July 06, 2022

ஜபம்-பதிவு-803 (சாவேயில்லாத சிகண்டி-137)

 ஜபம்-பதிவு-803

(சாவேயில்லாத

சிகண்டி-137)

 

ஒருவரிடம்

ஆவேசமாக

பேசி விட்டு

வெளியே வந்த

அந்த பெண்

தன் கையில்

வைத்திருந்த

மாலையை

அரண்மனை

வாயிலில்

மாட்டி விட்டு

சென்றாள்

 

பல்லாயிரக்கணக்கான

மக்கள் கூடியிருந்த

இட.த்தில்

அந்த பெண்

நெருப்பில்

இறங்கிக்

கொண்டிருந்தாள்

 

இந்த காட்சிகள்

வரிசையாக

சிகண்டினிக்கு

தெரிய

ஆரம்பித்தது

காட்சிகள் அனைத்தும்

மறைந்தவுடன்

சிகண்டினிக்கு

நினைவுகள்

திரும்பியது

 

சிகண்டினி தன்

வாழ்க்கையில்

இது வரை

பார்க்காத

காட்சிகள்

இந்த காட்சிகள்

 

இந்த காட்சிகள்

தனக்கு

ஏன் வந்தது

அந்த காட்சிகள்

என்ன சொல்ல

வருகிறது

தனக்கும்

அந்த காட்சிக்கும்

ஏதேனும் தொடர்பு

இருக்கிறதா

இந்த காட்சிகள்

தனக்கு தெரியக்

காரணம் என்ன

இவ்வளவு நாள்

வராத காட்சிகள்

இப்போது

ஏன் வந்தது

அந்த காட்சியில்

தெரியும்

பெண் யார்

 

என்ற பலவித

கேள்விகளுடன்

பொறுமையாக

நிதானமாக எழுந்து

யோசித்துக்

கொண்டே

அந்த இடத்தை

விட்டு அகன்று

காட்டிற்குள்

சென்றாள்

சிகண்டினி

 

இந்த நிகழ்ச்சிகள்

வரிசையாக

அவள் உறங்கும்

போதும் தவத்தில்

இருக்கும் 

போதும்

அவளுக்குத்

தொடர்ந்து வந்து

கொண்டே

இருந்தது

 

தான்

பெண்ணிலிருந்து

முழுமையான

ஆணாக மாறிக்

கொண்டு

இருப்பதை

உணர்ந்து கொண்ட

சிகண்டினி

தான்

முழுமையான

ஆணாக

மாற்றமடைவதற்கும்

மறுபிறப்பு

எடுப்பதற்கும்

தன்னுடைய

உடல்

அமைப்பை

மாற்றிக்

கொள்வதற்கும்

அதற்குத்

தேவையான

உதவிகளைத்

தனக்கு

செய்வதற்கும்

தனக்கு

வழிகாட்டுவதற்கும்

தன்னை

பார்த்துக்

கொள்வதற்கும்

ஒரு தாய்

வேண்டும் என்று

முடிவு எடுத்து

தேடத்

தொடங்கினாள்

 

ஸ்தூணாகர்ணன்

என்பவர்

ஆணிலிருந்து

பெண்ணாக

மாறியவர்

அவரிடம்

சென்றால்

பெண்ணிலிருந்து

ஆணாக

மாறுவதற்குத்

தேவையான

அனைத்தையும்

சொல்லி

வழி நடத்துவார்

என்று

கேள்விப்பட்ட

சிகண்டினி

பெண்ணிலிருந்து

ஆணாக

மாறுவதற்காக

ஸ்தூணாகர்ணனைத்

தேடிச் சென்றாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-802 (சாவேயில்லாத சிகண்டி-136)

 ஜபம்-பதிவு-802

(சாவேயில்லாத

சிகண்டி-136)

 

தாய் தந்தையால்

புறக்கணிக்கப்பட்டு

அரசன் அரசியால்

கட்டளையிடப்பட்டு

மனைவியால்

அசிங்கப்படுத்தப்பட்டு

அவமானத்தால்

வெளியேற்றப்பட்ட

நான் ஆதரிக்க

ஒரு கரம்

இல்லாமல்

தன்னந் தனியாக

நிற்கிறேன்

 

