June 26, 2022

ஜபம்-பதிவு-795 (சாவேயில்லாத சிகண்டி-129)

 ஜபம்-பதிவு-795

(சாவேயில்லாத

சிகண்டி-129)

 

நல்ல தந்தையும்

தாயும் இல்லை

என்றால்

பிள்ளைகள்

கஷ்டப்பட வேண்டும்

என்பதற்கு

இந்த சிகண்டினி

தான் உதாரணம்

 

அதைப்போல

நல்ல அரசனும்

அரசியும் இல்லை

என்றால்

ஒரு குடிமகள்

கஷ்டப்பட வேண்டும்

என்பதற்கும்

இந்த சிகண்டி

தான் உதாரணம்

 

அரசன் அரசியாக

இருந்து நீங்கள்

இட்ட கட்டளையை

நான் ஏற்றுக் கொண்டு

நிறைவேற்றுகின்றேன்

 

நான் திருமணம்

செய்து கொள்கிறேன்

 

நீங்கள் யாரைச்

சொல்கிறீர்களோ

அவரைத் திருமணம்

செய்து கொள்கிறேன்

 

என்னுடைய

வாழ்க்கையில் நான்

அசிங்கப்பட

வேண்டும்

அவமானப்பட

வேண்டும்

என்று இருந்தால்

நான்

அசிங்கப்படத்

தான் வேண்டும்

அவமானப்படத்

தான் வேண்டும்

 

அதை யாராலும்

மாற்ற முடியாது

 

கர்மா தன்னுடைய

ஆட்டத்தை

ஆடத்

தொடங்கி விட்டது

 

கர்மா கொடுக்கப்

போகும்

விளைவுக்குப்

பயந்து

ஓடிப் போய்

ஒளிந்து கொள்ள

மாட்டாள் இந்த

சிகண்டினி

 

கர்மா கொடுக்கப்

போகும் விளைவை

சந்திக்கத் தயாராகி

விட்டேன்

 

நான் தயார்

 

திருமணம் செய்து

கொள்ள இந்த

சிகண்டினி தயார்

 

திருமணத்திற்கான

ஏற்பாடுகளைச்

செய்யுங்கள்

 

துருபதன் :

உன்னுடைய

சொல்லை நம்பலாமா

 

சிகண்டினி :

சொன்ன

சொல்லிலிருந்து

அந்த கடவுள்

கூட தவறலாம்

இந்த சிகண்டினி

தவற மாட்டாள்

 

என்று சொல்லி

விட்டு

அந்த அறையை

விட்டு

வெளியேறினாள்

சிகண்டினி

 

சிகண்டினியின்

பெற்றோர்கள்

சிகண்டினிக்கு

திருமணம் செய்து

வைப்பதற்கான

அனைத்து

வேலைகளையும்

செய்ய

ஆரம்பித்தனர்

 

பெண்ணான

சிகண்டினி

பெண்ணைத்

திருமணம்

செய்து கொள்வாரா

என்பதைத்

தெரிந்து கொள்ள

விரும்புபவர்கள்

சிகண்டினியைப்

பின் தொடருங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-794 (சாவேயில்லாத சிகண்டி-128)

 ஜபம்-பதிவு-794

(சாவேயில்லாத

சிகண்டி-128)

 

உன்னைப் போன்ற

ஒரு ஆணால்

மட்டுமே அஸ்திர

சாஸ்திரங்களை

இவ்வளவு

நுணுக்கமாகவும்,

திறமையாகவும்

கற்க முடியும்

ஒரு பெண்ணால்

கற்க முடியாது

என்று துரோணர்

என்னிடம்

சொன்ன போது கூட

ஏன் ஒரு

பெண்ணால்

கற்க முடியாதா

உங்களிடம் கல்வி

கற்ற நான்

ஒரு பெண்

என்று என்னால்

சொல்லக் கூட

முடியவில்லை

 

என்னை

கூண்டுக் கிளியாக

வளர்த்தீர்கள்

 

தந்தையாகவும்

தாயாகவும் இருந்து

ஒரு பிள்ளையை

எப்படி வளர்க்க

வேண்டுமோ அப்படி

வளர்க்காமல் ஒரு

அடிமையாக

வளர்த்தீர்கள்

 

பெண்ணாக

இருக்கும் நான்

பெண்ணை திருமணம்

செய்தாலும்

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக மாறி

திருமணம்

செய்தாலும்

எனக்கு

பிரச்சினை ஏற்படும்

என்று நான்

எவ்வளவு எடுத்துச்

சொல்லியும்

என்னுடைய

உணர்வுகளைப்

புரிந்து கொள்ளாமல்

என்னுடைய

வார்த்தைகளுக்கு

மதிப்பு கொடுக்காமல்

எனக்கு திருமணம்

செய்து வைக்க

வேண்டும்

என்று முயற்சி

செய்கிறீர்கள்

 

