July 06, 2022

ஜபம்-பதிவு-799 (சாவேயில்லாத சிகண்டி-133)

 ஜபம்-பதிவு-799

(சாவேயில்லாத

சிகண்டி-133)

 

பூவிலிருந்து காயும்

காயிலிருந்து கனியும்

மாற்றமடைந்து எப்படி

புதியது ஒன்று

பிறக்கிறதோ

அதைப்போலவே

ஆணிலிருந்து

பெண்ணும்

பெண்ணிலிருந்து

ஆணும்

மாற்றமடைவதின்

மூலம் மறுபிறப்பு

எடுப்பவர்களுக்கு

புதிய பிறப்பு

ஒன்று பிறக்கிறது

 

பிறப்பு எப்படி

இறைவனின்

சித்தத்தின்படி

நடக்கிறதோ

அப்படியே

மாற்றமடைவதின்

மூலம் மறுபிறப்பு

எடுப்பதும்

இறைவனின்

சித்தத்தின்படியே

நடக்கிறது

 

பிறப்பை எப்படி

தடுக்க முடியாதோ

அப்படியே

மாற்றமடைவதின்

மூலம் மறுபிறப்பு

எடுப்பதையும்

தடுக்க முடியாது

 

பிறப்பு எப்படி

இயல்பானதோ

அப்படியே

மாற்றமடைவதின்

மூலம் மறுபிறப்பு

எடுப்பதும்

இயல்பானது

 

இயல்பான ஒன்றை

எப்படி இழிவானது

என்று சொல்ல

முடியும்

 

மனைவி :

இழிவானவர்

என்று உங்களைச்

சொன்னேன்

 

சிகண்டினி :

பெற்றோர்களால்

கைவிடப்பட்டு

அரசன் அரசியால்

அடிமையாக்கப்பட்டு

மனைவியால்

அசிங்கப்படுத்தப்பட்டு

நிற்கும் நான்

இழிவானவள் தான்

 

மனைவி :

உங்கள் மேல்

உள்ள தவறை

மறைப்பதற்காக

தத்துவம் பேசிக்

கொண்டு இருக்கிறீர்கள்

 

வெண்ணிலிருந்து

ஆணாக மாறிக்

கொண்டு இருக்கும்

நீங்கள் ஒரு

பெண்ணான என்னை

எந்த தைரியத்தில்

என்னைத் திருமணம்

செய்து கொண்டீர்கள்

 

உங்களால் தாம்பத்ய

சுகத்தை தர

முடியுமா

எனக்கு ஒரு

குழந்தையை

உங்களால்

தர முடியுமா

முடியாதல்லவா

 

பிறகு எந்த

தைரியத்தில்

திருமணம்

செய்து கொண்டீர்கள்

திருமணம் செய்து

ஒரு பெண்ணின்

வாழ்க்கையை

ஏன் இப்படி

அழித்தீர்கள்

 

என்னுடைய

வாழ்க்கை

அழிவதற்கு

காரணமான

உங்களை

மட்டுமல்ல

உங்களுடைய

நாடு

உங்களுடைய

நாட்டு மக்கள்

உங்களுடைய

பெற்றோர்கள்

ஆகிய

அனைவரையும்

நான் சும்மா

விடப்போவதில்லை

அனைவரையும்

அழிக்கப் போகிறேன்

 

நான் சிந்தும்

கண்ணீருக்கு

அனைவரும்

பதில் சொல்லித்

தான் ஆக வேண்டும்

 

சிகண்டினி :

தவறு செய்தது

நானும்

என்னுடைய

பெற்றோர்களும் தான்

தண்டிக்கப் பட

வேண்டியவர்களும்

நாங்கள் தான்

 

நீ தண்டனை

அளிக்க முடிவு

எடுத்தால்

தண்டனை

அளிக்க

வேண்டியதும்

எங்களுக்குத் தான்

 

பிரச்சினை என்பது

உனக்கும் எனக்கும்

என்னுடைய

பெற்றோர்களுக்கும்

உன்னுடைய

பெற்றோர்களுக்கும்

தான் இதில்

எங்கள் நாடும்

நாட்டு மக்களும்

எங்கே வந்தார்கள்

 

அவர்கள் மேல்

ஏன் கோபம்

கொள்கிறாய்

 

அவர்களை

தண்டிக்க வேண்டிய

காரணம் என்ன

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment