September 13, 2015

இயேசு கிறிஸ்து-சட்டைமுனி நாயனார்-மௌன -பதிவு-73



இயேசு கிறிஸ்து-சட்டைமுனி நாயனார்-மௌன வித்தை-பதிவு-73

""""பதிவு எழுபத்து மூன்றை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து

"உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: "
------மாற்கு - 12 : 18


"போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்து போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே."
                        ------மாற்கு - 12 : 19


"இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர்இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம் பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்."
                         ------மாற்கு - 12 : 20


"இரண்டாம் சகோதரன் அவளை விவாகம் பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்"
                          ------மாற்கு - 12 : 21


"ஏழுபேரும் அவனை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள் எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனான்."
                          ------மாற்கு - 12 : 22


"ஆகையால், உயிர்தெழுதலில் , அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்."
                          ------மாற்கு - 12 : 23


"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்."
                          ------மாற்கு - 12 : 24


"மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருகிற தேவதூதரைப்போலிருப்பார்கள்."
                                ------மாற்கு - 12 : 25


இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்கினால்
பிரபஞ்சம் மாறிக் கொண்டே இருப்பதைக் காணலாம்;
மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம் ;
மாற்றத்தை உற்று நோக்கி
ஆராய்ந்து பார்த்து யோசித்துப் பாத்தோமேயாகில்
மாற்றத்தை உணர்ந்து கொள்ளலாம் ;
மாறிக் கொண்டே இருப்பதையும்
இந்த பிரபஞ்சம் மாறிக் கொண்டே இருப்பதையும்;
மாறிக் கொண்டே இருப்பது தான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும்
மாறாதது மாற்றம் மட்டும் தான் என்பதையும்
தெரிந்து கொள்ளலாம்.
இந்த பிரபஞ்சத்தில் மாற்றம் மட்டும் தான் மாறாதது
என்பதையும் தெரிந்து கொள்ளலாம்

இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் மாற்றத்தை
இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்

     ஒன்று      : ஒன்று மற்றொன்றாக மாறுவது
     இரண்டு  : ஒன்று வேறொன்றாக மாறுவது

ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கும்
ஒன்று வேறொன்றாக மாறுவதற்கும்
வேறுபாடு இருக்கிறது.

ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கும்
ஒன்று வேறொன்றாக மாறுவதற்கும்
பெரிய அளவில் வேறுபாடு தெரியாததால்
நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாததால்
என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடியாததால்
வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியாததால்
நம்மால் உணர முடியவில்லை.

ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கும்
ஒன்று வேறொன்றாக மாறுவதற்கும்
பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது
அதை உணர்ந்து கொள்வது சற்று கடினம்
அதை புரிந்து கொள்வது சற்று சிரமம்
அதை புரிந்து கொள்ளும் போது
அதை உணர்ந்து கொள்ளும் போது
இரண்டுக்கும் பெரிய அளவில் வேறுபாடு
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை
இப்பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளை
உற்று நோக்கினால்
மாற்றம் நடந்து கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.

மாற்றத்துக்குள் சென்று நடைபெறும் மாற்றங்களை
உற்று நோக்கினால் - மாற்றம்
இரண்டு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.
ஒன்று மற்றொன்றாக மாறுவதையும்
ஒன்று வேறொன்றாக மாறுவதையும்
தெரிந்து கொள்ளலாம்.

களிமண்ணை எடுத்துக் கொள்வோம்
களிமண்ணை வைத்து
பல்வேறு உருவங்களை படைக்கலாம்
உருவாக்கலாம்

களிமண் பல்வேறு உருவங்களாக மாற்றமடைகிறது
ஒன்ற மற்றொன்றாக மாறுகிறது
களிமண்ணால் செய்த உருவங்களை கலைத்தால்
அது மீண்டும் பழைய நிலையான
களிமண் நிலைக்கே
வந்து விடுகிறது.

ஒன்ற மற்றொன்றாக மாறுகிறது
மற்றொன்று மீண்டும் பழைய ஒன்றாகவே மாறி விடுகிறது.

ஒன்று மற்றொன்றாக மாறும்போது
ஒன்றிலிருந்த தன்மைகள் மற்றொன்றில் இருக்கும்
மற்றொன்றில் இருக்கும் தன்மையும்
ஒன்றில் இருக்கும் தன்மையும்
ஒரே மாதிரியாக இருக்கும்
மற்றொன்று அது தன் பழைய நிலைக்கு
மாறும்போது அதே தன்மையுடன் இருக்கும்.

ஒன்று மற்றொன்றாக மாறினாலும்
மற்றொன்றாக மாறியது
மீண்டும் பழைய ஒன்றாகவே
மாறினாலும் அதன் தன்மைகள்
மாறுவதில்லை.


ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தன்மைகள் மாறும்
தன்மையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை
மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
ஆனால் தன்மைகள் மாறாது
ஒன்று மற்றொன்றாக மாறும்போது அதன் தன்மைகள் மாறாது

கடினமான இரும்பு ஒன்றை எடுத்துக் கொள்வோம்
அந்த இரும்புக்கென்று தனிப்பட்ட முறையில்
தன்மைகள் உண்டு
அதன் தன்மைகள் அதிலேயே இருக்கும்.

கடினமான இரும்பை உருக்கி நமக்கு தேவையான
பல்வேறு இரும்புப் பொருள்களை செய்து கொள்ளலாம்.
கடினமான இரும்பு, இரும்பு பொருளாக மாறினாலும்
அதன் தன்மைகள் மாறாது.

கடினமான இரும்பில் உள்ள தன்மைகள்
இரும்பை உருக்கி செய்யப்படும் பல்வேறு
இரும்பு பொருட்களிலும் உள்ள தன்மைகள்
ஒரே மாதிரி இருக்கும்.

இரும்பு பொருளை உருக்கினால்
அது மீண்டும் கடினமான இரும்பாக மாறும்
அப்போதும் அதன் தன்மைகள் மாறாது
ஒரே மாதிரி இருக்கும்.

கடினமான இரும்பில் உள்ள தன்மைகளும்
இரும்பை உருக்கி வேறு
இரும்பு பொருளாக மாற்றும்போது இருக்கும் தன்மைகளும்

இரும்புப் பொருளை மீண்டும் உருக்கி
கடினமான இரும்பாக மாற்றும் போது
இருக்கும் தன்மைகளும்
ஒரே மாதிரியாக இருக்கும்.

ஒன்று மற்றொன்றாக மாறினாலும்
மாற்றப்பட்ட ஒன்று
மீண்டும் பழைய நிலைக்கே திரும்பினாலும்
அதன் தன்மைகள் மாறாது
ஒரே மாதிரியாக இருக்கும்.

ஒன்று வேறொன்றாக மாறுவது வேறுபட்டது
ஒன்ற மற்றொன்றாக மாறுவதிலிருந்து
முற்றிலும் வேறுபட்டது
ஒன்று வேறொன்றாக மாறுவது
தனிப்பட்ட நிலைகளை தன்னுள் கொண்டது.

பால் தயிராக மாறுவதும்
தயிர் மோராக மாறுவதும்
மோர் வெண்ணெயாக மாறுவதும்
வெண்ணெய் நெய்யாக மாறுவதும்
ஒன்று வேறொனறாக மாறும் மாற்றம்
பால் நெய்யாக மாறுவது வரை
வரிசையாக ஒன்று வேறொன்றாக மாறும் மாற்றம்.

இந்த மாற்றங்களை
நாம் உற்று கவனித்தால்
ஒன்று வேறொன்றாக மாறும்
ஆனால் அது தன் பழைய நிலைக்கு திரும்பாது
தன்மைகளும் ஒன்றாக ஒரே மாதிரி இருக்காது
தன்மைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

பால் தயிராக மாறும் போது உள்ள தன்மைக்கும் ,
தயிர் மோராக மாறும் போது உள்ள தன்மைக்கும்,
மோர் வெண்ணெயாக மாறும்போது உள்ள தன்மைக்கும்,
வெண்ணெய் நெய்யாக மாறும் போது உள்ள தன்மைக்கும்,
வேறுபாடு இருக்கும்.