ஒரு அனாதையால்

தான் இன்னொரு

அனாதையைப்

புரிந்து

கொள்ள முடியும்

ஆதரவு

அளிக்க முடியும்

அன்பு

செலுத்த முடியும்

 

எனவே தான்

அனாதையான

நான்

அனாதையாகக்

கிடக்கும்

உனக்கு ஆதரவு

அளிக்கப் போகிறேன்

என்னுடன் சேர்த்துக்

கொள்ளப் போகிறேன்

என்னுடன் எடுத்துச்

செல்லப் போகிறேன்

இனி நீ என்னுடன்

தான் இருக்கக்

போகிறாய்

 

என்னுடைய

வாழ்க்கையில்

நீயும் என்னுடன்

பயணிக்கப்

போகிறாய்

 

அனைத்தும்

என்னை விட்டு

விலகிய பின்

புதியதாக நீ

என்னுடன்

இணைவதால்

என்னுடைய

வாழ்க்கையில்

ஒரு புதிய

அத்தியாயம்

தொடங்குவதற்கு

நீயும் ஒரு

காரணமாகக்

கூட இருக்கலாம்

 

நம் இருவருக்கும்

யாரும் இல்லாததால்

இனி உனக்கு

நான் நண்பன்

எனக்கு நீ

நண்பன் என்று

சொல்லிக் கொண்டே

அந்த வாடாத

தாமரை

மாலையை எடுத்து

தன்னுடைய

கழுத்தில்

போட்டுக்

கொண்டாள்

சிகண்டினி

 

சிகண்டினி அந்த

மாலையை எடுத்து

தன்னுடைய

கழுத்தில் போட்ட

அந்தக் கணத்தில்

அவள் உடலில்

மாற்றங்கள்

நிகழத்

தொடங்கின

 

சிகண்டினியின்

உடல் அதிரத்

தொடங்கியது

தலை சுற்றத்

தொடங்கியது

கால்கள் தடுமாறத்

தொடங்கியது

 

சிகண்டினியால்

நடக்க முடியவில்லை

சிந்திக்க முடியவில்லை

நடக்க முடியவில்லை

நகர முடியவில்லை

 

மயக்கம் வருவது

போல் இருந்தது

சிகண்டினிக்கு

 

சிகண்டினியின்

கண்கள்

சொருகி விட்டது

சிகண்டினியால்

கண்களைத் திறக்க

முடியவில்லை

 

எதுவும் செய்யாமல்

அப்படியே தரையில்

அமர்ந்து விட்டாள்

சிகண்டினி

 

அவளுக்குள்

ஒன்றன் பின்

ஒன்றாக

காட்சிகள்

தோன்ற

ஆரம்பித்தன

 

தொடர்ந்து வரும்

காட்சிகளை

மயக்க நிலையில்

கண்களை

மூடிய நிலையில்

அமர்ந்தபடி

பார்த்துக் கொண்டே

இருந்தாள் சிகண்டினி

 

மூன்று பெண்கள்

மலர் மாலைகளை

கையில் ஏந்தியபடி

பலர் கூடி இருக்கும்

அவையில்

நடந்து வந்து

கொண்டிருந்தனர்

 

ஒரு பெண்

அரசவையில்

உள்ள

அனைவரிடமும்

ஆவேசமாக

கோபத்துடன் பேசி

சண்டையிட்டுக்

கொண்டு இருந்தாள்

 

இரண்டு நபர்கள்

பயங்கரமாக

சண்டையிட்டுக்

கொண்டு இருந்தனர்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-801 (சாவேயில்லாத சிகண்டி-135)

 ஜபம்-பதிவு-801

(சாவேயில்லாத

சிகண்டி-135)

 

இப்போது

அசிங்கப்பட்டது

போல் தன்

வாழ்நாளில்

எப்போதும்

அசிங்கப்பட்டது

இல்லை என்பதை

உணர்ந்து கொண்ட

சிகண்டினி

 

அவமானப்

படுத்தப்பட்டதால்

உண்டான

வேதனையை

மறைக்க

முடியாமல்

வாடிய

முகத்துடனும்

கவலை தோய்ந்த

உள்ளத்துடனும்

தன் மனைவியின்

எதிரில் தலை

குனிந்த நிலையில்

நின்று கொண்டிருந்த

சிகண்டினி

 

எந்த ஒரு

சொல்லையும்

சொல்லாமல்

அமைதியாக

அந்த அறையை 

விட்டு வெளியே

வந்தாள்.

