December 30, 2018

திருக்குறள்-பதிவு-77


                     திருக்குறள்-பதிவு-77

“இந்தப் பிரபஞ்சத்தில்
உட்சுவாசத்தை
(INNER BREATH)
யாரெல்லாம்
செய்கிறார்கள்
என்று தெரியுமா?” என்றார்
ஜியார்டானோ புருனோ

“எனக்கு தெரியாது!”
என்றாள் அந்தப் பெண்

“இந்தப் பிரபஞ்சத்தில்
உள்ள உயிரினங்கள்
அனைத்தும்
உட்சுவாசத்தை
செய்து வருகின்றன
மனிதர்களில் ஒருசில பேர்
உட்சுவாசத்தை முறைப்படி
உணர்ந்து செய்து
வருகின்றனர்” என்றார்
ஜியார்டானோ புருனோ

மேலும்
ஜியார்டானோ புருனோ
சில தகவல்களை
அந்தப் பெண்ணிற்கு
சொல்கிறார்
“உயிரினங்கள் அனைத்தும்
அவைகளுக்கு ஏற்ற
வகையில் உட்சுவாசத்தை
தொடர்ந்து செய்து
வருகின்றன ;
இவ்வாறு தொடர்ந்து
இந்த உயிரினங்கள்
உட்சுவாசத்தை செய்து
வருகின்ற காரணத்தினால்
இயற்கையில் தங்களுக்கு
ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளை
முன்கூட்டியே உணர்ந்து
தங்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளிலிருந்து
தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கான
வழிமுறைகளை வகுத்து
இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையோடு
இணைந்து ஒன்றுபட்டு
வாழ்கின்றன ! ”

“ஆனால், மனிதன்
உட்சுவாசம் என்பது என்ன
என்று தெரியாத
காரணத்தினாலும்
உட்சுவாசத்தை முறைப்படி
கற்றுத் தேர்ந்து
செய்யாத காரணத்தினாலும்
இந்தப் பிரபஞ்சத்தில்
உயிருடன் வாழும் போது
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளை
முன்கூட்டியே உணர்ந்து
தங்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளிலிருந்து
தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கான
வழிமுறைகளை வகுக்காமல்
இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையோடு இணைந்து
வாழ முடியாத நிலையை
மனிதன் அடைகிறான் ! ”
என்றார்
ஜியார்டானோ புருனோ

“இத்தகைய சிறப்பு
மிக்க உட்சுவாசத்தை
தெரிந்து கொண்டால்
அற்புதம் ! அற்புதம் !
என்று அலையாமல்
அற்புதத்தை உணர்ந்து
அற்புதமாகவே
மாறி விடுவாய்………..!!”
என்றார்
ஜியார்டானோ புருனோ

”என் அருகில் வா இங்கே
வந்து அமர்ந்துகொள்
உன் சுவாசத்தை
அடி வயிற்றிலிருந்து மேல்
நோக்கி நன்றாக இழு
உன் சுவாசம்
வெளிப்புறமாகவும்
உட்புறமாகவும்
ஓடிக் கொண்டு இருப்பதை
நீ இப்போது உணர்கிறாய்”.

“ஆமாம் ! ஆமாம் ! நான்
அதை உணர்கிறேன்
புருனோ……………………………! ”

“நன்றாக உன்
சுவாசத்தை கவனி
இரண்டு சுவாசங்களும்
ஓடிக் கொண்டு
இருப்பதை உண்ர்கிறாய்”.

“ஆமாம் ! ஆமாம் ! நான்
அதை உணர்கிறேன்
புருனோ……………………………! ”