ஒன்று வேறொன்றாக மாறிக் கொண்டிருக்கும் போது
அது தன் பழைய நிலைக்கு திரும்பாது
தன்மைகள் மாறிக்கொண்டே இருக்கும்
ஒன்று வேறொன்றாக மாறிக் கொண்டே செல்லும் போது
ஒரு தன்மையில் இருந்து மற்ற தன்மைக்கு சென்றாலும்
ஒவ்வொன்றிலும் உள்ள தன்மைகள்
மற்றொன்றிற்கு செல்லும் போது
அதன் தன்மைகள்
சிறிதளவு அடுத்த மாற்றத்திற்கு கொண்டு செல்லும்.

ஒன்று வேறொன்றாக மாறும்போது
அதன் தன்மைகள் மாறிக் கொண்டே இருக்கும்
ஆனால் அதன் தன்மைகள்
ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு செல்லும்போது
அதன் தன்மைகள்
ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு செல்லும்.

ஒன்று வேறொன்றாக மாறும்போது
அது மீண்டும் பழைய ஒன்றுக்கு வர வாய்ப்பில்லை.

ஒன்று வேறொன்று வேறொன்று வேறொன்று
என்று மாறிக் கொண்டே இருக்கும்.
சூரியனை எடுத்துக் கொண்டால்
ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும்
ஹீலியம் கார்பனாக மாறும்
இது ஒன்று வேறொன்றாக மாறும் மாற்றம்.

ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் போது
ஹீலியம் கார்பனாக மாறும் போது
உண்டாகும் மாற்றம்
ஒன்று வேறொன்றாக தொடர்ந்து
மாறிக் கொண்டே இருக்கும் மாற்றம்.
ஒன்று வேறொன்றாக மாறிக் கொண்டிருக்கும்
ஆனால் வேறொன்று மீண்டும் ஒன்றாக மாறாது
அது தன் பழைய நிலைக்கு மாறாது திரும்பாது
ஒன்று வேறொன்றாக மாறிக் கொண்டே இருக்கும்.

ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கும்
ஒன்று வேறொன்றாக மாறுவதற்கும்
வேறுபாடு இருக்கிறது.

ஒன்று மற்றொன்றாக மாறி மீண்டும்
தன் பழைய நிலையான ஒன்றுக்கு திரும்பும்;
ஒன்று வேறொன்றாக மாறிக் கொண்டே இருக்கும் போது
அது மீண்டும் தன் பழைய நிலைக்கு திரும்பாது;

ஒன்று மற்றொன்றாக மாறும் போது
அதன் தன்மைகள் ஒரே மாதிரி இருக்கும்
ஒன்று வேறொன்றாக மாறும்போது
அதன் தன்மைகள்
மாறிக் கொண்டேஇருக்கும்.

ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கும்
ஒன்று வேறொன்றாக மாறுவதற்கும்
உள்ள முக்கியமான வேறுபாடுகள் இவை.

நாம் பிரபஞ்சத்தை உற்று நோக்கி ஆராய்ந்து பார்த்தால்
இப்பிரபஞ்சத்திலும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும்
சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் நடைபெறும் நிகழ்வுகளில்
இந்த இரண்டு மாற்றங்கள்
நேரடியாகவும் மறைமுகமாகவும்
நடைபெற்று வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இப்பிரபஞ்சத்தில் நடக்கும்
இந்த இரண்டு மாற்றங்கள்
உணர்ந்து கொள்ளும் நிலையிலும்
உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலும்
நடந்து கொண்டிருக்கிறது.

புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலும்
புரிந்து கொள்ள முடியாத நிலையிலும்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அறிந்து கொள்ளக்கூடிய நிலையிலும்
அறிந்து கொள்ள முடியாத நிலையிலும்
நடந்து கொண்டிருப்பதை
தெரிந்து கொள்ளலாம்.

நாம்சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தோமேயாகில்
ஒன்று மற்றொன்றாக மாறுவதையும்
ஒன்று வேறொன்றாக மாறுவதையும் தெரிந்து கொள்ளலாம்.

மாற்றம் என்பது மாறாதது
அது நிகழ்ந்து கொண்டிருப்பது
மாற்றம் இயக்கமுள்ள இயக்கமற்ற என்ற
இரண்டு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

என்றும் மாறாதவர்
மாறாமல் இருப்பவர் ஆண்டவர் மட்டும் தான்.

மாறக்கூடிய பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் போது
சிற்றின்பத்தில் மாட்டிக் கொள்கிறோம்
மாறாத ஆண்டவருடன் தொடர்பு கொள்ளும்போது
நாமும் மாறாமல் உண்மையாக இருக்கிறோம்
அதனால் நாம்,
பேரின்பத்தை நுகரக் கூடிய தன்மையைப் பெறுவோம்;
உண்மையை அறியக் கூடிய அறிவைப் பெறுவோம்;
உன்னதத்தை புரியக் கூடிய திறனைப் பெறுவோம்;

மாற்றம் அடையக் கூடியவைகளுடன்
நாம் தொடர்பு கொள்ளும் போது
நாம் பல்வேறு இன்னல்களில் மாட்டிக் கொள்கிறோம்;
பாவங்களில் மாட்டிக் கொள்கிறோம்;
பிறரை கெடுக்க நினைக்கிறோம்;
பிறரை அழிக்க நினைக்கிறோம்;
பிறரை நசுக்க நினைக்கிறோம்;
பிறரின் உயர்வை தடுக்கிறோம்;
எவைகளை எல்லாம் செய்யக்கூடாதோ
எவைகளைச் செய்தால்
பாவம் நம்மை பிடிக்குமோ
எவைகளைச் செய்தால் பாவம் நம்மை ஆட்டுவிக்குமோ
எவைகளைச் செய்தால் பாழும் நரகத்தில் விழுந்து விடுவோமோ
அவைகளைச் செய்து பாவத்தில் மாட்டி தள்ளாடுகிறோம்;
திண்டாடுகிறோம்; வருந்துகிறோம்;
மாறிக்கொண்டே இருப்பவைகளிடம் தொடர்பு கொண்டால்
நாம் துன்பத்தில் விழுந்து
தள்ளாட வேண்டியது தான்.

மாறாது எனறும் இருக்கும் ஆண்டவருடன்
தொடர்பு கொள்ளும் போது,
ஆண்டவரை விசுவாசிக்கும் போது,
ஆண்டவரை அறியத் துடிக்கும் போது,
ஆண்டவர் தான் உண்மையானவர்
என்று உணரும் போது,
ஆண்டவர் தான் நம்மை காப்பாற்றுவார்
என்று விசுவாசிக்கும் போது,
நாம் ஆண்டவரிடம் இணைந்து இருக்கும் போது,
கவலையற்று பாவங்கள் நீங்கி
இன்புற்று வாழலாம்.

மாறக்கூடிய பிரபஞ்ச பொருட்களுடன்
தொடர்பு கொண்டு
கவலையுற்று இருப்பதை விட
மாறாத ஆண்டவருடன்
தொடர்பு கொண்டு கவலையற்று இருக்க வேண்டும்.

உயிர்த்தெழுதல் இல்லையென்று
சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து
போதகரே ஒருவனுடைய சகோதரன்
தன் மனைவியை விட்டு இறந்து போனால்
அவனுடைய சகோதரன்
அவனுடைய மனைவியை கல்யாணம்பண்ணி
தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக வேண்டுமென்று
மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறாரே என்றார்.

மேலும் ஒரு கதையை ஒரு கற்பனையை சொல்ல ஆரம்பிக்கிறார்
இப்படியிருக்க ஏழு பேர் சகோதரர் இருந்தார்கள்
மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம் பண்ணி
சந்தானமில்லாமல் இறந்து போனான்.

குறை சொல்வது என்பது இம்மானிட சமுதாயத்தில்
மிகப்பரவலாக நடைபெற்றுக்கும் ஒன்று.

