November 16, 2018

திருக்குறள்-பதிவு-50


                        திருக்குறள்-பதிவு-50

மக்களுக்கு பயன்படும்
வகையில் கண்டு
பிடிக்கப்படும்
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதற்கு
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்த உலகத்தில்
நிறைய பேர்கள்
இருந்து வந்திருக்கிறார்கள்

சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்று
சரியான ஒரு செயலை
கலிலியோ சொன்னதை
தவறு என்று சொல்லி
கலிலியோவை
விசாரணைக்கு அழைத்த
விசாரணைக்குழு முன்பு
கலிலியோ நின்று
கொண்டு இருந்தார்

பைபிளில்
சொல்லப்பட்டது போல்
தாலமி சொன்ன பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற பூமி மையக்
கோட்பாடு சரி என்றும்
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
நிகோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரியனை மையமாக 
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாடு தவறு
என்றும் சொல்லி
எழுதி கொடுக்க
வேண்டும் என்று
போப்புகள் அடங்கிய நீதி
விசாரணைக் கூடத்தின்
தலைமைப் போப்பு
விசாரணைக்
கைதியாக இருக்கும்
கலிலியோவைப்
பார்த்து கூறினார்


தலைமைப் போப்பு
கலிலியோவைப்
பார்த்து நீ இறந்து
விடுவதற்கு முன்பாக
நீ சொன்ன உன்னுடைய
அறிக்கையை மாற்று
ஏனென்றால் நீ
சொன்ன கோட்பாடு
பைபிள் என்ற
புனிதமான நூலுக்கு
எதிராக இருக்கிறது;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருக்கிறது;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
யார் கருத்து
சொன்னாலும்
அது குற்றம் தான்;
அது தவறு தான்;
ஏனென்றால்
கிறிஸ்தவர்கள்
புனிதமாகக் கருதும்
பைபிள் கடவுளால்
அருளப்பட்டது
பைபிளில் உள்ள
கருத்துக்களை தவறு
என்று சொல்வதற்கு
யாருக்கும் அதிகாரம்
இல்லை என்று
கூறினார்

இந்த பிரச்சினை
ஒன்றும் பெரிய
பிரச்சினையும்
கிடையாது;
ஒன்றும் வருத்தப்பட
வேண்டிய
பிரச்சினையும்
கிடையாது;
எப்படி மாற்ற
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ
அப்படி நானே இதை
மாற்றி விடுகிறேன்;
கடவுள் பைபிளில்
என்ன சொல்லி
இருக்கிறாரோ அப்படியே
மாற்றி விடுகிறேன்;
அப்படியே அறிக்கை
விடுகிறேன்;
ஆனால் ஒரு
விஷயத்தை நீங்கள்
அனைவரும் புரிந்து
கொள்ள வேண்டும்

என்னுடைய அறிக்கையை
சூரியனோ அல்லது
பூமியோ படிக்கப்
போவதில்லை
அவைகள் தங்கள்
நிலையை மாற்றிக்
கொள்ளப் போவது
இல்லை;
உண்மையைப்
பொறுத்தவரை
அவைகள் தங்கள்
வேலையை மாற்றிக்
கொள்ளப் போவது
இல்லை;
பூமி எப்போதும்
சூரியனைச் சுற்றியே
வலம் வரும் என்ற
நிலை இருக்கும் போது
நீங்கள் ஏன் என்னை
மாற்றி சொல்ல
வேண்டும் என்று
இப்படி வற்புறுத்துகிறீர்கள்

நான் இந்த
ஆராய்ச்சியை
செய்வதற்காக
என்னுடைய வாழ்க்கையை
முழுவதுமாக
செலவு செய்திருக்கிறேன்
நான் ஆராய்ச்சி
செய்து உண்மையைக்
கண்டுபிடித்ததற்கான
ஆதாரங்கள
என்னிடம் இருக்கின்றன

மற்ற விஞ்ஞானிகள்
அனைவரும் என்னுடைய
ஆராய்ச்சி சரி என்றும்
என்னுடைய கருத்து
சரி என்றும்
என்னுடைய கோட்பாடு
சரி என்றும்
ஏற்றுக் கொண்டு
உள்ளனர்

என்னுடைய கருத்தை
இன்று நீங்கள்
ஏற்றுக் கொள்ளாமல்
இருக்கலாம்
ஆனால் வருங்காலத்தில்
நீங்களும் என்னுடைய
கருத்தை ஏற்றுக்
கொள்ளத்தான்
போகிறீர்கள்

ஏனென்றால்
“உண்மை மறைந்து
இருக்கும்
ஆனால் ஒரு
போதும் உண்மை
இறந்து விடாது”
என்பதை மட்டும்
நினைவில்
கொள்ளுங்கள்
என்றார் கலிலியோ

---------  இன்னும் வரும்
---------  16-11-2018
///////////////////////////////////////////////////////////