நான் திருமணம்

செய்ய வேண்டும்

என்று அரசனாகவும்

அரசியாகவும்

இருந்து

கட்டளை இடுகிறீர்கள்

 

தந்தையாகவும்

தயாகவும் இருந்து

ஒரு பிள்ளைக்கு

செய்ய

வேண்டியவைகளை

நீங்கள் செய்யா

விட்டாலும்

ஒரு பிள்ளையாக

இருந்து செய்ய

வேண்டியவைகளை

நான் செய்து

கொண்டு தான்

இருக்கிறேன்

 

நான் ஒரு

ஆண் என்று

இந்த உலகத்திற்கு

நீங்கள் சொல்லிய

பொய்யை

இன்று வரை நான்

காப்பாற்றிக் கொண்டு

தான் இருக்கிறேன்

 

தந்தையாகவும்

தாயாகவும் இருந்து

என்னை அடிமையாக

வைத்து

கஷ்டப்படுத்தினீர்கள்

இப்போது

அரசனாகவும்

அரசியாகவும் இருந்து

குடிமகள் எனற

முறையில்

என்னை கஷ்டப்பட

வைக்கப் போகிறீர்கள்

 

தந்தையாகவும்

தாயாகவும் இருந்து

ஒரு பிள்ளைக்கு

செய்ய

வேண்டியவைகளை

நீங்கள் எனக்கு

செய்யவில்லை

அரசனாகவும்

அரசியாகவும் இருந்து

ஒரு குடிமகளுக்கு

செய்ய

வேண்டியவைகளையும்

நீங்கள் எனக்கு

செய்யவில்லை

 

ஒரு பிள்ளைக்கு

நல்ல தந்தையாகவும்

தாயாகவும் நீங்கள்

நடந்து கொள்ளவில்லை

ஒரு குடிமகளுக்கு

நல்ல அரசனாகவும்

அரசியாகவும்

நீங்கள் நடந்து

கொள்ளவில்லை

 

நீங்கள் எனக்கு

நல்ல தந்தையாகவும்

தாயாகவும் நடந்து

கொள்ளாமல்

இருக்கலாம்

ஆனால்

நான் இன்று வரை

உங்களுக்கு ஒரு

நல்ல பிள்ளையாக

நான் நடந்து

கொண்டிருக்கிறேன்

 

நீங்கள் எனக்கு

நல்ல அரசனாகவும்

அரசியாகவும் நடந்து

கொள்ளாமல்

இருக்கலாம்

ஆனால் நான்

இன்று வரை

உங்களுக்கு ஒரு

நல்ல குடிமகளாக

நான் நடந்து

கொண்டிருக்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-793 (சாவேயில்லாத சிகண்டி-127)

 ஜபம்-பதிவு-793

(சாவேயில்லாத

சிகண்டி-127)

 

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறிய பிறகு

மாற்றுப்

பாலினமாக வாழ்ந்து

கொண்டு இருக்கும்

என் மேல்

உண்மையான

அன்பு வைத்து

என்னைப்

புரிந்து கொண்டு

என்னைத்

திருமணம்

செய்து கொண்டு

என்னுடன் குடும்பம்

நடத்த வேண்டும்

என்று யார்

விரும்புகிறாரோ

அவரை

அந்த நல்லவரை

இந்த உலகம்

காணாத உத்தமரை

கண்டதும்

சொல்கிறேன்

அவரை எனக்கு

திருமணம் செய்து

வையுங்கள்

 

துருபதன் :

அது வரை

என்னால் காத்துக்

கொண்டிருக்க

முடியாது

 

திருமணம் உடனே

நடக்க வேண்டும்

அதுவும் இப்போதே

நடக்க வேண்டும்

 

திருமணத்தைத்

தள்ளிப் போட

முடியாது

 

இப்போது நான்

சொல்லும்

பெண்ணை

திருமணம் செய்து

கொள்ள முடியுமா

முடியாதா

 

சிகண்டினி :

முடியாது

 

துருபதன் :

உன்னுடைய அப்பா

என்ற முறையில்

கேட்கிறேன்

திருமணம் செய்து

கொள்ள முடியுமா

முடியாதா

 

சிகண்டினி :

முடியாது

 

துருபதன் :