பிறரை குறை சொல்வது பாவம்
என்று  யாரும் நினைப்பதில்லை.
பாவத்தை துணிந்து செய்வதில் யாருக்கும் பயமில்லை.
பாவம் நம்மை பிடித்து ஆட்டும்
என்று யாரும் கவலை கொள்வதில்லை
பிறரை குறை சொல்வதன் மூலம்
சந்தோஷம் கொள்ளும் சிலர்
ஏன் தன்னை குறை சொல்லும்போது
கோபம் கொள்கின்றனர்
வருத்தப் படுகின்றனர்.

பிறரை குறை சொல்லும் போது
சந்தோஷப் படுபவர்கள்
தன்னை குறை சொல்லும் போது
வருத்தப்படக்கூடாது
சந்தோஷப்பட வேண்டும்
யாரும் அதைப் போல் செய்வதில்லை
பிறரை குறை சொல்வதில் சந்தோஷம் கொள்கின்றனர்.

குறை சொல்வதில் இரண்டு நிலைகள் இருக்கிறது

     ஒன்று     : நேரடியாக குறை சொல்வது
    இரண்டு   : மறைமுகமாக குறை சொல்வது

நேரடியாக குறை சொல்வதிலும்
மறை முகமாக குறை சொல்வதிலும்
இரண்டு நிலைகள் மறைந்து இருக்கிறது.


நேரடியாக குறை சொல்லும் போது உள்ள இரண்டு நிலைகள்:
      ஒன்று   : குறையை சொல்ல வேண்டும் என்று
                                உணர்ந்து குறையை சொல்வது
    இரண்டு  : நாம் ஒருவரை குறை சொல்கிறோம் என்று
                             தெரியாமல் குறை சொல்வது

மறைமுகமாக குறை சொல்லும் போது இரண்டு நிலைகள் உள்ளது:
ஒன்று    : ஒருவருடைய குறையை இன்னொருவரிடம் சொல்லி
    சந்தோஷப்பட்டுக் கொள்வது
இரண்டு  : ஒருவருடைய குறையை மற்றவரிடம் சொல்லி
           வருத்தப் படுவது

நேரடியாக குறை சொல்வதிலும்
மறைமுகமாக குறை சொல்வதிலும் உள்ள
ஒற்றுமைகளை உற்று நோக்கினால்
நல்லவையும் இருக்கும்
கெட்டவையும் இருக்கும்
என்று தெரிந்து கொள்ளலாம்

இதற்குக் காரணம் மனிதமனம் கெட்டுப்போய்
களங்கமுற்று இருப்பதே என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நாம் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்
அப்பொழுது வேறு ஒரு நண்பர் வருகிறார்
புதியதாக வந்த நண்பரை
ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கும் நண்பரிடம்
அறிமுகப் படுத்தும்போது
இவர் என் நண்பர்
இவருக்கு கால் சற்று ஊனம்
அதனால் சரியாக நடக்க முடியாது
கஷ்டப்பட்டுத் தான் நடக்க முடியும்
என்று சொல்கிறார்.

இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன
ஒன்று அவர் ஊனம் என்று நேரடியாக
குறை சொல்லி கிண்டல் பண்ணுவது
இரண்டு இவர் ஊனம் என்று சொல்லி
வருத்தப்படுவது.

ஒருவரை அறிமுகப்படுத்தும் முறையில்
இரண்டு நிலைகள் இருக்கிறது
நல்ல செயலும் கெட்ட செயலும்
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இங்கே ஒரு விஷயத்தை
நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்
ஒருவதை அறிமுகப் படுத்தும் போது
அவருடைய குறைகளைக் சொல்லி
அறிமுகப்படுத்தக் கூடாது.

நாமும் நம்முடைய நண்பரும்
பேசிக் கொண்டிருக்கிறோம்
இன்னொரு நண்பரைப் பற்றி பேசும்போது
அவருடைய மகள்
ஒரு பையனை காதல் செய்து வீட்டில் சொல்லாமல்
கூட்டிக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டாள்
என்று சொல்லும்போது
அதில் இரண்டு நிலைகள் இருப்பதை அறியலாம்.

ஒன்று அவருடைய  நண்பருடைய மகள்
வீட்டை வீட்டு ஓடி விட்டாள்
பெற்றோரை ஏமாற்றி விட்டு ஓடி விட்டாள்
நம்பிக்கையை தகர்த்து விட்டு ஓடி விட்டாள்
வீட்டு பெயரை மானத்தை குலைக்கும் விதத்தில்
ஓடி விட்டாள்
என்று வருத்தப்பட்டது சொல்வது.

மற்றொன்று அவருடைய மகள்
இன்னொருவருடன் ஓடி விட்டாள்
இவன் வெட்கமில்லாமல் சுற்றி வருகிறான்
என்று சொல்லும்போது நண்பரை காயப்படுத்தும்
வகையில் சொல்வது.

நேரடியாக குறைசொன்னாலும்
மறைமுகமாக குறை சொன்னாலும்
அதில் நல்லவையும் இருக்கிறது
கெட்டவையும் இருக்கிறது.

இப்படியிருக்க ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்
மூத்தவன் ஒருபெண்ணை விவாகம் பண்ணி
சந்தானமில்லாமல் இறந்துபோனான்.

இரண்டாம் சகோதரன் அவனை விவாகம் பண்ணி
அவனும் சந்தானமில்லாமல் இறந்து போனான்
ஏழுபேரும் அவளை விவாகம் பண்ணி
சந்தானமில்லாமல் இறந்து போனார்கள்
எல்லோருக்கும் பின்பு அந்த
ஸ்திரீயும் இறந்து போனாள்.

குறையுடைய மனதில்
குறையுடைய கதைகள் தான் தோன்றும்
குறையுடைய மனது என்றால்
நல்லவைகள் இல்லாமல்
தீயவைகள் அதிகம் இருக்கிறது என்று பொருள்

கெட்டவைகளால் மனம் நிரம்பி இருப்பதைத் தான்
குறை உடைய மனது என்கிறோம்
குறையுடைய மனதானது
பிறர் குறையை கண்டு பிடித்து
அவரை இழிவு படுத்த நினைக்கும்
அவமானப்பபட வைக்க நினைக்கும்.

குறையுடைய மனதைக் கொண்டவர்கள்
ஆபத்தானவர்கள்
அவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

அத்தகைய குறையுடைய
மனதைக் கொண்டவர்களால் மட்டுமே
இத்தகைய குறையுடைய
குறைகள் நிறைந்த
கதைகளைத் கூற முடியும்.
ஆகையால் உயிர்த்தெழுதலில்
அவர்கள் எழுந்திருக்கும் போது
அவர்களில் யாருக்கு அவள்
மனைவியாயிருப்பாள்
ஏழுபேரும் அவளை மனைவியாகக்
கொண்டிருக்கிறார்களே என்று கேட்டார்கள்.

உயிர்த்தெழும்போது ஏழுபேரும்
அவள் கணவன் தானே
அப்போது யார் அவளுக்கு கணவனாக இருப்பார்.

ஏழுபேர் தானே திருமணம் செய்தார்கள்
உயிர்த்தெழும்போது ஏழுபேரும் தானே உயிர்த்தெழுந்தார்கள்.
அப்போது ஏழுபேரில் ஒருவர் மட்டுமா அல்லது
ஏழுபேருமா கணவனாக இருக்க முடியும்.
ஏழுபேரில் அவள் யாருக்கு மனைவி
ஏழுபேருக்கு மனைவியா என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக
நீங்கள் வேத வாக்கியங்களையும்
தேவனுடைய வல்லமையையும்
அறியாததினாலல்லவா
தப்பான எண்ணங் கொள்கிறீர்கள்.

