December 11, 2018

திருக்குறள்-பதிவு-66


                       திருக்குறள்-பதிவு-66

நான் கிறிஸ்தவ
மதத்தை அழித்து
விடுவேன் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நான் செய்யும்
செயல்களால்
நீங்கள் புனிதமாகக்
கருதும்
பைபிளை கிறிஸ்தவ
மக்கள் புறக்கணித்து
விடுவார்கள் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நான் மரணத்தை
கண்டு அஞ்சவில்லை !
உங்கள் கண்களில்
தெரியும் பயம்
நீங்கள் என் மேல்
கொண்டிருக்கும்
பயத்தை தான்
வெளிப்படுத்துகிறது !
நீங்கள் என்னைப்
பார்த்து பயப்படுகிறீர்கள் !
என்பதைத் தான்
உங்கள் கண்கள்
காட்டுகிறது !

நான் என்
உயிருக்கு பயந்து
மன்னிப்பு கேட்க
மாட்டேன் !
நான் எதற்கும் தயார்
என்று புரட்சி செய்தவர் !!

சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அமைதியாக சொன்னதை
ஆவேசமாகவும் ;
ஆக்ரோஷமாகவும் ;
அழுத்தமாகவும் ;
புரட்சிகரமாகவும் ;
சொன்னவர் ;
விஞ்ஞானிகளில்
புரட்சியாளர் என்று
வர்ணிக்கப்பட்டவர் ;
நாத்திகவாதி என்று
சித்தரிக்கப்பட்டவர் ;
பகுத்தறிவாதி
என்று புனையப்பட்டவர் ;
தத்தவமேதை ;
வானவியலாளர் ;
கணிதவியலாளர் ;
என்று பாராட்டப்பட்டவர்

மிகச் சிறந்த
எழுத்தாளர்களில்
சிறந்தவராகக்
கருதப் படுபவர் ;
நல்ல பேச்சாளர்களே
வியந்து கேட்கும்
படியாக தான்
சொல்ல வந்த கருத்தை
ஆணித்தரமாகவும்
அழுத்தம், திருத்தமாகவும்
அனைவரும் எளிதில்
புரிந்து கொள்ளும்
வகையில்
பேசுவதில் வல்லவர் ;
அறிவு பூர்வமான
கேள்விகளைக்
கேட்டு எதிராளியை
வார்த்தைகளால் மடக்கி
சிந்திக்க வைப்பவர் ;
சிலேடையாக
பேசுவதில் வல்லவர் ;
இறையியலைச் சார்ந்தும்
அதனை அடிப்படையாக
வைத்தும்
அதனை எளிமையாக
விளக்கியும்
தெளிவாக பேசுபவர் ;
அறிவியலின்
கலங்கரை விளக்கம்
என்று போற்றப்பட்டு
கலங்கரை
விளக்கமாக இருந்து
அனைவருக்கும்
வழி காட்டியவர் ;


ஐரோப்பாவின்
மிகச் சிறந்த
புத்திசாலியான மனிதர்
என்று போற்றப்பட்டவர் ;
ஜியோமிதியில் வல்லவர் ;
மொழியியல் வித்தகர் ;
மறுமலர்ச்சி இரசவாதி
என்று போற்றப்பட்டவர் ;
14-ஆம் நூற்றாண்டின்
சாக்ரடீஸ் என்று
அழைக்கப்பட்டவர் ;
அனைத்திற்கும் மேலாக
வானிவியல் தந்தை
என்று அழைக்கப்படும்
கலிலியோ அவர்களின்
மிக நெருங்கிய
நண்பர் என்று
சொல்லப்படுகிறவர் ;

இவ்வாறு பலவேறுபட்ட
நிலைகளில்
பல்வேறுபட்ட
திறமைகளைத் தன்னுள்
கொண்டவர் ;
தான் சொன்ன
கருத்திற்காக உயிரையும்
விடத் தயாராக
இருந்தவர் அவர் தான்
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)


ஜியார்டானோ புருனோ
1548-ஆம் ஆண்டு
இத்தாலியில்
நேபில்ஸ் நகருக்கு
அருகில் நோலா
(Nola near Neples)
என்னும் இடத்தில்
பிறந்தார்.

நோலாவில் தான்
சால்டிய கிரேக்கர்கள்
முதன் முதலில்
காலனி அமைத்தனர்
ரோமானியப் பேரரசின்
காலத்திய முக்கிய
நகரங்களில்
நோலாவும் ஒன்று
உயர்குடி மக்கள்
எனப்படும்
கிறித்துவ திருச்சபையின்
துறவிகள் மடங்களும்
இங்கு தான்
கட்டப்பட்டன
இப்படி வரலாற்று
சிறப்பு மிக்க
இடத்தில் பிறந்தார்
ஜியார்டானோ புருனோ

ஜியார்டானோ
புருனோவின்
பிறப்பு பலவகையிலும்
சிறப்பிடம் பெற்றது
நோலா என்ற
வரலாற்று சிறப்பு
மிக்க இடத்தில்
“பாராசல்ஸ்” என்ற
வேதியியல் விஞ்ஞானி
உலகை விட்டு
மறைந்த பிறகு
ஜியார்டானோ புருனோ
பிறந்தார்

ஜீசஸ் சமூகத்தின்
முதல் ஜெனரலான
“லபோராதேய”
பதவி ஏற்பு இப்போது
தான் ஏற்பட்டது

ஜியார்டானோ
புருனோவிற்கு
(Giordano Bruno)
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற கத்தோலிக்க
கிறிஸ்தவப் பெயர்
சூட்டப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  10-12-2018
///////////////////////////////////////////////////////////