அப்பாவாக இருந்து

அன்பாக கேட்டால்

என்னுடைய

வார்த்தைக்கு

மரியாதை

கொடுக்க மாட்டேன்

என்கிறாய்

 

நீ என் நாட்டில்

வசிக்கும் ஒரு

குடிமகள்

என்ற முறையில்

அரசனாக இருந்து

கட்டளை இடுகிறேன்

நான் சொல்லும்

பெண்ணை நீ

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

 

இது அரச கட்டளை

 

சிகண்டினி :

தந்தையே

 

துருபதன் :

கட்டளை இட்டது

உன்னுடைய

தந்தை இல்லை

இந்த நாட்டின்

அரசன்

 

சிகண்டினி :

தாயே

 

தந்தை

தன்னை

தந்தை இல்லை

அரசன் என்கிறார்

 

நீங்கள் என்ன

சொல்லப் போகிறீர்கள்

 

தாயாக இருக்கப்

போகிறீர்களா

அல்லது

அரசியாக இருக்கக்

போகிறீர்களா

 

கௌசவி :

அவர் உனக்குத்

தந்தை

என்றால் தான்

நான் உனக்குத்

தாயாக

இருக்க முடியும்

 

அவர் உனக்கு

அரசன் என்றால்

நான் உனக்கு

அரசியாகத் தானே

இருக்க முடியும்

 

அரசர் இட்ட

கட்டளையே

அரசியான

என்னுடைய

கட்டளையும்

 

சிகண்டினி :

பெண்ணாகப் பிறந்த

என்னை ஆண்

என்ற பொய்யைச்

சொல்லி

இந்த உலகத்திற்கு

அறிமுகப்

படுத்தினீர்கள்

நான் ஒரு பெண்

என்பது இந்த

உலகத்திற்கு

தெரியக் கூடாது

என்பதற்காக

யாருடனும்

பேச விடாமல்

யாருடனும்

பழக விடாமல்

யாருடனும்

விளையாட விடாமல்

தனியறையில்

வைத்து என்னை

வளர்த்தீர்கள்

 

நான் கல்வி கற்க

துரோணரிடம்

சென்ற போது கூட

ஆண் உடை

தரித்து தான்

சென்றேன்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-792 (சாவேயில்லாத சிகண்டி-126)

 ஜபம்-பதிவு-792

(சாவேயில்லாத

சிகண்டி-126)

 

துருபதன் :

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறிய பிறகு

திருமணம் செய்து

கொள்கிறேன்

என்கிறாயா

 

சிகண்டினி :

நான் அப்படிச்

சொல்லவில்லை

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக மாறினாலும்

உடனே யாரையும்

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அப்படியே திருமணம்

செய்து கொண்டாலும்

அது தவறான

ஒன்றாகத் தான்

இருக்கும்

சரியான ஒன்றாக

இருக்காது

 

மாற்றுப்

பாலினத்தவர்களை

புரிந்து

கொண்டவர்கள்

மாற்றுப்

பாலினத்தவர்களை

திருமணம் செய்து

கொள்வதில் தவறில்லை

 

ஆனால்

மாற்றுப்

பாலினத்தவர்களை

புரிந்து கொள்ளாதவர்கள்

திருமணம் செய்தால்

பிரச்சினை தான்

ஏற்படும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

உடல்

அமைப்பைப் பற்றியும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

வாழ்க்கை

முறைகளைப் பற்றியும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களுக்கும்

உணர்வுகள் இருக்கிறது

அந்த உணர்வுகளுக்கும்

மதிப்பு கொடுக்க

வேண்டும் என்றும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களை

திருமணம்

செய்து கொண்டால்

இந்த உலகம்

ஏளனப் படுத்தும்

வாழ விடாது

என்பது தெரிந்தும்

இந்த உலகத்தில்

வாழும் மக்களின்

ஏளனங்களுக்கு

பயப்படாமல்

மாற்றுப்

பாலினத்தவர்களை

திருமணம்

செய்து கொண்டு

இந்த

சமுதாயத்தில்

வாழ வேண்டும்

வாழ முடியும்

என்றும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உண்மையான

அன்பு வைத்து

உண்மையாக

திருமணம்

செய்து கொண்டு

உண்மையாக

குடும்பம்

நடத்த வேண்டும்

என்றும்

 

யார்

நினைக்கிறாரோ

அவரை

கண்டிப்பாக

திருமணம்

செய்து கொள்வேன்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உள்ள

இரக்கத்தின்

காரணமாகவோ

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உள்ள

ஆசையின்

காரணமாகவோ

யாரேனும்

திருமணம் செய்ய

முன் வந்தால்

அவர்களை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

 