வேத வாக்கியங்களை
உணர்ந்து கொள்ள வேண்டுமானால்
ஆண்டவர் அருள் வேண்டும்
ஆண்டவர் அருள் இல்லாமல்
வேத வாக்கியங்களை
உணர்ந்து கொள்ள முடியாது.
வேத வாக்கியங்களை
உணர்ந்து கொள்ள வேண்டுமானால்
ஆண்டவரை விசுவாசிக்க வேண்டும்
ஆண்டவரை விசுவாசித்து
அவரை ஏற்றுக் கொண்டு
அவர் காட்டும் வழியில்
நடந்து செல்பவர்களுக்கே
வேத வாக்கியங்கள்
என்ன சொல்கின்றது என்பதையும்
தேவனுடைய மகிமையையும்
தெரிந்து கொள்ளலாம்.

தேவனை விசுவாசிக்காமல்
வேத வாக்கியங்களை
உணர்ந்து கொள்ள முடியாது
அதனால் தான் இயேசு,
நீங்கள் வேத வாக்கியங்களையும்
தேவனுடைய வலலமையையும்
அறியாத காரணத்தினால்
தப்பான எண்ணம் கொண்டிருக்கிறீர்கள்.
பேசிக் கொண்டுஇருக்கிறீர்கள்.

ஆண்டவரை விசுவாசித்து
ஏற்றுக் கொண்டவருக்கே
வேத வசனங்கள் புரியும்.

மரித்தோர் உரிரோடெழுந்திருக்கும் போது
கொள்பவனையும் கொடுப்பவனையும் இல்லை
அவர்கள் பரலோகத்தில் இருக்கிற
தேவதூதரைப் போல் இருப்பார்கள் என்றார்.
உயிர்த்தெழுந்திருக்கும் போது
அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல் இருப்பதில்லை
அவர்கள் தேவதூதரைப் போல் இருப்பார்கள்.

எந்த தேவதூதரைப் போல் என்றால்
பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப் போல் இருப்பார்கள்
ஆண்டவரை விசுவாசித்து அவரை
ஏற்றுக் கொண்டவர்களுக்கே
உயிர்த்தெழுதல் உண்டு.

மிக உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்
மிகவும் புனிதமான இடத்தில் இருப்பார்கள்
ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்களுக்கே
இத்தகைய புனிதமான நிலை கிட்டும்
ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு
இத்தகைய புனித நிலை கிட்டாது.

ஒரு பெண் ஏழு சகோதரரை
ஒருவர் மரிக்க ஒருவரை திருமணம் செய்து கொள்வதும்
இறுதியில் இறப்பதும் என்பது
ஒன்று வேறொன்றாக மாறும் மாற்றம்.

மாற்றம் என்பது வாழ்க்கையில் இருக்கும்
உற்றுக் கவனித்தால் தெரியும்.

ஒரு பெண் ஒன்று
ஒருவரை மணக்கிறாள் ஒரு மாற்றம்
அவர் இறந்தவுடன் இரண்டாவது
சகோதரரை மணக்கிறார்
இது வேறொன்றாக மாறுவது
அப்படியே தொடர்ச்சியாக
ஒன்று வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது
இது மீண்டும் தன் பழைய நிலைக்கு வராது.

ஒன்று வேறொன்றாக மாறும் போது
அதன் தன்மைகள் மாறிக் கொண்டே
இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மாறாத ஆண்டவருடன் இணையும்போது
அவர் அருளாசி பெறும்போது
அவரை விசுவாசித்து
அவருடைய அருளைப் பெறும்போது
நிம்மதியான அமைதியான வாழ்க்கை பெற முடியும்.

மாறிக்கொண்டே இருக்கும்
இப்பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும்போது
நாமும் மாறிக் கொண்டே தான் இருப்போம்.

அதனால் கவலை பெற்று இருப்போம்
மாறாத ஆண்டவரை விசுவாசித்து
அவருடைய அருளைப் பெறும் போது
கவலை அற்று இருப்போம் என்கிறது பைபிள்.


சட்டைமுனி நாயனார்

  """"மௌனவித்தை யாதெனில்மூன் றெழுத்தே யென்பார்
                                மாட்டுகிற இனங்காணார் மார்க்கங் காணார்
           மௌனவித்தை யாவதென் வாய்மூட் வென்பார்
                                மாடுமுதற் குதிரையினா வாவ தென்ன
          மௌனவித்தை கேட்டார்கூட் டுறவு காணார்
                                வாய்மூடி வழியோடே நாதங் கேளார்
          மௌனவித்தை யாசான்றான் தூண்டிக் காட்டில்
                                மணிமுதலாய்த் திசைநாதங் கேட்குந் தானே."""

  """"கேட்கையிலே மதியினிட மமிர்தஞ் சிந்துங்
                                கெடியான துவாசமுர்தங் கடந்து தோன்றும்
          வாழ்க்கையிலே யாசையறும் நினைவும் போகும்
                                வாரிதிபோ லண்ணாக்கி லமிர்த மோடும்
          தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும்
                                சச்சிதா னந்தவொளி தானே தோன்றும்
           முட்கையிலே மேலமிர்த லகரி மீறும்
                                மூன்றுகமும் கணமாகு முட்டிப் பாரே.""""

                                                ---.சட்டைமுனி நாயனார்
                                                ----சட்டைமுனி நாயனார் முன் ஞானம்-100-
                                                 -----பெரிய ஞானக் கோவை

இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்கினால்
பிரபஞ்சம் இரண்டு நிலைகளில் இருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்;
பிரபஞ்சம் இரண்டு நிலைகளைத் தன்னுள்
கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்;
பிரபஞ்சம் இரண்டு நிலைகளுக்குள்
இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்;
பிரபஞ்சம் இரண்டு நிலைகளில்
இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்;
பிரபஞ்சம் இரண்டு நிலைகளில் இருந்தாலும்
இரண்டு நிலைகளைத் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தாலும்
இரண்டு நிலைகளில் அடங்கி இருந்து கொண்டிருந்தாலும்
இந்த இரண்டு நிலைகளும்
பிரபஞ்ச மனதுக்கு எளிதில்
புரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில்
இல்லாத காரணத்தினாலும்,
வெட்ட வெளிச்சமாக வெளிப்படையாக
இல்லாத காரணத்தினாலும்,
சூட்சுமமாக மறைத்து
வைக்கப் பட்டிருக்கின்ற காரணத்தினாலும்,
மறை பொருளை உணர்ந்தவர்கள்
ஆன்மீக நிலையில் உயர்வான நிலை அடைந்தவர்கள்
ஆகியோர் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்தாலும்
அவர்கள் மறைபொருளாக வைத்திருக்கின்ற காரணத்தினாலும்,
சாதாரண நிலையில் உள்ள மனித மனங்களால்
புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது
பிரபஞ்ச ரகசியங்களை
பிரபஞ்சம் இரண்டு வேறுபட்ட
நிலைகளைத் தன்னுள் கொண்டு இருக்கிறது
என்பதை
மனித மனங்களால்
உணர்ந்து கொள்ள முடியவில்லை.

பிரபஞ்சம் இரண்டு நிலைகளைத் தன்னுள் கொண்டு இருக்கிறது
ஒன்று   : இயக்கமற்ற நிலை
இரண்டுஇயக்கமுள்ள நிலை
இயக்கமற்ற நிலையில் இயக்க நிலையும் இருக்கும்
இயக்கமுள்ள நிலையில் இயக்கமற்ற நிலையும் இருக்கும்

இயக்கமற்ற நிலை
இயக்கமுள்ள நிலையாகி மீண்டும்
இயக்கமற்ற நிலையாகி விடுகிறது.

எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும்
இயக்கமற்ற நிலையிலிருந்து
இயக்க நிலைக்கு மாற்றம் அடைந்து  மீண்டும்
இயக்கமற்ற நிலைக்கு மாறி விடும்.

இயக்கமற்ற நிலை
இயக்கமுள்ள நிலையாக மாற
ஒரு தூண்டுகோல் அவசியம்
அந்த தூண்டுகோல் தான் இயக்க மற்ற நிலையை
இயக்கமுள்ள நிலையாக மாற்றி விடும்.

