைய அப்பா இறந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் சமுதாய சட்டதிட்டங்களாலும் , சம்பிரதாய நடைமுறைகளினாலும் ,இரக்கத்தை கொன்ற நெஞ்சங்களினாலும் ,உடல் உபாதைகளினாலும் ,மன வேதனைகளினாலும் ,கைவிடப்பட்ட அன்பினாலும் ,இரக்கத்தை கொன்ற உள்ளத்தினாலும் ,பாதிப்புக்கு உள்ளான எனது அம்மா நான் நல்ல நிலை அடைந்து விட வேண்டும் அதை தன் கண்ணால் பார்க்க வேண்டும் என்று அல்லும் ,பகலும் என்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனது அம்மாவிற்கு நான் பட்ட கடனை இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் என்னால் அடைக்க முடியாது .
உயிர்  என் உடலில் இருக்க காரணம் என் அம்மா என்றால் , உயிர்  என் உடலில் இருந்து பிரியாமல் என்னை காத்து ஏழ்மையிலும் ,இல்லாமையிலும், வறுமையிலும், புன்முறுவலுடன் எத்தகைய இன்பத்தையும் எதிர்பார்க்காது என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது மனைவியையும் நினைத்து இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.
என் எழுத்துக்களுக்கு ஆதரவளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் ,
இறைவனின் அருள் எனக்கு இருந்தால் ,
சித்தர்களின் வழிகாட்டுதல் எனக்கு இருந்தால் ,
என் பணி தொடரும் !
நன்றி !

என்றும் அன்புடன்,
கா.பாலகங்காதரன்.


        இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தன்னைத்தான்-பதிவு-45   
               
          “”பதிவு நாற்பத்திஐந்தை விரித்துச் சொல்ல  
                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :                 

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால் , அதைத் தறித்துப்போடு ; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப் பார்க்கிலும் ,ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
-                             ------மாற்கு - 9 : 43
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் ,அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப் படுவதைப் பார்க்கிலும் ,சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும.”;
                                    --------மாற்கு - 9 : 45
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் ,அதைப் பிடுங்கிப் போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ,ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
                                     -------மாற்கு - 9 : 47

பகுதி முழுமைக்குள் இருக்கிறது
முழுமைக்குள் பகுதி இருக்கிறது
பகுதி பாதிக்கப்பட்டால் ,களங்கப்பட்டால் , மாசுபட்டால்
முழுமை பாதிக்கப்படும்.

முழுமை களங்கப்படாமல் இருக்க வேண்டுமானால்,
பகுதி களங்கப்படாமல் ,பாதிக்கப்படாமல் ,பாதிப்பு அடையாமல்,
இருக்க வேண்டும்.

பகுதி களங்கமற்று இருந்தால்
முழுமையும் களங்கமற்று இருக்கும்.
பகுதி களங்கப்பட்டு விட்டால்
முழுமையும் களங்கப்படும் நிலைக்கு உள்ளாகி விடும்.
பகுதியை களங்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அப்பொழுது தான் முழுமையும் களங்கப்படாமல் இருக்கும்.

பகுதி களங்கப் பட்டிருக்கிறது ;
கரை படிந்திருக்கிறது ;
அசுத்தத்தால் நிரம்பியிருக்கிறது ;
மாசுக்களால் சூழ்ந்திருக்கிறது ;
தவறுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது ;
என்ற உணர்வு  ; என்ற விளக்கம் ;
என்ற அறிவு ; என்ற தெளிவு ;
வந்தால் ஒழிய ,
முழுமையை களங்கப்படாமல் காப்பாற்ற முடியும்
இல்லையென்றால் களங்கப்பட்ட பகுதியால்
முழுமை பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது.

பகுதி களங்கப்பட்டிருக்கிறது என்பதை
கண்டுபிடிக்கும் அறிவு முதலில் நமக்கு வர வேண்டும்.
களங்கப்பட்ட பகுதியை அப்படியே விட்டு விட்டால்
முழுமையும் பாதிக்கப்படும் என்ற தெளிவு நமக்கு வர வேண்டும்.
அப்பொழுது தான் களங்கப்பட்ட பகுதியை
முழுமையிலிருந்து பிரித்து நீக்க முடியும் .
முழுமையிலிருந்து களங்கப்பட்ட பகுதியை
எடுத்து விட்டால் முழுமை களங்கப்படாது.
பகுதி பாதிக்கப்பட்டால் முழுமை பாதிப்படையும்
பகுதி பாதிக்கப்பட வில்லையெனில்
முழுமை பாதிப்புக்கு உள்ளாகாது.
பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி விட்டால்
முழுமை பாதிப்புக்கு உள்ளாகாது.
பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கா விட்டால
முழுமை பாதிப்புக்கு உள்ளாகும்.

பகுதியே முழுமையை பாதிக்கிறது ;
பகுதியே முழுமையை மாற்றுகிறது ;
பகுதியே முழுமையை கெடுக்கிறது ;
பகுதியே முழுமையை அழுக்காக்குகிறது ;
பகுதியே முழுமையை அழிக்கிறது ;
பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையிலிருந்து நீக்கும் திறனறிந்து ,
பகுதியை முழுமையிலிருந்து நீக்கா விட்டால்
முழுமை பாதிப்படைந்து இன்னல்களை விளைவிக்கும்.

நம்முடைய மனமானது நல்லவைகளால் நிரப்பப்பட்டு
களங்கமற்று இருக்கிறது அதாவது முழுமை
களங்கமற்று இருக்கிறது .
தீய எண்ணங்கள் ; தீய சொற்கள் ;
தீய செயல்கள் ஆகியவற்றால்
மனதின் ஒரு பகுதி கெட்டுப் போகிறது
அதாவது மனதின் ஒரு பகுதி
தீயவைகளால் கெட்டுப் போகிறது .