ஏனென்றால்

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் இரக்கப்பட்டு

திருமணம் செய்து

கொள்பவர்களும்

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உள்ள

ஆசையின்

காரணமாக

திருமணம் செய்து

கொள்பவர்களும்

மாற்றுப்

பாலினத்தவர்களுடன்

நீண்ட நாட்கள்

வாழ மாட்டார்கள்

 

அவர்கள் ஒரு

தேவைக்காக

வருவார்கள்

அவர்களுடைய

தேவை முடிந்தவுடன்

சென்று விடுவார்கள்

 

இத்தகையவர்களை

திருமணம் செய்து

கொண்டால்

திருமண

வாழ்க்கையும்

நீண்ட நாட்கள்

நீடிக்காது

 

குடும்ப

வாழ்க்கையும்

இனிக்காது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-791 (சாவேயில்லாத சிகண்டி-125)

 ஜபம்-பதிவு-791

(சாவேயில்லாத

சிகண்டி-125)

 

விரதத்தின் போது

பெண்ணைத்

தொடக் கூடாது

 

அதனால் விரதம்

முடியும் வரை

இருவரும் விலகி

இருப்போம்

என்னுடைய விரதம்

முடிந்த பிறகு

இருவரும்

இணைந்து

ஒன்றாக குடும்ப

வாழ்க்கையைத்

தொடங்கலாம்

என்று

உன்னுடைய

மனைவிக்கு

புரியும்படி சொல்லி

உன்னுடைய

மனைவியிடம்

இருந்து

விலகி இரு

 

சிவபெருமான்

சொல்லியபடி

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

பிறகு உன்

மனைவியுடன்

குடும்பம் நடத்து

 

ரகசியத்தைக்

காப்பாற்று

 

சிகண்டினி :

எந்த ஒரு

ரகசியத்தையும்

நீண்ட நாட்கள்

மறைத்து வைத்து

காப்பாற்ற முடியாது

 

பெண்ணாக

இருக்கும்

நான் ஒரு

பெண்ணை

திருமணம்

செய்து கொண்டு

நான் ஒரு ஆண்

கிடையாது என்பதை

எவ்வளவு நாட்கள்

என்னால் மறைக்க

முடியும்

 

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாறுவதற்கு

பல ஆண்டுகள்

ஆகி விட்டால்

என்ன செய்வது

 

நான் ஒரு

பெண்ணை திருமணம்

செய்து கொண்டு

நான் பெண்ணிலிருந்து

ஆணாக மாறுவதற்கு

முன் நான் ஒரு

பெண் என்பதை

அந்தப் பெண்

கண்டுபிடித்து

விட்டாலும்

அந்தப் பெண்

என்னை ஏற்றுக்

கொள்ள மாட்டாள்

அவமானப்

படுத்துவாள்

 

அதைப்போல

நான் ஒரு

பெண்ணை

திருமணம்

செய்து கொண்டு

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறினாலும்

அந்தப் பெண்

என்னை ஏற்றுக்

கொள்ள மாட்டாள்

அவமானப்

படுத்துவாள்

 

நான் பெண்

என்று தெரிந்ததும்

ஏற்படப் போகும்

அவமானத்தை விட

நான் மாற்றுப்

பாலினம் என்று

தெரிந்த பிறகு

ஏற்படும்

அவமானம் மிகக்

கொடுமையானதாக

இருக்கும்

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

மாற்றுப்

பாலினத்தவர்கள்

திருமணம்

செய்து கொள்ள

முடியுமா

அவர்களால்

குடும்பம்

நடத்த முடியுமா

என்பது பற்றி

உங்களுக்கு

தெரியவில்லை

 

மாற்றுப்

பாலினத்தவரைப்

பற்றி

நீங்கள் புரிந்து

கொள்ளவேயில்லை

 

பெற்றோர்களான

உங்களாலேயே

மாற்றுப்

பாலினத்தைப் பற்றித்

தெளிவாகப்

புரிந்து கொள்ள

முடியாத போது

இந்த உலகத்தில்

உள்ள மக்களால்

மாற்றுப்

பாலினத்தவர்களைப்

பற்றி

எப்படி புரிந்து

கொள்ள முடியும்

 

எப்படி இருந்தாலும்

நான் இப்போது

திருமணம் செய்து

கொண்டால் எனக்கு

கிடைக்கப் போவது

அவமானம் மட்டுமே

 

அதனால் எனக்கு

இப்போது திருமணம்

வேண்டாம்

 

இப்போது

திருமணம் செய்து

கொள்ளவும் நான்

விரும்பவில்லை

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////