இயக்கமற்ற நிலை
இயக்கமுள்ள நிலையாக மாற
இந்த தூண்டுகோல் முக்கியம்
இந்த தூண்டுகோல் தான்
இயக்கமற்ற நிலையை 
இயக்கமுள்ள நிலையாக மாற்றக் கூடியது.

இந்த தூண்டுகோல் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல்
இந்த தூண்டுகோல் தான் பிரபஞ்ச சக்தி
இது தான் இயக்கமற்ற நிலையையும்
இயக்கமுள்ள நிலையையும் 
இணைக்கும் பாலம்

இந்த தூண்டுகோல் வெளிப்புறம் இருப்பது போல் தோன்றும்
ஆனால்
இந்த தூண்டுகோல் ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கிறது
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று
தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கிறது.
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும் இருக்கிறது.

இந்த பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலைப் புரிந்து கொண்டால்
எப்படி இயக்கமற்ற நிலை
இயக்கமுள்ள நிலையாக மாறுகிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இயக்கமற்ற நிலை
இயக்கமுள்ள நிலையாக மாறுவதற்குத்தான்
தூண்டுகோல் தேவை
இயக்கமுள்ள நிலை இயக்கமற்ற நிலையாக
மீண்டும் மாறுவதற்கு
தூண்டுகோல் தேவை இல்லை.

இயங்கிக் கொண்டிருப்பது
இயக்கத்தில் இருப்பது
இயக்க நிலையில் இருப்பது
தன் சக்தியை இழந்தவுடன்
தன் சக்தி முழுவதுடன் தீர்ந்தவுடன்
மீண்டும் இயக்கமற்ற நிலைக்கு சென்று விடுகிறது.

இயக்கமற்ற நிலை தூண்டப்பட்டதால்
இயக்கமுள்ள நிலையாகி
தன் சக்தி முழுவதும் தீர்ந்தவுடன் மீண்டும்
இயக்கமற்ற நிலைக்கு திரும்பி விடுகிறது.

இயக்க நிலை எவ்வளவு நாட்கள்
எவ்வளவு ஆண்டுகள்
எவ்வளவு கோடிக்கணக்கான ஆண்டுகள்
என்று கணக்கில் அடங்காத ஆண்டுகள்
இயங்கிக் கொண்டிருந்தாலும்
ஒரு நாள் இயக்கத்தில் உள்ளது
இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று
தன் நிலையை நிறுத்தித் தான் ஆக வேண்டும்
இயக்கமற்ற நிலைக்குத் தான்
மாறித்தான் போய்த்தான் ஆக வேண்டும்

இயக்கமுள்ள நிலை எப்படியும்
இயக்கமற்ற நிலைக்கு மாறித்தான் ஆக வேண்டும்
ஏனென்றால், எதிலிருந்து எது தோன்றியதோ
அது மீண்டும்,
அதுவாகவே மாறித்தான் போக வேண்டும்
இயக்கமற்ற நிலை எப்படி தூண்டுகோலால்
இயக்கமுள்ள நிலைக்கு மாறி மீண்டும்
எப்படி இயக்கமற்ற நிலையாக மாறுகிறது
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சங்கு சக்கரம் எடுத்துக் கொள்ளுங்கள்
அதை தரையில் வைக்கிறீர்கள்
அது இயக்கமற்ற நிலை
சங்கு சக்கரத்தில் நெருப்பு வைக்கிறீர்கள்
இது தான் தூண்டுகோல்
இயக்கமற்ற நிலையை
இயக்க நிலைக்கு கொண்டு வருவது
எரியூட்டப்பட்ட சங்கு சக்கரம் சுற்றுகிறது
சுற்றி முடித்தவுடன்
மீண்டும் பழைய நிலையான
இயக்கமற்ற நிலைக்கு வந்து விடுகிறது.

அதாவது சங்கு சக்கரத்தின்
சக்தி முழுவதும் தீர்ந்தவுடன்
சங்கு சக்கரம் சுற்றுவதை நிறுத்தி விட்டு மீண்டும்
பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது.

இயக்கமுள்ள நிலையை நிறுத்த
ஒரு தூண்டுகோல் தேவையில்லை
இயக்கமுள்ள நிலையில்
உள்ள சக்தி முழுவதும் தீர்ந்தவுடன்
இயக்கமுள்ள நிலையில் உள்ளது
இயக்கமற்ற நிலைக்கு மாறிவிடும்.

இயக்கமற்ற நிலையில் இருந்து
இயக்கமுள்ள நிலைக்கு
மாறுவதற்கு தான் தூண்டுகோல் அவசியம்
இயக்கமுள்ள நிலையில் இருந்து
இயக்கமற்ற நிலைக்கு
மாற தூண்டுகோல் அவசியம் இல்லை.

இயக்க நிலையில் உள்ளவை
இயக்க நிலைக்கு காரணமான
சக்தி தீர்ந்தவுடன்
மீண்டும் இயக்கமற்ற நிலைக்கே வந்து விடுகிறது
இந்த நிலைகள் தான் பிரபஞ்சத்தில்
தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது
நடப்பது , நடந்து கொண்டிருப்பது, நடக்கப் போவது அனைத்தும்
இந்த நிலைகளுக்குள் தான் இருக்கும்.

எந்த செயல் என்று எடுத்துக் கொண்டாலும்
பிரபஞ்சத்தில் இருக்கும்
பிரபஞ்சத்தில் நடந்துகொண்டிருக்கும்
பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
எந்த நிகழ்வு என்று எடுத்துக் கொண்டாலும்
இந்த நிலைகள் தான் நடந்து கொண்டிருக்கும்.

நாம் ஓட தயாராக இருக்கிறோம்
என்று எடுத்துக் கொள்வோம்
முதலில் நிற்கிறோம்
இது இயக்கமற்ற நிலை
ஒருவர் ஓடலாம் என்று சிக்னல் தருகிறார்
இது தூண்டுகோல்
நாம் ஓடுகிறோம்
ஒருகுறிப்பிட்ட அளவு வரை நம்மால் ஓடமுடியும்
அதற்கு மேல் ஓட முடியாது
அதாவது ஓடுவதற்கு தேவையான சக்தி
நம் உடலில் இருக்கும் வரை
நம்மால் ஓட முடியும்
ஓடுவதற்கு தேவையான சக்தி
நம் உடலில் முழுவதும் தீர்ந்தவுடன்
நாம் நின்று விடுகிறோம்


இயக்கமற்ற நிலையில் இருந்த நாம்
தூண்டுகோலால் இயக்கநிலைக்கு மாறி மீண்டும்
இயக்கமற்ற நிலைக்கே வந்து விட்டோம்.

பிரபஞ்சத்தில் நடக்கும்
அனைத்து நிகழ்வுகளையும் உற்று நோக்கினால்
இயக்கமற்ற நிலை தூண்டுகோலால்
இயக்கநிலைக்கு வந்து
தன் சக்தி முழுவதும் தீர்ந்தவுடன்
மீண்டும் இயக்கமற்ற நிலைக்கே
வந்து விடுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இயக்கமற்ற நிலையையும்
இயக்கமுள்ள நிலையையும்
நன்கு உற்று பார்த்தோமேயாகில்
இரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம்
அதாவது இயக்கமற்றதில் காலம் என்பது இருக்காது ;
இயக்க நிலையில் உள்ளவைகளில் காலம் என்பது இருக்கும்;
காலம் என்பது எங்கே இருக்கிறதோ
அங்கே இயக்கம் என்பது இருக்கும்;
எங்கே இயக்கம் இல்லையோ
அங்கே காலம் என்பது இருக்காது;
காலம் இருந்தால் அங்கே இயக்கம் இருக்கும்

காலம் என்ற ஒன்றே கிடையாது
நாம்  ஒரு நிகழ்வை புரிந்து கொள்வதற்காக
காலம் என்பதை
நம் வசதிக்காக உருவாக்கிவைத்து இருக்கிறோம்


இயங்கிக் கொண்டிருக்கும்
பொருளை காலம் கொண்டு தான் புரிந்து கொள்ள முடியும்
காலம் என்ற ஒன்று இல்லாவிட்டால்
இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கநிலையில் இருப்பவைகளை
நாம் புரிந்து கொள்வது கடினம்.

