November 22, 2018

திருக்குறள்-பதிவு-55


                     திருக்குறள்-பதிவு-55

உலகத்தில் உள்ள
எதிரிகளை எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று
நாம் உருவாக்கும்
எதிரி

இரண்டு
தானே உருவாகும்
எதிரி

நாம் இந்த
சமுதாயத்தில்
எந்தவித
பிரச்சினையும்
இல்லாமல்
நிம்மதியாக வாழ
வேண்டுமானால்
நாம் எதிரிகள்
யாரையும்
உருவாக்கிக்
கொள்ளாமல்,
நமக்கு எதிராக
எதிரிகள் யாரும்
உருவாகாமல்,
பார்த்துக் கொள்ள
வேண்டும்

எதிரிகளை
நாமே உருவாக்கிக்
கொண்டாலோ
(அல்லது)
நமக்கு எதிராக
எதிரிகள் தானாகவே
உருவானாலோ
நம்மால் இந்த
சமுதாயத்தில்
நிம்மதியாக வாழ
முடியாது

நம்முடன் நீண்ட
காலம் நண்பராக
இருந்த ஒருவர்
செய்த செயல்
நமக்கு பிடிக்காத
காரணத்தினால்
அவருடன் சண்டை
ஏற்பட்டு அந்த
நண்பர் நமக்கு
எதிரியானால்
அந்த எதிரி நாம்
உருவாக்கும் எதிரி

உலகம்
முழுவதும் உள்ள
பல்லாயிரக் கணக்கான
கிறிஸ்தவ மக்கள்
பைபிளை
புனித நூலாக
வைத்துப் போற்றுகின்றனர்
இத்தகைய
புனித நூலான
பைபிளில் உள்ள  
கருத்தான
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்ற
கருத்து தவறானது
என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது
என்றும் கலிலியோ
சொன்ன காரணத்தினால்
உலகம் முழுவதும்
உள்ள கிறிஸ்தவ
மக்கள் கலிலியோவிற்கு
எதிராக எதிரியாக
நின்றனர்
இந்த எதிரி தானே
உருவாகும் எதிரி

நாம் உருவாக்கும்
எதிரியாக இருந்தாலும்
தானே உருவாகும்
எதிரியாக இருந்தாலும்
எதிரி என்பவர்
நம் வாழ்க்கையில்
இருந்தால்
நம்மால் இந்த
சமுதாயத்தில்
நிம்மதியாக
வாழ முடியாது

நாம் இந்த
சமுதாயத்தில்
நிம்மதியாக வாழ
வேண்டுமானால்
எதிரிகள் யாரும்
நம் வாழ்க்கையில்
இருக்கக் கூடாது

ஒரு சில எதிரிகள்
நமக்கு இருந்தாலே
நம்மால் நிம்மதியாக
இந்த சமுதாயத்தில்
வாழ முடியாது
என்றால்
உலகம் முழுவதும்
உள்ள பல்லாயிரக்
கணக்கான
கிறிஸ்தவர்கள்
கலிலியோவிற்கு
எதிரியாக மாறி
செய்த செயல்களால்
கலிலியோ தன்னுடைய
வாழ்க்கையில்
எவ்வளவு கஷ்டங்களை
அனுபவித்து இருந்திருப்பார் ;
எவ்வளவு இழப்புகளை
சந்தித்து இருந்திருப்பார் ;
எவ்வளவு அவமானங்களை
பெற்று இருந்திருப்பார் ;
எவ்வளவு திட்டுக்களை
கேட்டு இருந்திருப்பார் ;
எவ்வளவு கொடுமைகளை
கண்டு இருந்திருப்பார் ;
இவ்வளவு
பிரச்சினைகளையும்
தாங்கிக் கொண்டு
கலிலியோ தன்
குடும்பத்தை எப்படி
நடத்திக் கொண்டு
இருந்திருப்பார் ;
இவ்வளவு
இழப்புகளையும்
தாங்கிக் கொண்டு
கலிலியோ எப்படி
ஆராய்ச்சி செய்து
கொண்டு இருந்திருப்பார் ;
என்பதை நாம்
நினைத்துப் பார்த்தால்
கலிலியோவின்
வாழ்க்கை எப்படி
போராட்டமாக
இருந்திருக்கும் என்பதை
நம்மால் உணர்ந்து
கொள்ள முடியும்

---------  இன்னும் வரும்
---------  22-11-2018
///////////////////////////////////////////////////////////