மனமானது நல்லவைகளால் நிரப்பப்பட்டு
முழுமையாக நல்ல தன்மை கொண்டு
நல்ல விதமாக இயங்கும் போது
மனதின் முழுமையும் நல்லவைகளால் நிரப்பப்பட்டிருக்கும் போது
தீயவைகள் மனதின் உள்ளே நுழைந்து
அதன் ஒரு பகுதியை களங்கப்படுத்தி விட்டால்
அதாவது மனதின் முழுமையான
நல்லவைகளின் ஒரு பகுதி தீயவைகளால் நிரப்பப்பட்டால்
நல்லவைகளின் ஒரு பகுதியை தீயவைகள் ஆக்ரமித்துக் கொண்டால்
களங்கமில்லாத முழுமையின் ஒரு பகுதி
களங்கப்படுத்தப் பட்டு விட்டால்
நல்லவைகளால் நிரப்பப்பட்ட முழுமையின் ஒரு பகுதி
தீயவைகளால் நிரப்பப்பட்டால்
முழுமை பகுதியால் பாதிக்கப்பட்டால்
முழுமை பகுதியால் களங்கப்படுத்தப் பட்டால்
முழுமை பகுதியால் அசுத்தப்படுத்தப் பட்டால்
முழுமை பகுதியால் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகும்
களங்கமில்லாத மனம் களங்கப்பட்ட பகுதியால்
முழுமையாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும்
ஆகவே தீயவைகள் மனதில் நுழையும் போதே
அதை கண்டறிய வேண்டும்.

நுழைய விடாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்
நுழைந்து விட்டால் தீயவைகள் மனதில் நுழைந்து விட்டால்
மனதின் ஒரு பகுதியை பாதித்து விட்டால்
மனதின் முழுமையும் பாதிப்பு உள்ளாகாமல் இருக்க
பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வாறு அழிப்பது
பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வாறு கிள்ளி எறிவது
பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வாறு முழுமையிலிருந்து பிரித்து
வெளியே எறிவது என்பதை ஆராய வேண்டும்.
அப்படி எறியா விட்டால் மனம் முழுவதும் பாதிக்கப்படும் ;
தீயவைகளால் பாதிக்கப்படும் தீயவைகளால் நிரப்பப்படும் ;
நல்ல மனதை தீயவைகள் அழித்து விடும் ;
நல்லவைகளால் நிரப்பப்பட்ட மனதை தீயவைகள் அழித்து விடும் ;

அமைதியாக நல்லவனாக சமுதாயத்தில் வாழும் ஒருவன்
முழுமையாக நல்லவனாக இருக்கும் ஒருவன்
முழுமனதும் நல்லவைகளால் நிரப்பப்பட்ட ஒருவன்
ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு
நேர்;வழியில் செல்லாமல் தவறான வழியைத் தேர்ந்தெடுக்கும் போது
அவனுடைய ஒரு பகுதி களங்கப்பட்டு விடுகிறது
தன்னுடைய வழி தவறு என்று உணர்ந்து
களங்கப்பட்ட பகுதியை முழுமையிலிருந்து பிரித்து
துhக்கி எறியா விட்டால்
களங்கப்பட்ட மனமானது களங்கப்பட்ட மனதின்
முழுமையின் ஒரு பகுதியானது
தீயவைகளை எண்ணி ; தீயவைகளை பேசி ;
தீயவைகளை செய்து ;
சுயநல மிகுதியால் ஆணவத்துடன் அலைந்து
தலைகால் புரியாமல் ஆடி
முழுமையும் களங்கப்பட்டு முழுமையாக களங்கப்பட்டு
சமுதாயத்தால் ஏளனத்திற்கும் துhற்றுதலுக்கும் உள்ளாக நேரும்.
வாழ்க்கை இருள் நிறைந்ததாக மாறும்.
பகுதியால் முழுமை பாதிக்கப்பட்டால் இந்த நிலை தான் உண்டாகும்.

நல்லவைகளால் நிரப்பப்பட்ட மனதினுள் அதாவது
முழுமைக்குள் ஒரு பகுதி தீயவைகளால் பாதிக்கப்பட்டால்
முழுமையும் பாதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையிலிருந்து பிரித்து துhக்கி எறிவதன் மூலம்
முழுமையை பாதிப்பிலிருந்து காப்பாற்றலாம்
பாதிப்பு அடையாமல் பாதுகாக்கலாம்
என்பதைத் தான் இயேசு கீழ்க்கண்ட உவமை மூலம் விளக்குகிறார்.

இரண்டு கண்கள் முழுமை - அதில் ஒரு கண் பகுதி ,
இரண்டு கைகள் முழுமை- அதில் ஒரு கை பகுதி ,
இரண்டு கால்கள் முழுமை- அதில் ஒருகால் பகுதி ,
புறத்தே தெரியும் கண் கை கால் ஆகியவற்றை
முழுமையாக உருவகப் படுத்திய இயேசு ,
இரண்டு செவிகள் இரண்டு மூக்குத் துhவரங்கள்
ஆகியவற்றை முழுமைக்கு உருவகப்படுத்தவில்லை .

கண் பார்க்க வேண்டுமென்றால் இமைகளைத் திறக்கும் பார்க்கும் .
பார்க்க வேண்டாமென்றால் இமைகளை மூடிக் கொள்ளும்

கைகள் வேலை செய்யும் போது இயங்கும்
வேலை செய்யாத போது இயங்காது.

கால்கள் இயங்க வேண்டுமென்றால் இயங்கும்
இயங்க வேண்டாமென்றால் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.

காதுகள் இயக்கமற்று இருக்க நினைத்தால் அதை நிறுத்த
ஒலியை கேட்காமல் இருக்க கை விரல்கள் தேவைப்படுகிறது.
அதைப் போல்,
மூக்கின் துவாரங்கள் மணத்தை உணராமல் இருக்க
கை விரல்கள் தேவைப்படுகிறது.
இவைகள் இரண்டும் தன் இயக்க நிலையை தானே நிறுத்திக்
கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வில்லை.