காலத்தை புரிந்து கொள்ள இந்த நிகழ்வை ஆராய்வோம்
இரண்டு நபர்களை எடுத்துக் கொள்வோம்

       ஒருவர்                 : இயக்கமற்ற நிலை
       மற்றொருவர்   : இயக்கமுள்ள நிலை

இருவரையும் கூட்டிக் கொண்டுவந்து
ஒரு மலையில் கொண்டு நிற்க வைப்போம்.

மலையின் மேலே இயக்கமற்ற நிலையில் உள்ளவர்
என்றும்
மலையின் கீழே இயக்கமுள்ள நிலையில் உள்ளவர்
இருப்பதாகக் கொள்ளலாம்

மேலே நிற்கும் மலையின் மேலே நிற்கும்
இயக்கமற்ற நிலையில் உள்ளவருக்கு
காலம் என்பது கிடையாது ;
மலையின் கீழே இருப்பவர்
இயக்கமுள்ள நிலையில் உள்ளவருக்கு
காலம் என்பது உண்டு ;

மலையின் மேலே மற்றும்
மலையின் கீழே உள்ள இருவருக்கும்
வலது புறம் உள்ளது எதிர்காலம்
நேரே உள்ளது நிகழ்காலம்
இடதுபுறம் உள்ளது இறந்த காலம்
என்று வைத்துக் கொள்வோம்

வலது புறமான எதிர்காலத்தில் இருந்து
ஒரு மாட்டுவண்டி வருகிறது
மலையின் மேலே இருப்பவருக்கு தெரிகிறது
மலையின் கீழே இருப்பவருக்கு தெரியவில்லை
மலையின் மேலே இருப்பவர்
வலதுபுறம் இருந்து ஒரு மாட்டு வண்டி வருகிறது என்கிறார்
அதாவது எதிர்காலத்தில் இருந்து ஒரு செயல்
நம்மை நோக்கி வருகிறது என்கிறார்
அதாவது இயக்கமற்ற நிலைக்கு
எதிர்காலம் தெரிகிறது.

மலையின் கீழே இருப்பவர் தெரியவில்லை என்கிறார்
அதாவது எதிர்காலத்தில் இருந்து ஒரு செயல்
நம்மை நோக்கி வருவது தெரியவில்லை என்கிறார்.
அதாவது இயக்கமுள்ள நிலைக்கு
எதிர்காலம் தெரியவில்லை.

மாட்டு வண்டி நகர்ந்து கிட்டே வந்து
அவர்கள் இருவருக்கும் நேராக வரும்போது
இருவருக்குமே தெரிகிறது.
அதாவது
மலையின் மேலே இருப்பவருக்கும் தெரிகிறது
மலையின் கீழே இருப்பவருக்கும் தெரிகிறது
அதாவது
இயக்க மற்ற நிலையில் உள்ளவருக்கும்
இயக்க முள்ள நிலையில் உள்ளவருக்கும்
நிகழ்காலம் தெரிகிறது.

மாட்டு வண்டி நகர்ந்து குறிப்பிட்ட தூரம் கடந்து
இடதுபுறம் சென்றவுடன்
மலையின் கீழே இருப்பவருக்கு தெரியவில்லை.
அதாவது
இயக்கமுள்ள நிலையில் இருப்பவருக்கு தெரியவில்லை
அதாவது
இறந்த காலம் தெரியவில்லை.

மாட்டு வண்டி நகர்ந்து குறிப்பிட்ட தூரம் கடந்து
இடதுபுறம் சென்றவுடன்
மலையின் மேலே இருப்பவர்
மாட்டு வண்டி இடதுபுறம்
நகர்ந்து கொண்டு செல்கிறது என்கிறார்.

மலையின் மேலே இருப்பவருக்கு தெரிகிறது
அதாவது
இயக்கமற்ற நிலையில் இருப்பவருக்கு தெரிகிறது
அதாவது
இறந்த காலம் தெரிகிறது.

மலையின் மேலே இருப்பவருக்கே
வலதுபுற திசை, நேராக உள்ள திசை மற்றும் இடதுபுற திசை
அதாவது
எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம்
ஆகிய மூன்று காலங்களும்
மலையின் மேல் இருப்பவருக்கு அதாவது
இயக்கமற்ற நிலையில் இருப்பவருக்கு
இயக்கமற்ற நிலையில் இருந்தாலும்
இயக்கமுள்ள நிலையில் உள்ளவைகளை
தன்னுள் கொண்டிருப்பவைகளை தெரியும்
மலையின் கீழே நிற்பவருக்கு அதாவது
இயக்கமுள்ள நிலையில் இருப்பவருக்கு
நிகழ்காலம் மட்டுமே தெரியும்.

இயக்கமற்ற நிலையில் உள்ளது
மூன்று காலங்களையும் தன்னுள்
வைத்துக் கொண்டிருக்கும் ;
இயக்கமுள்ள நிலையில் உள்ளது
நிகழ்காலத்தை மட்டுமே தன்னுள்
வைத்துக் கொண்டிருக்கும்;

இயக்க நிலையில் உள்ளவைகள்
நிகழ்காலத்தை மட்டுமே
தன்னுள் கொண்டிருக்கும் காரணத்தினால்
அதனால் நிகழ்காலத்தை மட்டுமே
உணர்ந்து கொள்ள முடிகிறது.
இறந்த காலத்தையும்
எதிர் காலத்தையும்
உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

இயக்க நிலையில் உள்ளவைகள்
இயக்கமற்ற நிலைக்கு மாறும் போது தான்
இயக்கமற்றதில் உள்ள காலங்களையும்
இயக்கமற்ற நிலைக்கு மாறினால்
காலம் என்பதே கிடையாது என்பதையும்
தெரிந்து கொள்ளலாம்.

இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளை
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளில்
ஒன்றைக் கொண்டு தான் தொடர்பு கொள்ள முடியும்.
இயக்க நிலையில் உள்ளவைகளை
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டோ
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளைக் கொண்டோ
தொடர்பு கொள்ளலாம்.

ஆனால்
இயக்கமற்ற நிலையை தொடர்பு கொள்ள
இயக்கமற்ற நிலையில் உள்ள ஒன்றைக் கொண்டு தான்
தொடர்பு கொள்ள முடியும்.

இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ள
இயக்கமற்ற நிலையில் உள்ள ஒன்று
எது என்று கண்டு பிடித்து விட்டோமேயாகில்
இயக்கமற்ற நிலையைக் கொண்டு
இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ள முடியும்.

இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்ற நிலை
எது என்று கண்டு பிடிக்க முடியாவிட்டால்;
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ளக்கூடியது
எது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால் ;
இயக்கமற்ற நிலையைக் கண்டு பிடிக்க முடியாது
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ள முடியாது.

இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்
இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்ற நிலை எது என்று தெரிந்து தான் ஆக வேண்டும்.

மனிதன் இயக்கநிலையில் உள்ளவன்
உயிருள்ள மனிதன் இயக்க நிலையில் உள்ளவன்
இயங்கிக் கொண்டிருப்பவன்
இயக்க நிலையில் உள்ள மனிதன்
இயக்கமுள்ள நிலையில் உள்ள மனிதன்
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளுடன் தொடர்பு கொள்ள
இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் உள்ள
அந்த இயக்கமற்ற நிலையில் உள்ளது
எது என்று கண்டறிய வேண்டும்.

இயக்க நிலையில் உள்ள மனிதன்
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ள கூடியது
எது என்று கண்டறிய வேண்டும்.

இயக்க நிலையில் உள்ள மனிதனுக்கு
இயக்க நிலையில் உள்ளவைகள் தெரியும்
இயக்கமற்றவைகளைத் தெரியாது.