இப்போ உன் சுவாசத்தை
வேகப்படுத்து !
வேகப்படுத்து !
இன்னும்
வேகப்படுத்து !!
இன்னும்
வேகப்படுத்து !!!
வேகப்படுத்திக் கொண்டே
இருக்கிறாய்……………………………………. !
வேகப்படுத்திக் கொண்டே
இருக்கிறாய்……………………………………. !
சுவாசம்
வேகத்தின் உச்சத்தை
அடைகிறது
உன் உடம்பு இப்போது
அதிர ஆரம்பிக்கிறது………….!
உன் உடம்பு அதிர்வதை
இப்போது நீ
உணர்கிறாய் !
அந்த சக்தி பல்கிப்
பெருகுகிறது !
பெருகிக் கொண்டே
இருக்கிறது !
அந்த சக்தி உன்
உடம்பை முழுவதும்
தன் கட்டுப் பாட்டிற்குள்
கொண்டு வந்து விட்டது…….!
ஆமாம் ஆமாம்
இந்த பிரபஞ்சத்தின்
ஆளுகைக்குள் நீ
வந்து விட்டாய்……………………………….!
இப்போது நீ அற்புதத்தின்
வாயிலை அடைந்து
விட்டாய்…………………!
ஆமாம் உன்
வெளி சுவாசம் முழுவதும்
நின்று விடுகிறது !!!
இப்போது உன்
உட்சுவாசம்
மட்டுமே ஓட
ஆரம்பிக்கிறது,,,,,,,,,,,,!

“உன்னுடைய உட்சுவாசம்
நேராக உன் தலை
உச்சியை சென்று
மோதுகிறது……………….!”

“ஐயோ! புருனோ
என்னால் தாங்க
முடியவில்லை நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்………………………….?
செத்துக் கொண்டு
இருக்கிறேன்………………………..?
என்னை காப்பாற்று,,,,,,,,,!
புருனோ என்னை
காப்பாற்று………………………………..!”

“சுவாசம் உன்
உச்சந்தலையின்
மையத்தை நோக்கி
நகர்கிறது”

“ஐயோ! புருனோ
என்னால் தாங்க
முடியவில்லை நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,!
செத்துக் கொண்டு………………..
செத்து ………………….
என்னை,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,,
காப்பாற்று,,,,,,,,,,,,,,,,,,
காப்பாற்று,,,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,!

---------  இன்னும் வரும்
---------  29-12-2018
///////////////////////////////////////////////////////////


December 28, 2018

திருக்குறள்-பதிவு-76


                       திருக்குறள்-பதிவு-76

“அற்புதம் என்றால்
என்ன என்று
தெரியுமா?” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“மோசஸ்,
இயேசு கிறிஸ்து
ஆகியோர் செய்தது
தான் அற்புதத்தில்
மிகப் பெரிய அற்புதம்,
அது தான்
உண்மையான அற்புதம்”
என்றாள் அந்தப் பெண்

“அற்புதம் என்றால்
அற்புதம் மட்டுமே ;
அற்புதத்தில் மிகப்
பெரிய அற்புதம் ;
உண்மையான
அற்புதம் ; என்பது
எதுவும் கிடையாது
அற்புதத்தை உணராதவர்கள்
அற்புதம், அற்புதம் என்று
தேடி அலைவார்கள்
அற்புதத்தை உணர்ந்தவர்கள்
அற்புதம், அற்புதம்
என்று அற்புதம் பின்னால்
அலைய மாட்டார்கள்

இதுவரை இந்த
உலகத்தில் பிறரால்
நிகழ்த்தி காட்டப்பட்ட
அற்புதங்களும் ;
அற்புதம் என்ற பெயரில்
பிறரால் தற்போது
நிகழ்த்தி காட்டப்பட்டுக்
கொண்டிருக்கும்
அற்புதங்களும் ;
அற்புதம் அல்ல
அற்புதம் என்பது
எல்லாவற்றிற்கும்
மேலானது ;
அந்த அற்புதத்தை அறிந்து
அந்த அற்புதத்துடன்
இணைவது தான்
அற்புதத்தில் அற்புதம் ;

முதலில் அற்புதம்
என்றால் என்ன என்று
அறிந்து கொள் ;
அதற்கு பிறகு
அற்புதத்தை உணரலாம் ;
அற்புதம் என்றால் என்ன
என்று அறியாமல்
அற்புதத்தை உணர
முடியாது” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“அற்புதம் என்றால்
என்ன என்று எனக்கு
சொல்லித் தாருங்கள்
புருனோ” என்றாள்
அந்தப் பெண்.