மனமானது இமையை மூடி திறந்து கண்ணையும்,
கைகளையும், கால்களையும்
இயக்கமுள்ள நிலையிலும், இயக்கமற்ற நிலையிலும்
வைக்கும் வகையில் செயல்படுகிறது.
எனவே தான் இயேசு கண்கள் ,கைகள், கால்கள்
ஆகியவற்றை மட்டுமே
உவமை கூறி விளக்க பயன்படுத்துகிறார்.

உன் கண் உனக்கு இடையூறு உண்டாக்கினால்
அதை பிடுங்கி எறிந்து விடு என்றால்,
இரண்டு கண்கள் கொண்ட முழுமையில் ஒரு பகுதி
ஒரு கண் அதை பிடுங்கி எறிந்து விடு என்று பொருள்.
அதாவது பகுதி பாதிக்கப்பட்டால் முழுமையும் பாதிக்கப்படும்
முழுமை பாதிக்கப்படாமல் இருக்க பகுதியை பிடுங்கி
எறிந்து விடு என்று பொருள்.
முழுமையாக களங்கமற்று இருக்கும் மனமானது
களங்கத்தால் மனதின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால்
அது முழு மனதையும் பாதிப்பு அடையச் செய்துவிடும்
எனவே களங்கப்பட்ட மனதின் ஒரு பகுதியை
முழுமையிலிருந்து பிரித்து பிடுங்கி எறிய வேண்டும்.

அதே விளக்கம் தான் கையைப் பிடுங்கி எறி,
காலைப் பிடுங்கி எறி என்று இயேசு சொன்னதற்கும்
அதே விளக்கம் தான்.
முழுவதும் நல்லவைகளால் நிரப்பப்பட்ட
மனிதனின் மனதின் ஒருபகுதியானது
தீயவைகளால் பாதிக்கப்படாமல் இருக்க
பாதிக்கப்பட்ட பகுதியை
மனதிலிருந்து நீக்கும் முறையறிந்து நீக்க வேண்டும்.
அப்படி நீக்கா விட்டால் முழு மனமும்
தீயவைகளால் நிரப்பப்பட்டு வாழ்க்கையானது
இருள் சூழ்ந்து நரகத்தில் தள்ளப்படும்.
வாழ்க்கை துன்பத்துடனும், வேதனையுடனும் ,
கவலையுடனும் இருக்கும் .
என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர்:

    “””தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
         தன்னையே கொல்லும் சினம்””
                       -----திருவள்ளுவர்----திருக்குறள்-----

ஏழையின் சிரிப்பு - பசியின் குமுறல்
பணக்காரனின் சிரிப்பு - இன்பத்தின் வெளிப்பாடு
அரசியல்வாதியின் சிரிப்பு - மக்களின் அறியாமை
தொண்டனின் சிரிப்பு - வெற்றி பெறும் போது
அறிஞனின் சிரிப்பு - தத்துவத்தின் ஆரம்பம்
விஞ்ஞானியின் சிரிப்பு - கண்டுபிடிப்பின் முடிவில்
பட்டதாரியின் சிரிப்பு - வேலை கிடைத்து விட்டதில்
திருடனின் சிரிப்பு - ஏமாற்றி விட்டதில்
தந்தையின் சிரிப்பு – சுற்றத்தார்  வாழ்த்தும் போது
தாயின் சிரிப்பு - தான் பெற்ற மழலையைக் காணும் போது
மழலையின் சிரிப்பு - தாயைக் காணும் போது
டாக்டரின் சிரிப்பு - நோயாளி பிழைத்து விட்டதில்
கணவனின் சிரிப்பு - மனைவிக்கு மட்டுமே தெரியும்
மனைவியின் சிரிப்பு - கணவனின் அன்பு கிடைத்து விட்டதில்
ஆணின் சிரிப்பு - பெண்ணை மயக்குவதில்
பெண்ணின் சிரிப்பு - ஆணை மயக்கி விட்டதில்
மனிதர்கள் பலவிதம் சிரிப்பு அவர்களுக்கு ஏற்ற விதத்தில்
சிரிப்பு உண்மையின் தன்மையாக வெளிப்பட வேண்டும்
போலியின் உருவ நிலையுடன் வெளிப்படக் கூடாது.
உண்மையான சிரிப்பு ஒருவனின் ஆளுமைத் தன்மையை
படம் பிடித்துக் காட்டும்.
போலியான சிரிப்பு ஒருவனின் போலித் தன்மையை
படம் பிடித்துக் காட்டும்.
சிரிப்பை மறந்த ஒரு இனமாக மனித இனம்
மாறிக் கொண்டே வருகிறது.

சமுதாயம் சுட்டிக் காட்டும் ,
சமுதாயம் வழி நடத்தும் ,
சமுதாயம் பின்பற்றச் சொல்லும் ,
தவறான நடைமுறைகளே  !
மனிதன் தன் சிரிப்பை உண்மை சிரிப்பை
மறந்து போலி சிரிப்பை வெளிப்படுத்தக் காரணம்

மனிதன் தன் சுயத்தை , மனிதன் தன் அடையாளத்தை,
கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதே மனிதன் உண்மையாக
சிரிக்க மறந்ததற்கு காரணம் ஆகும்.
அகம் துhய்மையானால் புறத்தில்
உண்மையான சிரிப்பு வெளிப்படும்.
அகம் களங்கமடைந்தால்
நிறைவேறாத ஆசைகளால் நிரப்பப்பட்டால் ,
தேவையானவை கிடைக்காமல் கலக்கமுற்றால் ,
எண்ணியவை கிடைக்காமல் ஏமாற்றமுற்றால் ,
விரும்பியவை கிடைக்காமல் விலகிச் சென்றால் ,
புறத்தில் போலியான சிரிப்பே வெளிப்படும்.