இயக்க நிலையில் உள்ள மனிதன்
முதலில் இயக்கமற்ற நிலையில்
உள்ளதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளைத் தெரிந்தால் தான்
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ளக்கூடியது
எது என்று  தெரியும்.


இயக்கநிலையில் உள்ள மனிதனால்
இயக்கமற்ற நிலையில்
உள்ளவைகளைக் கண்டு பிடிக்க முடியாவிட்டால்
இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்றநிலை எது என்று கண்டறிய முடியாது.

இயக்கநிலையில் உள்ள மனிதன்
முதலில் இயக்கமற்ற நிலையைக் கண்டறிய வேண்டும்
அதன் பின்பு தான்
இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய இயக்கமற்றநிலை
எது என்று கண்டுபிடிக்க முடியும்

இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ளக்கூடியதை
கண்டு பிடிக்க வேண்டும் என்றால்
இயக்கமற்ற நிலையை வைத்துக் கொண்டு
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொண்டு
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பில் இருக்கும்
ஒருவரால் மட்டுமே இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்ற நிலை எது என்று
சொல்ல முடியும்.

இயக்கமற்ற நிலை ஒன்றை வைத்துக்கொண்டு
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொண்டவர்
நமக்கு இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய இயக்கமற்ற நிலை 
எது என்று சொல்லவில்லையானால்
நம்மால்
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய
அந்த இயக்கமற்ற நிலை எது என்று கண்டுபிடிக்க முடியாது.

இயக்க நிலையில் உள்ள மனிதன்
இயக்கமற்ற நிலையில் உள்ளதுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்ற நிலையில் 
நிலையில் உள்ளது எது என்று
கண்டுபிடிக்க முடியாவிட்டால்
இயக்கநிலையில் உள்ள மனிதன்
இயக்க நிலையில்
உள்ளவைகளைக் கொண்டு
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு
கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பான்.

இயக்கமற்ற நிலையை
இயக்கநிலையில் உள்ளவைகளை
கொண்டு தொடர்பு கொள்ள முடியாது.
இயக்கமற்ற நிலையை
இயக்கமற்ற நிலையைக்
கொண்டு தான் தொடர்பு கொள்ள முடியும்

இயக்கமற்ற நிலையை
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளைக் கொண்டு தான்
இயக்கமற்ற நிலையுடன் தொடர்பு கொள்ள முடியும்.

பூட்டு இயக்கமற்றது
சாவி இயக்கமற்றது
மனிதன் இயக்கநிலையில் உள்ளவன்

இயக்கமற்ற பூட்டுடன் தொடர்பு கொள்ள
இயக்கமற்ற சாவியை பயன்படுத்த வேண்டும்
மனிதன் தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவன்.

சாவியை கொண்டு வந்து
பூட்டைத் திறக்கிறோம்
பூட்டு திறந்து கொள்கிறது
இயக்கமற்ற பூட்டை
இயக்கமற்ற சாவியைக் கொண்டு திறக்கிறோம்
மனிதன் தொடர்பு கொள்ளும்
நிலையில் இருக்கிறான்.

இயக்கமற்றது
இயக்கநிலைக்கு வர
இயக்கநிலை தூண்டுகோலாக இருக்கிறது.

இயக்க நிலை முடிந்தவுடன்
பூட்டும் சாவியும் மீண்டும்
இயக்கமற்ற நிலைக்கு
வந்து விடுகிறது.

இயக்க நிலையில் உள்ள ஒன்று
இரண்டு இயக்கமற்றதை இயக்கும் வரை
இயக்கமற்றதை இயக்கமற்றது
தொடர்பு கொள்வது கடினம்.

இயக்கமற்றதுடன் இயக்கமற்றது தொடர்பு கொள்ள
இயக்க நிலையில் உள்ள ஒன்று தேவை
அதுதான் தூண்டுகோல்
அது தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல்
ஆதியில் இயக்கமற்றது
இயக்க நிலையில் வருவதற்கு
ஒரு விசை
ஒரு தூண்டுகோல் தேவைப்பட்டது
அதுவே இயக்கமற்றது இயக்க நிலைக்கு
மாறுவதற்கு முக்கிய காரணம்.

அந்த தூண்டுகோல் எது என்று கண்டறியவேண்டும்
இயக்கமற்றதிலிருந்து இயக்கநிலை தோன்றுவதற்கு
காரணமான அந்த நிலையைத் தான்
ஆன்மீகம் ஒவ்வொரு
பெயர் கொண்டு அழைக்கிறது.

அது தான் இயக்கமற்றதை
இயக்கநிலைக்குமாற்றியது
அது இல்லையென்றால் இயக்கமற்றது
இயக்கநிலைக்கு மாறாது.

அந்த தூண்டுகோலுக்கு காரணமான
அந்த இயக்கமற்றதிலிருந்து
இயக்க நிலைக்கு மாறுவதற்கு காரணமான
அந்த தூண்டுகோல்
அந்த இணைப்பு பொருள்
அந்த தொடர்பு கொள்ளும்
நிலையில் உள்ளது எது
என்று கண்டறிய முடியாவிட்டால்
இயக்கமற்றதை தொடர்பு
கொள்ளும் அந்த இயக்கமற்றது எதுஎன்று
நம்மால் கண்டறிய முடியாது.

இயக்கமற்றது இயக்கநிலைக்கு வரக் காரணமானது
எது என்று கண்டறிந்து விட்டால்
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்றது அது தான்
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இயக்கமற்றது
இயக்கநிலைக்கு வரக் காரணமான
அந்தஒன்றைக் கொண்டு தான்
நம்மால் இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இயக்கமற்றது இயக்கநிலைக்கு வரக் காரணமான
அந்த நிலை எது என்று கண்டறிய முடியாவிட்டால்
நம்மால் இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள முடியாது.

இயங்கிக் கொண்டிருக்கும் மனிதன்
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள
இயக்கமற்றது இயக்கநிலைக்கு வரக் காரணமான இருந்த
அந்த ஒன்றை கண்டறிந்து விட்டால்
அந்த ஒன்றைக் கொண்டு
இயக்கமற்றது இயக்கநிலைக்க வரக் காரணமான
அந்த ஒன்றைக் கொண்டு
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இயக்கமற்றதிலிருந்து இயக்கநிலைக்கு
வரக் காரணமான அந்த
ஒன்றை மனிதன் கண்டறியாவிட்டால்
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள
இயக்கமற்ற ஒன்றை
மனிதனால் கண்டு பிடிக்க முடியாது.
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ளக்கூடிய
இயக்கமற்றதை கண்டுபிடித்து
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ளும்போது தான்
இயக்கமற்றதின் நிலைகளைத்
தெரிந்து கொள்ளமுடியும்

இயக்கமற்றது இயக்கமற்றதா அல்லது
அனைத்து இயக்கங்களையும்
தன்னுள் வைத்திருக்கும் இயக்கமுள்ளதா
என்று தெரிந்துகொள்ள முடியும்
இயக்கமற்றது அனைத்து
இயக்கங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டிருப்பது
ஆனால் இயக்கமற்றது.

இயக்கமற்றதில் இயக்கமும்
இயக்கத்தில் இயக்கமற்றதும் இருக்கிறது
என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

இதை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால்
இயக்கமற்றதை தொடர்பு கொள்ளும்
அந்த இயக்கமற்ற தொடர்பு கொள்ளும் பொருளை கண்டறிந்து
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

இயக்கமற்ற தொடர்பு கொள்ளும் பொருளை வைத்து
இயக்க நிலையில் உள்ள மனிதன்
இயக்கமற்றதுடன் தொடர்பு கொண்டு இணைவதன் மூலமே
இயக்கமற்றதை உணர்ந்து கொள்ள முடியும்

அது அதுவானால் அதுவே சொல்லும்

இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள
இயக்கமற்ற ஒன்று வேண்டும்
அந்த இயக்கமற்றதுடன்
தொடர்பு கொள்ளும்
ஒரு பொருள் அல்லது
ஒரு நிகழ்வு அல்லது
ஒரு செயல் அல்லது
ஒரு பயிற்சி அல்லது
ஒரு நிலை அல்லது
ஒரு இயக்கமற்ற ஒரு இயக்கம்
அதற்குப் பெயர் தான் மௌனவித்தை.