“கல், மண்,
செடி, கொடி, மரம்
விலங்குகள்,
மனிதர்கள்- என
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தும் ஒன்றுடன்
ஒன்று இணைக்கப்பட்டுள்ளது
இந்தப் பிரபஞ்சத்தில்
உள்ள எந்த ஒன்றும்
தனித்து இல்லை எல்லாம்
ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது

இவைகள் அனைத்தும்
ஒரு குறிப்பிட்ட ஒன்றால்
அறிய முடியாத ஒன்றால்
கண்ணுக்குத்
தெரியாத ஒன்றால்
சூட்சும நிலையில்
இணைக்கப் பட்டுள்ளன

அது மட்டுமல்ல
அவைகள் ஒவ்வொன்றும்
அவைகளுக்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
நியதிகளின்படி
அணு அளவும்
பிசகாமல் அனைத்தும்
இயக்க ஒழுங்கு
மாறாமல் இயங்கிக்
கொண்டு இருக்கிறது

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதையும் ;
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதையும் ;
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதையும்
அறிந்து கொள்வது
தான் அற்புதம்
அதை உணர்வது
கொள்வது தான் அற்புதம்

இந்த அற்புதத்தை
உணர்ந்து கொண்டால்
வேறு அற்புதத்தை
தேடி ஓட வேண்டிய
அவசியமில்லை ;
அற்புதத்தை
நிகழ்த்துபவர்களைக்
கண்டு அதிசயப்பட
வேண்டிய அவசியமில்லை ;
அற்புதம் செய்பவர்களிடம்
அடிபணிய வேண்டிய
அவசியம் இல்லை ;

அற்புதம் என்றால்
என்ன என்று
தெரிந்து கொள்
அப்போது நீ அற்புதம்
அற்புதம் என்று
அலைய மாட்டாய் ;
அத்தகைய அற்புதத்தை
தெரிந்து கொள்” என்றார்
ஜியார்டானோ புருனோ

“அந்த அற்புதத்தை
எனக்கு காட்டுவீர்களா
அந்த அற்புதத்தை காணும்
வழி முறையை எனக்கு
சொல்லித் தருவீர்களா
புருனோ” என்றாள்
அந்தப் பெண்

“அற்புதம் என்றால் என்ன
என்று தெரிந்து கொள்ள
வேண்டுமானால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர
வேண்டுமானால் - நீ
உன் சுவாசத்தை
மாற்ற வேண்டும்
சுவாசத்தை மாற்றுவதன்
மூலம் - நீ அற்புதம்
என்றால் என்ன என்பதை
உணர முடியும்

உட்சுவாசம்
வெளி சுவாசம் என்று
ஓடிக் கொண்டிருக்கும்
சுவாசத்தை உட்சுவாசமாக
(Inner Breath)
மட்டுமே மாற்ற
வேண்டும்” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“எனக்கு சுவாசத்தை
உட்சுவாசமாக மட்டுமே
எப்படி மாற்றுவது
என்பதை சொல்லித்
தாருங்கள்” புருனோ
என்றாள் அந்தப்பெண்

இங்கே வா இந்த
இடத்தில் வந்து உட்கார்
உனக்கு சுவாசத்தை
எப்படி மாற்ற வேண்டும்
வெளி சுவாசத்தை நிறுத்தி
உட்சுவாசமாக மட்டுமே
சுவாசத்தை எப்படி
ஓட வைப்பது
என்பதை செய்து
காட்டுகிறேன் என்றார்
ஜியார்டானோ புருனோ

---------  இன்னும் வரும்
---------  28-12-2018
///////////////////////////////////////////////////////////


December 27, 2018

திருக்குறள்-பதிவு-75


                     திருக்குறள்-பதிவு-75

ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிராக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரைப் பிடிக்காதவர்கள்
காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக சொல்லப்பட்ட
வார்த்தைகளாக இருந்தும் ;
மதவெறியின் காரணமாக
அவர் மீது
சுமத்தப்பட்ட போலிக்
குற்றச்சாட்டுக்களாக
இருந்தும் ;  அவைகள்
உண்மையானவைகளா
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் ஜியார்டானோ
புருனோ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்ற
காரணத்திற்காக அவைகள்
அனைத்தும் ஆதாரங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால், ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
ஆதரவாக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரது ஆதரவாளர்களால்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
என முடிவு செய்யப்பட்டு
அந்த சம்பவங்களில்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
உண்மையானவைகளாக
இருந்தாலும் அவைகள்
அனைத்தும் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை
அவைகள் அனைத்தும்
புறக்கணிக்கப் பட்டன.