உண்மையான சிரிப்பு வெளிப்பட வேண்டுமானால்
அகம் களங்கமடையாமல் இருக்க வேண்டும்
அகம் களங்கமடையாமல் இருக்க வேண்டுமானல்
பேராசை , சினம் , கடும்பற்று , முறையற்ற பால் கவர்ச்சி,
உயர்வு - தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய
ஆறு குணங்கள் மூலமாக எழும்பும் ,
தான் என்னும் அதிகாரப்பற்று,
தனது என்னும் பொருட்பற்று ,
ஆகிய பற்றுகள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒரு நிலையை அடைந்தவன் மட்டுமே
அகத்தை துhய்மையாக வைத்திருக்க முடியும்.
களங்கமில்லா மனித மனதினுள் ஆறு குணங்களில்
ஒரு குணம் நுழைந்தாலே,
அவன் முழு மனமும் களங்கப்பட்டு போவது போல்
அவனது வாழ்வும் நிம்மதியற்று சோகத்தின்
சாயலாக உலாவரும்.
பகுதி பாதிக்கப்படும் போது முழுமையும் பாதிக்கப்படும்.

களங்கமற்ற முழுமைக்குள் பகுதியாக
சினம் வந்தால் சினம் நுழைந்தால்
அது முழுமையை களங்கப்படுத்தும்
முழுமையை பாதிக்கும்.

சினமே பாவங்களுக்கு எல்லாம் மூலம் ,
சினமே குடியை கெடுக்கும் ,
சினமே துயரை கொடுக்கும் ,
சினமே பொல்லாதவைகளை வர வழைக்கும் ,
சினமே சீர்கேட்டை கொண்டு வரும் ,
சினமே உறவை அறுக்கும் ,
சினமே பழியை உருவாக்கும் ,
சினமே பகையை உண்டாக்கும் ,
சினமே கருணையை அழிக்கும் ,
சினமே அன்பை சிதைக்கும் ,
சினமே பண்பை புதைக்கும் ,
சினமே அறிவை மாய்க்கும் ,
சினமே சிரிப்பை குலைக்கும் ,
சினமே நிம்மதியை கெடுக்கும் ,
சினமே எவரையும் வெறுக்கும் ,
சினமே பகையை உண்டாக்கும் ,
சினமே கெடுதல்களை உறவாக்கும் ,
சினமே உறவுகளை பிரிவாக்கும் ,

சினத்தை ஒருவன் தனக்குள் அனுமதித்துவிட்டால்
தீயபலன்களை சந்திக்க நேரும் ;
துன்பங்களை சுவைக்க நேரும் ;
கண்ணீரை அடைய நேரும் ;
கருத்தினை இழக்க நேரும் ;
இன்பங்களை தொலைக்க நேரும் ;
பண்பை மறக்க நேரும் ;
தகுதியை உடைக்க நேரும் ;

முழுமை பாதிப்படையாமல் இருக்க வேண்டுமானால்
பகுதியாகிய சினம் மனித மனதினுள் உள்ளே நுழையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆசைக்கு தடை ஏற்படும் போது
ஆசை நிறைவேறாமல் தடுக்கப்படும் போது
சினமானது ஏற்படுகிறது
சினமானது வெளிப்படுகிறது
சினம் நண்பர்களிடத்தில் , சுற்றாரிடத்தில்,
உறவினர்களிடத்தில், குடும்பத்தாரிடத்தில் தான்
ஏற்படுமே ஒழிய முகம் தெரியாத ஒருவரிடம் சினம் ஏற்படாது.
நம்மை விட வலிமை குன்றியவர்களிடத்தில்,
எதிர்ப்பை காட்ட முடியாதவர்களிடத்தில் ,
அடிமையாக இருப்பவர்களிடத்தில் ,
அறியாமை கொண்டோரிடத்தில் ,
கருணை உள்ளம் பெற்றவர்களிடத்தில் ,
அன்பால் நிரப்பப்பட்டவர்களிடத்தில் ,
தான் நம் சினம் பலிக்குமே தவிர ,நம்மை எதிர்த்து செயல்படக்
கூடியவர்களிடத்தில் நம்முடைய சினம் பலிக்காது .

நம்முடைய சினம் நண்பர்களிடத்தில், சுற்றத்தாரிடத்தில் நம்மீது
அன்பு கொண்டு நாம் நலம் பெற வேண்டும் .
நன்மைகள் பல பெற வேண்டும் .
உயர்வுகள் பல அடைய வேண்டும் .
இன்பங்கள் பல துய்க்க வேண்டும் .
என வாழ்ந்துகொண்டிருக்கும் நமது நலத்துக்காகவே
இயங்கிக் கொண்டிக்கும் கொண்டிருப்பவர்களிடத்தில்
தான் சினம் உண்டாகும் .

சினம் நம் உள்ளத்தை கெடுக்கிறது ;
பிறர்  மனதை புண்படுத்துகிறது ;
பிறர்  மனதையும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது;
உறவுகளிடையே பிரிவுகளை உண்டாக்குகிறது ;
நண்பர்களிடையே பகைமையை வளர்க்கிறது ;
இத்தகைய சினம் எவ்வளவு கொடியது
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

பிறர்  நம் மீது சினம் கொள்ளும் போது நம் மனம் எவ்வாறு
பாதிப்படைகிறது என்பதை நாம் உணர்ந்தால் சிந்தித்துப் பார்த்தால்
நாம் மற்றவர்  மேல் சினம் கொண்டால் அவருடைய மனமும்
நம் மனம் அடைந்த துன்பத்தை வருத்தத்தை பாதிப்பை அடையும்
என்பதை உணர்ந்து கொண்டால்
நாம் பிறர்  மீது சினம் காட்ட மாட்டோம் .
ஒருவர்  நிம்மதியாக , சந்தோஷமாக,  
அமைதியாக வாழ வேண்டுமானால்,
சினம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சினம் வந்து விட்டால் அது தன் வாழ்க்கையையே
அழித்து விடும் என்பதை உணர வேண்டும்.