மௌன வித்தையைக் கொண்டு
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள முடியும்
மௌனவித்தை இயக்கமற்றது
ஆனால் இயக்கநிலையைத் தன்னுள் கொண்டது.

இந்த மௌனவித்தையைக் கொண்டு
இயக்கமற்ற நிலையில் உள்ளதுடன்
தொடர்பு கொள்ள முடியும்.

இயக்கமற்ற நிலையில் உள்ளதுடன்
தொடர்பு கொள்ளக்கூடிய இயக்கமற்ற ஒன்று
ஆனால்
இயக்கத்துடன் இருப்பது போல் தோன்றுவது
அது தான்மௌன வித்தை.

மௌனவித்தை என்ன என்று தெரியாதவர்கள்
மௌன வித்தையைப் பற்றி தவறாக கூறுவார்கள்

தங்கள் கற்பனையில்
உதித்தவைகளைக் கூறுவார்கள்
மௌன வித்தையைக் கண்டு பிடித்து
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள
முயற்சி செய்ய மாட்டார்கள்.

மௌன வித்தையை தெரிந்தவர்கள் ;
அதை உணமையாக அறிந்தவர்கள்;
அதை முறைப்படி பயிற்சி செய்தவர்கள்;
முறைப்படி பயிற்சி செய்து
இயக்கமற்ற நிலையுடன் இணைந்தவர்கள்;
மௌனவித்தையை பெற தகுதி உடையவர்களுக்கு
அமைதி, பொறுமை, நிதானம், நம்பிக்கை, தேடல்
உள்ளவர்களுக்கு
உண்மையான ஈடுபாடு உடையவர்களுக்கு
மௌன  வித்தை என்றால் என்ன என்றும்,
அதை எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்றும்,
அதை எவ்வாறு பயன் படுத்துவது என்றும்,
அதை பயன்படுத்தி எவ்வாறு
இயக்கமற்ற நிலையுடன் இணைவது
என்பதை பற்றிச் சொல்லுவார்கள்.

மௌன வித்தையைப் பற்றி தெரியாதவர்கள்
மௌன வித்தை என்றால் என்ன என்று
தெரிந்துகொள்ள வருபவர்களிடம்
தங்களுக்கு தெரியாது என்று சொல்லாமல்
தங்களுக்கு தெரியாது என்று சொன்னால்
சமுதாயம் தன்னை தவறாக நினைத்து விடுவோமோ என்று
என்று எண்ணிக் கொண்டு
நாம் உயர்ந்த நிலையில் இருக்கிறோம்

தெரியாது என்று சொல்வதன் மூலம்
தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டு விடுவோமோ என்று
அச்சப்பட்டுக் கொண்டு
மௌனவித்தை என்றால் என்ன என்று
எனக்குத் தெரியாது என்று கூறாமல்
மூடுவாயை  அது ரகசியம் என்பார்கள்.

உலகத்தில் உள்ள உயிர்கள்
அனைத்தும் மௌனவித்தை என்னும் வித்தையை
செய்து கொண்டிருக்கின்றன ;
அதில் சில குறிப்பிட்ட குறிப்பிட்ட உயிரினங்கள்
மௌன வித்தையை வெளிப்படையாக செய்கின்றன;

உயிரினங்கள் செய்வது
மௌனவித்தை என்று தெரியாததால்
மனிதனால் மெனளவித்தை எது என்று தெரியாமல்
இருக்கிறான்.

மாடு, குதிரை, நாய்
போன்ற உயிரினங்கள்
மௌன வித்தையை செய்யும் போது
நாம் உற்றுக் கவனித்தால்
அவை செய்யும் வித்தையைத் தெரிந்து கொள்ளலாம்
அவை செய்யும்  மௌன வித்தையைத் தெரிந்து கொள்ளலாம்.

மௌன வித்தையை அறிந்து
தொடர்ந்துசெய்து வர  உடலிலும் உயிரிலும்
மாற்றங்கள் ஏற்படும்

உடலில் மாற்றம் ஏற்படும்
ஆன்ம வளர்ச்சி வளரும்.

யானை வருவதற்கு முன்பு ஓசை வரும்
ஓசை கேட்கும் போதே பின்னால்
யானை வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
மணி ஓசையின் ஒலி கூடிக் கொண்டே வரும்போது
யானை கொஞ்சம் கொஞ்சமாக
நெருங்கி நம் அருகில் வந்து விடும்
யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள
மணி ஓசை கேட்டு விட்டால்
கண்டிப்பாக யானையை பார்த்து விடலாம்

கடவுளை நாம் பார்ப்பதற்கு முன்
நம்முள் ஒலி கேட்கும்;
மௌன வித்தை தொடர்ந்து
செய்து வர உலகம் முழுவதும் இருக்கும்
உலகம் முழுமையையும்
இயக்கிக் கொண்டிருக்கும்,
உலகம் முழுமையிலும்
இயங்கிக் கொண்டிருக்கும்,
அந்த இறை ஒலி நாதம் கேட்கும்.

இறை ஒலி கேட்டு விட்டால்
இறைவனை கண்டு தான் ஆக வேண்டும்
ஒலி கேட்கத் தொடங்கும் போதே
ஒலி கேட்கத் தொடங்கி விட்டால்
நம் உடலில் அமிர்தம் வழியும்.


இறைஒலி கேட்டவருக்கே அமிர்தம் சுரக்கும்
இறை ஒலி கேட்காதவருக்கு அமிர்தம் சுரக்காது
அமிர்தம் சுரக்க ஆரம்பித்து விட்டால்
ஆசைகள் எழாது
ஆசைகள் அழிந்து விடும்
நான் என்பது இருக்காது.

கோடி சூரியன் உதித்தால்
என்ன பிரகாசம்தோன்றமோ
அந்த பிரகாசம் தோன்றும்.

ஒளியிலிருந்து தான் பிரகாசம் தோன்றும்
ஒளியில்லாமல் தோன்றும் பிரகாசமிது
ஒளிமூலம் அற்ற பிரகாசம்.
அப்பொழுது நாம்,
வெட்டவெளி, சுத்தவெளி, ஆதி நிலை
எது என்று தெரிந்து கொள்ளலாம்
அதனுடன் கலந்து விடலாம்
அதுவே நாம் நாமே அது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

முக்காலமும் அங்கு இல்லை
காலன் என்பதே இல்லை
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மௌனவித்தை தொடர்ந்து செய்து விர
நாதம் ஒலி தோன்றும்
அமிர்தம் சுரக்கும்
பிரகாசம் தோன்றும்
வெட்டவெளி தோன்றும்
நாமே அதுவாக மாறிவிடுவோம்.

இயக்கமற்ற நிலையுடன்
தொடர்பு கொள்ள
தொடர்பு கொள்ளும் பொருளான
மௌன வித்தையை
பயன் படுத்துவதன் மூலம்
இயக்கமற்றதுடன் தொடர்பு கொண்டு
நாமே அதுவாக இருக்கிறோம்
அதுவே நாமாக இருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்
உணர்ந்து கொள்ள முடியும்
என்கிறார்
சட்டைமுனி நாயனார்.

இயேசு கிறிஸ்து- சட்டை முனி நாயனார்

மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த
பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் போது
கவலையுற்றுத் தான் இருக்க வேண்டும்
ஆனால்,
மாறாத ஆண்டவருடன் இணைந்து இருக்கும் போது
கவலையற்று இருக்கலாம்
என்கிறது பைபிள்.

அவ்வாறே,
சட்டைமுனி நாயனாரும்,
அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கும்
என்றும் மாறாத ஆண்டவருடன்
தொடர்பு கொள்ளும் போது
துன்பமற்று இன்புற்று வாழலாம்
என்கிறார்

""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                  போற்றினேன் பதிவுஎழுபத்துமூன்றுந் தான்முற்றே""""