இவ்வாறு மக்களுடைய
மனநிலை எந்த
நிலையில் இருக்கிறது
என்பதை ரகசியமாக
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த சமயத்தில்
செனட் சபை கூட்டப்பட்டு
செனட் சபை
உறுப்பினர்கள் கலந்து
கொண்ட கூட்டத்தில்
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்கான
தீர்மானத்தின் மீது
விவாதம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது,

ஜியார்டானோ புருனோவின்
மீது பல்வேறு
குற்றச்சாட்டுக்களை சுமத்தி
ஜியார்டானோ புருனோவை
ஒரு குற்றவாளியாக
முத்திரை குத்தி
அவரை தாக்கியே
அனைவரும் விவாதத்தில்
பேசிக் கொண்டு இருந்தனர்
ஒரு தீர்மானத்தின் மீது
எதிர்த்துப் பேச
ஆளில்லாமல்
ஒருதலைப் பட்சமாக
ஜியார்டானோ புருனோவை
தாக்கிப் பேசிக்
கொண்டிருந்தது அங்கு
தான் நடந்து
கொண்டு இருந்தது

விவாதத்தின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாரணைக்கு
அனுப்பட வேண்டும்
என்ற தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு
நடத்தப்பட்டது

தீர்மானத்தின் மீது
நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்
மொத்தமுள்ள 172 செனட்
உறுப்பினர்களில்
தீர்மானத்திற்கு ஆதரவாக
142 உறுப்பினர்களும்
தீர்மானத்திற்கு எதிராக
10 உறுப்பினர்களும்
வாக்களித்து இருந்தனர்,
20 உறுப்பினர்கள்
வாக்களிக்கவில்லை.

////////////////////////////////////////////////////
வாக்கெடுப்பின் முடிவு
 மொத்த ஓட்டுகள் – 172
           ஆதரவு – 142
           எதிர்ப்பு -  10
 வாக்களிக்காதவர்கள் -20
////////////////////////////////////////////////////////

தீர்மானத்தின் மீது
நடைபெற்ற
வாக்கெடுப்பைத் தொடர்ந்து
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்குத் தேவையான
அனைத்து பணிகளும்
செய்யப்பட்டன.

ஜியார்டானோ
புருனோவை ரோம்
நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்காக
அழைத்துச் செல்வதற்காக
நிறுத்தி வைக்கப்பட்டு
இருந்த கப்பலை
நோக்கி காவலர்கள்
ஜியார்டானோ
புருனோவை அழைத்துச்
சென்று கொண்டிருந்தனர்.

ஜியார்டானோ
புருனோ ஏறுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட
கப்பலில் இருந்து
சற்று தொலைவில்
ஒரு பெண் நின்று
கொண்டிருந்தாள்.

ஜியார்டானோ
புருனோ கப்பலில்
ஏறுவதற்கு முன் அந்தப்
பெண்ணைப் பார்த்தார்
ஆயிரம் அர்த்தங்கள்
கொண்ட சிறிய
புன்முறுவலை உதிர்த்தார் ;
அந்த புன்முறுவலின்
அர்த்தத்தை அந்த
பெண்ணால் மட்டும் தான்
உணர்ந்து கொள்ள
முடியும் ; ஆம் இந்த
உலகத்தில் ஜியார்டானோ
புருனோ உயிருடன்
வாழ்ந்த காலத்தில்
ஜியார்டானோ
புருனோவை முழுவதுமாக
அறிந்து வைத்திருந்த
ஒரே நபர் அந்த
பெண் மட்டுமே !!

Madonna of Venice
என்று அழைக்கப்பட்ட
அந்தப் பெண்
ஒரு முறை
ஜியார்டானோ புருனோவை
அணுகி மோசஸ்,
இயேசு கிறிஸ்து
போன்று தாங்கள்
அற்புதங்கள் செய்வீர்கள்
என்று கேள்விப்பட்டேன்
தாங்கள் எனக்கு
அந்த அற்புதங்களை
செய்து காட்ட முடியுமா
அந்த அற்புதங்களை
செய்வது எப்படி
என்ற முறையினை
எனக்கு சொல்லித்
தர முடியுமா என்று
கேட்டாள்.

அதற்கு ஜியார்டானோ
புருனோ அற்புதங்கள்
என்றால் என்ன
என்று தெரியுமா?
என்றார்..

---------  இன்னும் வரும்
---------  27-12-2018
/////////////////////////////////////////////////