 

ஏமாற்றப்பட்டோம்

என்பதை

உணரும் போது

எழும் அழுகைக்

குரல்

ஆக்ரோஷமாகத்

தான் இருக்கும்

என்பதை

சிகண்டினியின்

மனைவி அழுத

அழுகைக் குரல்

அந்த அறையில்

எதிரொலித்ததில்

இருந்து தெரிந்து

கொண்டாள்

சிகண்டினி

 

தன்னைச் சுற்றி

என்ன நடக்கிறது

என்பது தெரியாத

நிலையில்

சுய உணர்வு

இழந்த நிலையில்

ஒவ்வொரு அடியாக

எடுத்து வைத்துக்

கொண்டே

நடந்து சென்று

அரண்மனையை

விட்டு வெளியே

வந்த சிகண்டினி

அரண்மனை

வாயிலை அடைந்து

அரண்மனை வாசலில்

மாட்டப்பட்டிருந்த

வாடாத தாமரை

மாலையைக்

கண்டவுடன் தான்

தன்னுடைய சுய

உணர்வைப் பெற்றாள்

 

யாருடைய

கையும் படாமல்

யாருடைய

பாதுகாப்பும்

இல்லாமல்

தனிப்பட்ட

நிலையில்

ஆதரிக்க

யாரும்

இல்லாமல்

அனாதையாக

அரண்மனை

வாயிலில்

தொங்கிக்

கொண்டிருந்த

வாடாத தாமரை

மாலையைப்

பார்த்தாள்

சிகண்டினி

 

அந்த மாலையைக்

கையில் எடுத்தாள்

அந்த மாலையைப்

பார்த்து பேசத்

தொடங்கினாள்

சிகண்டினி

 

சிகண்டினி :

வாடாத தாமரை

மலரே நான் சிறிய

குழந்தையாக

இருந்தது முதல்

உன்னைப் பார்த்துக்

கொண்டு

இருக்கிறேன்

 

யாரும் உன்னை

ஏற்றுக்

கொள்ளாததால்

ஆதரிப்பதற்கு ஆள்

யாரும்

இல்லாததால்

அனாதையாக

தன்னந் தனியாக

தொங்கிக்

கொண்டிருக்கிறாய்

 

நீ எப்படி

அனாதையோ

நானும்

அப்படியே தான்

உன்னைப்

போல் ஒரு

அனாதை தான்

 

ஏன் என்னை

இப்படி

பார்க்கிறாய்

 

எனக்கு

தாய் தந்தை

இருக்கிறார்கள்

எப்படி நான்

அனாதையாக

இருக்க

முடியும் என்று

யோசிக்கிறாயா

வாடாத மலரே

 

நீ யோசிப்பது

சரி தான்

 

பெற்றெடுத்த

தாய் தந்தை

இருந்தாலும்

அவர்கள்

நம்மை புரிந்து

கொள்ளவில்லை

என்றாலும்

அவர்களால் நமக்கு

எந்தவிதமான

பலனும் இல்லை

என்றாலும்

அவர்களால் நமக்கு

எந்த ஒரு

உபயோகமும்

இல்லை என்றாலும்

அவர்கள் நம்மை

சரியாக வழி

நடத்தவில்லை

என்றாலும்

அவர்கள் நமக்கு

சரியான வழியைக்

காட்டவில்லை

என்றாலும்

அவர்கள் நம்மை

வாழ வைக்க எந்த

ஒரு முயற்சியும்

எடுக்கவில்லை

என்றாலும்

நாம் அனாதை

தான் அந்த

வகையில் நானும்

ஒரு அனாதை தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-800 (சாவேயில்லாத சிகண்டி-134)

 ஜபம்-பதிவு-800

(சாவேயில்லாத

சிகண்டி-134)

 

மனைவி :