முழுமையான களங்கமற்ற மனதிற்குள்
சினம் என்னும் பகுதி நுழைந்துவிட்டால்
முழுமை பாதிக்கப்படும் எனவே சினம்
மனதின் உள்ளே நுழையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தன்னை காக்க வேண்டும் என்று நினைத்தால்,
அதாவது தன்னுடைய வாழ்க்கை அமைதி தழுவியதாக
இருக்க வேண்டும் என்று நினைத்தால் ,
சினம் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம் எழுவதை தடுக்காமல் விட்டு விட்டால்
தன் வாழ்க்கையை அமைதி இல்லாமல் செய்து
நிம்மதியற்றதாக மாற்றி தன் வாழ்க்கையையே
அழித்து விடும்.
என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:

இயேசு,
களங்கப்பட்ட பகுதி முழுமையை களங்கப்படுத்தி விடும்
என்ற காரணத்தினால் ,
களங்கப்பட்ட பகுதியை தனியே பிரித்து
வெளியே எறிந்து விட வேண்டும் என்கிறார்.


அவ்வாறே,                                                                                                  
திருவள்ளுவரும்,
மனித மனம் சினம் என்னும் ஒரு பகுதியால்
களங்கப்பட்டால் களங்கப்பட்ட பகுதியால்
மனித மனம் முழுமையையும் களங்கப்பட்டு விடும்
என்ற காரணத்தினால் களங்கப்பட்ட பகுதியை
உள்ளே இருந்து வெளியேற்றி விடுவதன் மூலம் மனித மனத்தை
முழுமையாக களங்கப்படுவதிலிருந்து காப்பாற்றலாம்,
பாதுகாக்கலாம் என்கிறார்


        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                 போற்றினேன் பதிவுநாற்பத்திஐந்து  ந்தான்முற்றே “”



June 15, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-பண்டுமுளைப்பது- பதிவு-44


     
        இயேசு கிறிஸ்து-ஔவையார்-பண்டுமுளைப்பது- பதிவு-44   
               
      “”பதிவு நாற்பத்திநான்கை விரித்துச் சொல்ல 
                             ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது ; அதை ஒரு மனுஷன் கண்டு , மறைத்து ,அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் ,தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”
                                            --------மத்தேயு - 13 : 44

பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.”
                                             --------மத்தேயு - 13 : 45

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு , போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று , அதைக் கொள்ளுகிறான்.”
                                           ----------மத்தேயு - 13 : 46

பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு , சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.”
                                           ---------மத்தேயு - 13 : 47

அது நிறைந்த போது , அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்து போடுவார்கள்.”
                                             --------மத்தேயு - 13 : 48

பண்பற்ற நிலையில் பரதேசிகளின்
களிமொழி கொஞ்சும்
கண் கவர்  வார்த்தையில் கலங்கி
இன்ப நீரோடையில்
எழில் கீதம் இசைக்கலாம் !
எழுந்து நடம் ஆடலாம் !
அழகுத் தோரணையில்
ஆவாரம் பூ சூடலாம் !
உயர்வின் உச்சியில் புரளலாம் !
புண்பட்ட மனங்களை
ஒதுக்கி விட்டு
ஒய்யார கீதம் இசைக்கலாம் !
ஊழிக் காலம் நம்மை
ஓன்றும் செய்யாது
நன்றியை கொல்லலாம் !
துரோகத்துடன் கை குலுக்கலாம் !
ஆணவக் காரர்கள்
அகம்பாவப் போர்வையில்
அதிகார உச்சியில்
இன்றைய வாழ்வை
நித்தியம் என்று நினைத்து
அநித்தியத்தின் பொருள் உணராமல்
நிலையில்லா வாழ்வை
உண்மை என்று உணர்ந்து
உவகையில் விளையாடி
உச்சி குளிரும்
அந்த பிச்சைக்கார ஏமாளிகளின்
கோமாளிக் கூத்துக்களைக் கண்டு
நாமும் வாழலாம்
நய வஞ்சகத்தின் அரவணைப்புடன்
உயர்வுப் பிச்சை
உழைப்பு தரும் வெகுமானம்
என்பதை மறந்து
அதன் வழி செல்லாமல்
ஏமாற்றி விட்டோம்
அதன் வழி
அரியணை ஏறி விட்டோம் !
இனி இறங்க மாட்டோம் - என்று
பணத்தின் மிதப்பில் குதித்தால்
உயர்வின் அஸ்திவாரம் ஆடிவிடும் .
நசுங்கி விடும் வாழ்வு ,
சிதைந்து விடும் சிந்தனை,
முளைத்து விடும் சவக் குழியின் மேல் புல்.
துரோகத்தின் விளைவால்
முடி சூட்டிய முடிகள்
முடியிழந்து நாறியிருக்கின்றன !
அடி வருடிகளின்
அரசியல் பிச்சை கழுவேறியிருக்கின்றன !
ஏமாற்றுக் காரர்களின்
பொல்லாத ஏமாற்று வித்தை
சில காலம் தான் !
உண்மை உணர்ந்து
தவறின் பிழை உணர்ந்து
செயல் உணர்ந்து
செயலின் விளைவை உணர்ந்து
வருந்தா விட்டால்
நாளைய சந்ததி கண்டிப்பாக
நம் முகத்தில் எச்சம்
உமிழக் கூட வெட்கப்படும் !
என்பதை மனக்கண் முன்
கொண்டு வரும் போது
நெஞ்சில் நிறுத்தும் போது
நித்தியத்திற்கும் , அநித்தியத்திற்கும்
உள்ள வேறுபாட்டை உணரலாம் !
ஆண்டவர்  ஒருவரே நித்தியம்
மற்றவை அனைத்தும் அநித்தியம்.
என்றும் இருந்து இந்த
உலகத்தில் உள்ள உயிர்களை
காப்பாற்றி வரும் ஆண்டவர் ;
ஆண்டு கொண்டிருப்பவர் ;
வழி நடத்துபவர் ;
கட்டி காப்பாற்றுபவர் ;
உயிர்களை ரட்சிப்பவர் ;
அன்பைப் பொழிபவர் ;
அத்தகைய ,
ஆண்டவரை உணர்ந்து ,
ஆண்டவரை அறிந்து ,
ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ,
ஆண்டவரால் ரட்சிக்கப் படுபவரால்
ஆண்டவரால் வழி நடத்துபவரால் மட்டுமே
இதை உணர்ந்து கொள்ள முடியும் ;
நித்தியத்தின் பொருள் உணர முடியும் ;
ஆண்டவரின் மகிமை உணர முடியும் ;

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அநித்தியமே
மாறக் கூடியது ;
மாற்றத்திற்கு உட்பட்டது ;
மாறும் நிலையை உடையது ;
அழியக் கூடியது ;
அழிவை நோக்கியது ;
அழிவை நோக்கி பயணிக்கக் கூடியது.

