June 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-35



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-35

அமைச்சர்கள்
அரசரைப் பார்த்து
இதுவரை
ஆராய்ச்சி மணியை
பசு அடித்து
நீதி கேட்டதாக
எந்த
வரலாற்றிலும் இல்லை
வழக்கிலும் இல்லை
அதைப்போல
பசுவதைக்காக
மனிதனைக் கொன்றதாக
எந்த
வரலாற்றிலும் இல்லை
வழக்கிலும் இல்லை
என்றனர்.

பசுவின் துயரை
நீக்குந் திறமையில்லாத
நான் அதன்
துன்பத்தை அடைதலே
செய்யத் தக்கதாகும்
ஆகவே மகனை
இழந்து நான்
வாட வேண்டும்
அதற்காக என் மகன்
கொல்லப்பட வேண்டும்
என்று கூறி
காவலரை அனுப்பி
தன் மகனை வரவழைத்து
கொலை புரிந்தார்க்குரிய
நிலையில் நிறுத்தி
விசாரணை நடத்தி
முடித்தபின்
தன் அமைச்சர்களில்
ஒருவராகிய கலாவல்லபரை
நோக்கி அமைச்சரே
வீதிவிடங்கனை பசுவின்
கன்று இறந்த இடத்தில்
படுக்க வைத்து
அவன் மேல்
தேர் ஏற்றிக்
கொல்வாயாக என்றார்
மனுநீதிச் சோழன்

அமைச்சர் அந்த
இடத்தில் இருந்து
விலகிச் சென்று
சிறுமகனை எப்படி
கொல்வேன்
அரச கட்டளையை
எப்படி மீறுவேன்
சிறுமகனை நான்
கொல்வதும் குற்றம்
அரச கட்டளையை
மீறுவதும் குற்றம்
நான் என்ன
செய்வேன்
அரசவையில்
பலர் இருக்க
அரசர் என்னை ஏன்
தேர்ந்து எடுத்தார்
அரசன் மகனுக்காக
நானே உயிரை விடுவேன்
என்று சிந்தனை செய்து
கன்று இறந்த
இடம் சென்று
தன்னுயிரைத் தானே
துறந்து இறந்தார்
இச்செய்தியைத்
தூதர் மூலம்
கேட்டறிந்தார் அரசர்

என் மகன்
பசுவின் கன்றைக்
கொன்றான்
நான் அமைச்சரைக்
கொன்றேன்
என் நீதிநெறி
தவறாத ஆட்சி
நீதிநெறி தவறி விட்டதே
கன்றுக்காக மகனையும்
அமைச்சருக்காக நானும்
உயிரை விடுவதே
இனி நான்
செய்ய வேண்டிய
செயலாகும் என்று
மகனின் முகம்
நோக்காமல்
மகனிடம்
பசுவின் கன்று
இறந்த இடத்திற்கு
போய் படுக்குமாறு
கட்டளை இட்டார்

மகன் தந்தையின்
சொல் கேட்டு
கன்று இறந்த
இடத்திற்கு சென்று
மல்லாந்து படுத்துக்
கண்களை மூடிக்
கொண்டு படுத்தார்.

இந்நிகழ்வைக் கண்ட
மாந்தர்கள் அனைவரும்
ஐயோ இது என்ன
கொடுமை என்று
கதறி அழுதனர்

மனுநீதிச் சோழர்
சிவபெருமானை சிந்தை
செய்து தேரின் மீது ஏறி
மகன் உடம்பின் மீது
தேரை ஏற்றினார்.
வீதி விடங்கருடைய
உடல் தேர்ச்சக்கரத்தில்
சிக்குண்டு
அரைப்பட்டது சிதைந்தது

மக்கள் கண்ணிலிருந்து
கண்ணீர் பொழிய
விண்ணிலிருந்து
மலர்மாரி பொழிந்தது

சிவபெருமான்,
உமையம்மையாரோடு
காட்சி தந்து
மனுநீதி சோழா
உன் புகழ்
உலகமெல்லாம் ஓங்குக
உன் செங்கோல்
வாழ்க என்று
வாழ்த்தி அருள்
புரிந்தார்
சிவபெருமானின்
அருளால்
வீதிவிடங்கரும்,
பசுவின் கன்றும்,
அமைச்சரும்
உயிர் பெற்று எழுந்தனர்

இந்த அதிசயத்தைக்கண்டு
அனைவரும்
மகிழ்ச்சி அடைந்தனர்

ஒருவன்
தெரிந்து பாவம்
செய்தாலும்
தெரியாமல் பாவம்
செய்தாலும்
பாவத்திற்குரிய
தண்டனை கிடைக்கும்
என்பதையும்
ஒருவன்
குற்றம் செய்தால்
செய்த குற்றம்
கண்டுபிடிக்கப்பட்டால்
குற்றத்தை விசாரித்து
குற்றத்திற்குரிய
தண்டனையை வழங்கி
அந்த குற்றத்தை
செய்தவனை
உடனே அனுபவிக்கச்
செய்வான் அரசன்
என்பதையும்
அரசன் அன்றே
கொல்வான் என்பதற்கான
அர்த்தத்தையும்
இந்தக் கதையின்
மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்தக் கதைதான்
அரசன் அன்றே
கொல்வான்
என்பதற்கு அர்த்தம்

தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தத்தை இனி
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////