அரசன் என்பவன்

மக்களின் பிரதிநிதி

அரசன் சரியில்லை

என்றால் தவறான

ஒருவரை மக்கள்

அரசராக

வைத்திருக்கிறார்கள்

என்று தானே

அர்த்தம்

 

போர் நடக்கும்

போது அரசன்

பிடிபட்டு

கைதியானால்

அந்த நாடு

தோற்றதாகத்

தானே அர்த்தம்

ஏனென்றால்

அரசன் அந்த

நாட்டின் பிரதிநிதி

 

போர் வேண்டாம்

மக்கள்

சாகக் கூடாது

இழப்புகள்

ஏற்படக் கூடாது

இரத்தம் மண்ணில்

சிந்தக் கூடாது

என்று நினைக்கும்

இரண்டு நாட்டு

அரசர்கள்

தங்களுக்குள்

ஒரு போட்டியை

வைத்து

போட்டியில்

கிடைக்கும்

வெற்றி

தோல்வியை வைத்து

வெற்றி பெற்ற

அரசனுக்கு

தோல்வியுற்ற

அரசனும் அந்த

நாடும் அடிமை

என்று முடிவெடுத்து

அதை செயல்படுத்தி

வந்திருக்கின்றனர்

என்பது உங்களுக்குத்

தெரியாதா

 

ஏன் பாரத

நாட்டில் பகடை

ஆட்டத்தின் மூலம்

வெற்றி தோல்வி

நிர்ணயிக்கப்பட்டு

வெற்றி

பெற்றவர்களால்

அரசுகள்

கைப்பற்றப்பட்டு

அரசாளப்பட்டு

வந்து இருப்பது

உங்களுக்குத்

தெரியாதா

 

அரசனும் நாடும்

நாட்டு மக்களும்

ஒன்றாக

பிணைக்கப்பட்டவர்கள்

இவர்கள்

மூவரையும்

தனித்தனியாக

பிரிக்க முடியாது

அப்படி பிரித்தால்

அது நாடாக

இருக்காது

காடாகத் தான்

இருக்கும் என்பது

உங்களுக்குத்

தெரியாதா

 

அரசன் தோற்றால்

அந்த நாடு

தோற்றதாகத்

தானே அர்த்தம்

அரசன் வென்றால்

அந்த நாடு

வென்றதாகத்தானே

அர்த்தம்

 

அதனால் தான்

சொல்கிறேன்

 

உங்களை

உங்கள்

பெற்றொர்களை

உங்கள் நாடு

உங்கள்

நாட்டு மக்கள்

யாரையும்

நான் சும்மா

விடப்போவதில்லை

 

என்னுடைய

கண்ணீருக்கு

அனைவரும்

பதில் சொல்லித்

தான் ஆக வேண்டும்

 

சிகண்டினி :

நான் என்ன

செய்ய வேண்டும்

என்று நினைக்கிறாய்

 

உங்களைப்

பார்க்கவே

எனக்குப்

பிடிக்கவில்லை

வெளியே

செல்லுங்கள்

என் கண் முன்னே

நிற்காதீர்கள்

என்று

சொல்லிவிட்டு

 

அழத்

தொடங்கினாள்

 

பல விஷயங்களை

விளக்கமாக

எடுத்துச்

சொல்லியும்

புரிய வைக்க

முடியாமல்

தோற்றுப் போன

சிகண்டினி

 

இனி எந்த

ஒரு சொல்லைச்

சொல்லியும்

பயனில்லை

என்பதை

உணர்ந்து

கொண்ட

சிகண்டினி

 

பாதிப்படைந்தவர்களின்

வாயிலிருந்து

வெளிப்படும்

சொற்கள்

பாதிப்படையச்

செய்தவர்களை

சுடத் தான்

செய்யும்

என்பதை உணர்ந்து

கொண்ட சிகண்டினி

 

தான் அவமானப்

படுவதற்கு

இதற்கு மேல்

வேறு எந்த ஒரு

சொல்லும் இல்லை

என்பதை உணர்ந்து

கொண்ட சிகண்டினி

 

இதற்கு மேல்

தன்னை யாரும்

அசிங்கப்படுத்த

முடியாது என்பதை

உணர்ந்து கொண்ட

சிகண்டினி

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////