வாழ்க்கை என்பது இறப்பை நோக்கிய ஒரு பயணம்.
இதனை தடுப்பவர் , நித்திய வாழ்வைப் பெறுகிறார்
நித்தியமே ஆண்டவர்; என்பதை உணருகிறார் ;
பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைப் பெறுகிறார் ;
பிதாவின் அன்புக்கு பாத்திரமாகிறார் ;
பாpசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறார் ;
பிதாவின் குமாரனுக்குள் உட்பிரவேசிக்கிறார் ;

இந்த உலகத்தில் நமக்கு தேவை என்று
எதை சேமித்து வைக்கிறோமோ?
அது நமக்கு சொந்தமில்லை.
என்னுடைய வீடு என்கிறோம்
இன்று நமதாக இருந்த வீடு , நமது இறப்பிற்கு பிறகு ,
நமது மகளுக்கோ , மகனுக்கோ உரிமையாகிறது .
அவர்களுக்கு பிறகு பேரனுக்கோ ,
பேத்திக்கோ சொந்தமாகிறது .
கடனில் மாட்டிக் கொண்டால்
வேறொருவரிடம் கை மாறுகிறது
பல தரப்பட்ட மனிதர்களிடம் சிக்கிக் கொள்கிறது .
வாங்கிய நிலங்கள் ,
கட்டிய வீடுகள் ,
தேடிய செல்வங்கள் ,
பதுக்கிய சொத்துக்கள் ,
மாட்டிய உடைகள் ,
பூட்டிய அணிகலன்கள் ,
ஆக்கிய வியாபாரங்கள் ,
உருவாக்கிய சேமிப்புகள் ,
எதையும் நம்மால் கொண்டு செல்ல முடியாது .
இறந்த பிறகு எல்லாவற்றையும் கொண்டு செல்ல முடியாது .

பிரிந்து கிடப்பதை ,
குவிந்து கிடப்பதை ,
அடுக்கி கிடப்பதை ,
வரிசையாக கிடப்பதை ,
பரந்து கிடப்பதை ,
ஒன்றாக்கி இணைத்து விட்டால்
ஒன்றுக்குள் புகுத்தி விட்டால்
ஒருமைக்குள் அடக்கிவிட்டால்
ஒன்றை கொண்டு செல்ல முடியும் .
பலவற்றை கொண்டு செல்வதை விட
ஒன்றை கொண்டு செல்ல முடியும்.
ஒன்றை கொண்டு செல்வது எளிது
உலக வாழ்க்கைத் தேவைக்காக செயல்படும்
செயல்களால் விளைந்த பாவங்கள் எல்லாவற்றையும்
வைத்துக் கொண்டு பரலோக ராஜ்யத்திற்குள்
ஒருவனால் பிரவேசிக்க முடியாது.
பரலோக ராஜ்யத்தை கைக்கொள்ள முடியாது.
வாழ்க்கைத் தேவையின் அத்தியாவசியத்தை உணர்ந்து ,
எது வாழ்க்கைத் தேவை என்பதை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவை நமக்குத் தேவை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவை நமது வாழ்க்கைத் தேவையைப்
பூர்த்தி செய்யும் என்பதை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவையை வைத்துக் கொண்டு
நம்மால் வாழ முடியாது .
எந்த வாழ்க்கைத் தேவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது .
என்பதை உணர்ந்து
வாழ்க்கைத் தேவையை முறைப்படுத்தி
வாழ்க்கைத் தேவையை நெறிக்குள் உட்படுத்தி
வாழ்க்கைத் தேவையை ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து
பாவங்களை நீக்கி ,
புண்ணியத்தை விதைத்து ,
புண்ணியத்தை பாய்ச்சி ,
புண்ணியத்தை அறுவடை செய்து ,
புண்ணியம் என்ற ஒன்றை கைக்கொள்ள வேண்டும் .

புண்ணியம் என்ற ஒன்றை பெற்றவனால் மட்டுமே ,
புண்ணியம் என்ற ஒன்றினால் நிரப்பப்பட்டவனால் மட்டுமே ,
பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .
பரலோக ராஜ்யத்தின் நித்தியத்தை
நித்திய பொக்கிஷத்தை அடைய முடியும் .
சேர்த்து வைக்கப்பட்ட செல்வங்கள் என்று
சொல்லப்படக்கூடிய சேர்த்து வைத்த பாவங்கள்
அனைத்தையும் நீக்கி,
புண்ணியம் என்ற ஒன்றைப் பெற்று
புண்ணியம் என்ற ஒன்றைக் கொண்டு
பொக்கிஷங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட
பரலோக ராஜ்யம் என்ற நிலத்தை வாங்குகிறான்.

தான் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று
சொல்லப்படக்கூடிய பாவங்கள் அனைத்தையும் விலக்கி
புண்ணியம் என்ற ஒரே சொத்தாக புண்ணியம்
என்ற ஒரே முத்தாக மாற்றிக் கொள்கிறான்.
புண்ணியம் என்ற ஒரே முத்தை பெற்றுக் கொண்டு
சிறக்கிறான்.

பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
ஒருவனால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.
எனவே பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கி
புண்ணியம் என்ற ஒன்றாக மாற்றி
புண்ணியம் என்ற ஒன்றை மட்டும் பெற்று
புண்ணியம் என்ற ஒரே முத்தாக உருவாக்கி
அதன் பயனாக பரலோகராஜ்யத்தைப்
பெற்று கொள்கிறான்.

வாழ்க்கைத் தேவையின் செயல்களால்
விளைந்தசொத்துக்களை
பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கி
புண்ணியம் என்ற முத்தைப் பெற்றவன்
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க தகுதி
உடையவன்.

பரலோகராஜ்யத்தில் அனைத்தும் உள்ளது
பரலோகராஜ்யம் தன்னுள் அனைத்தையும் கொண்டுள்ளது
பரலோகராஜ்யம் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது
என்பதை உணர்பவனால் மட்டுமே ,
பாவம் நீக்கி புண்ணியம் பெறுபவனால் மட்டுமே ,
பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெற முடியும்.

வலையை கடலிலே விரித்து ,மீனைப் பிடித்து ,
அதையை கரையிலே இழுத்து,
நல்லவை - அல்லவைகளைப் பிரித்து எடுத்து,
தேவையானவைகளை எடுத்துக் கொண்டு,
தேவையற்றவைகளை எறிந்து போடுவார்கள்.
தேவையற்றவைகளை உதறி எறிவார்கள்.
அதைப் போல,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெற்று
தன் அத்தியாவசியத் தேவை ,
அவசியமானத் தேவை ,
விருப்பமானத் தேவை ,
ஆசைத் தேவை ,
ஆகியவற்றை அடைய ,
புண்ணியம் என்ற திறவுகோலினால்
பரலோகராஜ்யத்திற்குள் உட்பிரவேசித்து
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெறுவார்கள் .

பரலோகராஜ்யத்தின் மகிமை உணர்ந்தவர்கள்
பரலோகராஜ்யத்திற்குள் உட்பிரவேசிக்கும்
வழியை உணர்ந்தவர்கள் .

அழியக்கூடிய
அநித்திய வாழ்வில்
கவனம் செலுத்தாமல்
நித்தியத்தின் பொருள் உணர்ந்து
நித்திய வாழ்வைத் தேட வேண்டும்
என்கிறார்  இயேசு .



ஒவையார்:

“”பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவுஇன்றி
ஏற்ற கருமம் செயல்””
                                      ------ஒவையார்----மூதுரை----

துரோகம் என்பது வேறு
விரோதம் என்பது வேறு

துரோகம் செய்பவன் துரோகி
விரோதம் பாராட்டுபவன் விரோதி

விரோதியால் ஆபத்து நேராக உண்டு
துரோகியால் ஆபத்து மறைமுகமாக உண்டு

விரோதியின் ஆபத்தை சமாளிக்கலாம்
துரோகியின் ஆபத்தை சமாளிப்பது கடினம்

கொள்கை மாறுபட்டால் பிரிந்து சென்று நேராக
எதிர்ப்பான் விரோதி
மாறுபட்டாலும் பிரிந்து செல்லாமல்
குழி பறிப்பான் துரோகி

விரோதி நேராக நின்று எதிர்ப்பான்
துரோகி வேறு ஒருவனுடன் சேர்ந்து
மறைமுகமாக எதிர்ப்பான்

வளர்த்தவனை எதிர்த்து விட்டுச் செல்வான் விரோதி
வளர்த்தவனை அழித்து விடத் துடிப்பான் துரோகி

நண்பர்கள் விரோதியாகலாம்
விரோதிகள் நண்பராகலாம்

நண்பன் துரோகியாகலாம்
துரோகி நண்பனாக முடியாது

விரோதி நண்பன் ஆனால் உயிரை கொடுப்பான்
நண்பன் துரோகியானால் உயிரை எடுப்பான்

விரோதியிடம் நாம் கவனமாக இருப்பதை விட
துரோகியிடம் கவனமாக இருக்க வேண்டும்

இரண்டு வேறுபட்ட நிலைகளை , முரண்பாடுகளை
ஓன்றுடன் ஒன்று ஒப்பிட்டு
உபயோகப் படுத்துபவன் மனிதன்.
ஒப்பீடு மனிதனால் உபயோகப்படுத்தப்படும்
அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.

ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டே
பழக்கப் பட்டவன் மனிதன்.
ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவான்;
உலகத்தில் உள்ளவற்றை ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவான்;
ஒன்று உயர்ந்தது ; மற்றொன்று தாழ்ந்தது ;
என்று வேறு படுத்துவான்.
ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று கணிப்பான்.

ஒன்றை , ஒரு விளக்கத்தை
தெளிவுபடுத்துவதாக இருந்தால்,
ஒப்பீடு உபயோகப்படும்.

உலகத்தில் உள்ள பொருட்களை
ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்த முடியாது
தொடர்பு காண முடியாது.
இறைவன் உலகில் உள்ள பொருட்களை
ஒன்றை மாதிரி  மற்றொன்றை படைக்கவே இல்லை.
உலகில் உள்ள பொருட்களில் ஒன்றைப் போல
ஒன்று இருக்கவே இருக்காது.
ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மையை
தன்னுள் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும்
ஒரு சிறப்பை ,
ஒரு பண்பை ,
ஒரு தனித்துவத்தை ,
ஒரு குணத்தை ,
ஒரு நிறத்தை ,
ஒரு வடிவத்தை ,
ஒரு மணத்தை ,
ஒரு சுவையை ,
தன்னுள் கொண்டிருக்கும்
உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள
தனித்தன்மையை உணர்ந்து கொள்ளும் போது
மனிதன் பிரபஞ்ச ரகசியங்களையும்
நித்திய - அநித்திய
வேறுபாடுகளைப் புரிந்து கொள்கிறான்


மாளிகையில் வசந்தத்தை அனுபவிக்கும் மனிதனுக்கும்
வீதியோரத்தில் முடங்கிக் கிடக்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு.

செல்வம் உடையவனுக்கும்
செல்வம் இல்லாதவனுக்கும்,
படித்தவனுக்கும்
படிக்காதவனுக்கும்,
அறிவு உள்ளவனுக்கும்
அறிவு இல்லாதவனுக்கும்,
உயர்வான நிலையை அடைந்தவனுக்கும்
உயர்வான நிலையை அடையாதவனுக்கும்,
வெற்றியை கைக் கொண்டவனுக்கும்
வெற்றியை கைக் கொள்ளாதவனுக்கும்,
மேன்மை அடைந்தவனுக்கும்
மேன்மை அடையாதவனுக்கும்,
ஏற்றத்தைப் பெற்றவனுக்கும்
ஏற்றத்தைப் பெறாதவனுக்கும் வேறுபாடு உண்டு.

பிறவிப் பெருங்கடலை அறுத்து
பிறப்பு - இறப்பு சுழற்சியை எரித்து
எல்லாம் வல்ல இறைவனுடன்
இணைய வேண்டுமானால்
கர்ம வினைகளை முற்றிலுமாக களைய வேண்டும் ;
கர்ம வினைகளை கழற்ற வேண்டும் ;
கர்ம வினைகளை கழிக்க வேண்டும் ;
கர்ம வினைகளை எரிக்க வேண்டும் ;
கர்ம வினைகளை தொலைக்க வேண்டும் ;
கர்ம வினைகளை உதற வேண்டும் ;
இதை உணர்ந்து கொள்பவரால் மட்டுமே
ஓப்பீடைப் பற்றியும் ,
நித்தியம் - அநித்தியம் பற்றியும் ,
கர்ம வினை பற்றியும் ,
பாவ - புண்ணியம் பற்றியும் ,
ஒற்றுமை - வேற்றுமை பற்றியும் ,
அறிந்து கொள்ள முடியும்.

கர்ம வினையே ஒருவனை
பிறப்பு - இறப்பு சூழ்நிலையில் சிக்க வைக்கிறது ;
பிறவிப் பெருங்கடலில் நீந்த வைக்கிறது ;
இன்பத்தின் ஏற்றத்திலும்
துன்பத்தின் சகதியிலும் விழ வைக்கிறது ;
கர்ம வினைகளை
அழிப்பவரால் மட்டுமே
இறைவனுடன் இணைய முடியும்.

பாவ - புண்ணியத்தில்
பாவத்தை முற்றிலுமாக களைந்து
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
புண்ணியத்தையும் களைந்த பிறகே
பிறப்பு - இறப்பை நிறுத்த முடியும்
புண்ணியத்தை மட்டும் கொண்டால்
அதற்கான சிறப்பான ஒரு பிறவி உண்டு .  
ஆகவே கர்ம வினைகளை முற்றிலுமாக
களைந்தால் மட்டுமே
பிறப்பு - இறப்பை அறுக்க முடியும்.
இறைவனுடன் இணைய முடியும்.

அரிசி தான் அரிசியாக முளைக்கிறது
வெறும் அரிசி போட்டால் அரிசி முளைக்காது
அரிசியுடன்  உமி சேர்த்தால் மட்டுமே அரிசி முளைக்கும்.
அரிசியிலிருந்து உமியை பிரித்தால் அரிசி முளைக்காது.
ஆன்மாவில் கர்மவினை இருக்கும் வரை தான்
ஆன்மாவுக்கு பிறப்பு - இறப்பு சுழற்சி உண்டு.
ஆன்மாவில் கர்ம வினைப் பதிவுகள் இல்லையெனில்
ஆன்மாவுக்கு பிறப்பு - இறப்பு சுழற்சி கிடையாது.
அரிசியை விட்டு உமியைப் பிரித்தால்
அரிசி எவ்வாறு முளைக்காதோ?
அதைப்போல ,
ஆன்மாவை விட்டு கர்மவினையைப் பிரித்தால்
ஆன்மாவிற்கு பிறவி கிடையாது.

பிறவிப் பெருங்கடலில் நீந்தாமல் இருக்க
கர்ம வினைகளை முற்றிலுமாக கழிக்க
அளந்து பார்க்காமல்
அளவுக்குள் கொண்டு வராமல்
வரையறைக்குள் நிறுத்தாமல்
எல்லைக்;குள் மாட்டிக் கொள்ளாமல்
எவ்வளவு நன்மை பயக்கும் செயல்களை
எவ்வளவு நன்மைக்கு உகந்த செயல்களை
எவ்வளவு நல்லவைகளை தன்னுள் கொண்ட செயல்களை 
செய்ய முடியுமோ ?
அவ்வளவு செயல்களைச் செய்து
பாவத்தின் பலனைக் கழித்து
புண்ணிய பலனைச் சேர்ப்பதற்குரிய
செயல்களை வகுக்க வேண்டும்.
செய்ய வேண்டும்.

கொண்டபேர்  என்றால் கர்மவினைகளை தன்னுள்
கொண்டவர்கள் என்று பொருள்.

ஆற்றல் உடையார்க்கு என்றால்
தன்னால் முடிந்த அளவிற்கு என்று பொருள்.

கொண்டபேர்  ஆற்றல் உடையார்க்கு என்றால்
கர்மவினைகளை தன்னுள் கொண்டவர்கள்
கர்மவினையால் பாதிக்கப் பட்டு
எவ்வளவு தான்  துன்புற்றாலும்
அந்த துன்பத்தின் இடையிலும்
தன் ஆற்றலுக்கு முடிந்த அளவில்
நல்ல காரியங்களை அதிக அளவில் செய்ய வேண்டும்
நன்மைகள் அதிகம் செய்வதால்
கர்ம வினையின் தாக்கம் குறையும்
நன்மைகள் செய்யாவிட்டால் கர்ம வினையின்
தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியாது .


நல்லவைகளை தொடர்ந்து செய்து
கர்ம வினைகளைக் கழித்து
பிறப்பு - இறப்பு அறுத்து
இறைவனுடன் ஒன்றாக இணைந்து
தான் அவனாக மாற வேண்டும்
நித்திய வாழ்வைப் பெற வேண்டும்
என்கிறார்  ஔவையார் .



இயேசு கிறிஸ்து – ஔவையார்:

இயேசு ,
பாவத்தை நீக்கி
புண்ணியத்தை பெற்றவனால் மட்டுமே
பரலோக ராஜ்யத்தை கைக்கொள்ள முடியும்
என்கிறார்.

அவ்வாறே ,
ஔவையாரும் ,
கர்ம வினைகளைக் கழித்தவரால் மட்டுமே
இறைவனுடன் சேர முடியும் என்கிறார்.


      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுநாற்பத்திநான்கு ந்தான்முற்றே""