May 24, 2012

இயேசு கிறிஸ்து-திருமூலர்-ஓங்காரத்துள்ளே- பதிவு-41




       இயேசு கிறிஸ்து-திருமூலர்-ஓங்காரத்துள்ளே- பதிவு-41   

              “”பதிவு நாற்பத்தியொன்றை விரித்துச் சொல்ல
            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :   
    
பரலோக ராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது ;அதை ஒரு ஸ்திரீ எடுத்து ,முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.”
                                                               --------மத்தேயு 13 : 33

மறைத்துக் கொள்ளுதல் , வெளிக்காட்டாமல் இருத்தல்
என இருவகைப்படும்.
தகுதிகள் பலவற்றை ,
திறமைகள் பலவற்றை ,
அனுபவங்கள் பலவற்றை ,
உயர்ந்தவைகள் பலவற்றை ,
சக்திகள் பலவற்றை ,
தன்னுள் வைத்துக் கொண்டு
மறைத்துக் கொள்ளுதல் ஒரு வகை .

தனக்குள் ஒன்றும் இல்லாமல்
தகுதிகள் இருப்பது போல் ,
திறமைகள் இருப்பது போல் ,
அனுபவங்கள் இருப்பது போல் ,
உயர்ந்தவைகள் இருப்பது போல் ,
சக்திகள் இருப்பது போல் ,
காட்டிக் கொள்ளுதல் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுதல் மற்றொரு வகை .

தகுதிகள் பலவற்றை தன்னுள் கொண்டு
தங்களை வெளிப்படுத்தாமல்
தங்கள் பெயர்  வெளிப்படாமல்
மறைத்துக் கொள்பவர்
வேறு பெயர்  கொண்டு
புனை பெயர்  கொண்டு
படைப்புகளை படைத்தாலும்
உண்மையான திறமைசாலிகளை இன்னார்  
என்று வெளிப்படுத்தி விடும்.

திறமைசாலிகள் தங்களை மறைத்துக் கொண்டாலும் ,
திரைக்கு பின்னால் மறைந்து கொண்டாலும் ,
புனை பெயர்  போட்டு பின்னால் மறைத்துக் கொண்டாலும் ,
அவருடைய படைப்புகளே அவரை
இன்னார்  என்று வெளிப்படுத்தி விடும்
இந்த உலகத்தில் அவர்  யார்  என்பதை
வெளிக்காட்டி விடும் .

புகழ்பெற்ற படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை
பல்வேறு பெயர்களில் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

உண்மை பெயரை மறைத்துக் கொண்டு
புதுப்பெயரை தரித்துக் கொண்டு
பெரும்பாலானோர்  படைத்த படைப்புகளே
அவர்  உண்மை பெயரை மறைக்க வைத்து
புனைப் பெயரே அவரை
புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது .

புனைந்து கொண்ட பெயரே மக்களின் மத்தியில்
மக்கள் சிந்தனையில் நீங்கா இடம் பெறும்
வகையில் செய்து விட்டு இருந்தது .
அதற்கு காரணம் அவர்களின்
திறமையின் வெளிப்பாடு
உழைப்பின் மேம்பாடு
எவ்வளவு தான் திறமையை மறைவாக வைத்திருந்தாலும் ,
புகழ் வேண்டாம் என்று தங்களை மறைத்துக் கொண்டாலும் ,
புனை பெயரில் தங்களை வெளிப்படுத்தினாலும் ,
உண்மையான திறமைசாலிகளின் திறமையை யாராலும்
மறைக்க முடியாது .

திறமை இல்லாமல் திறமைசாலியாக தன்னை
வெளியில் காட்டிக் கொள்பவர் ;
உண்மையை உணராமல் உண்மையை உணர்ந்தவர்
போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர் ;
சொந்தமாக படைப்புகளை படைக்காமல்
மற்றவர்  படைப்புகளை தங்கள் படைப்பு என்று
பெருமையடித்துக் கொள்பவர் ;
எழுத்துக்களை வரி பிசகாமல் காப்பியடித்து விட்டு
தன் அறிவு என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர் ;

தங்களை மறைத்துக் கொண்டு
வேறொரு பெயர்  மூலம்
மற்றவர்  கற்பனையை திருடி ,
மற்றவர்  எழுத்துக்களைத் திருடி ,
மற்றவர்  படைப்புகளைத் திருடி ,
மற்றவர்  அறிவைத் திருடி ,
பாராட்டு பெற வேண்டும் ;
புகழ் பெற வேண்டும் ;
உயர்நிலை அடைய வேண்டும் ;
உன்னத நிலை எட்ட வேண்டும் ;
என்று நினைப்பவர்கள் வாழ்வானது
தோன்றி மறையும் மின்னலைப் போன்றது
ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் நிலைக்கும் .

உண்மையான திறமை தான் என்றும் நிலைக்கும்
மற்றவரிடம் களவாடிய திறமை நிலைக்காது .

உண்மையான திறமைக்கும்,
களவாடிய திறமைக்கும் வேறுபாடு இருக்கிறது .

உண்மையான திறமை என்பது அனைத்தையும்
தன்னுள் அடக்கி வைத்திருக்கும்
காலம் வரும் போது படிப்படியாக வெளிப்படுத்தும்

விதைக்கப்படும் விதையானது எவ்வாறு படிப்படியாக
விதை முளைத்து , செடியாகி , மரமாகி , பூவாகி ,
காயாகி , கனியாகி வளர்கிறதோ
பருவ காலத்திற்கு ஏற்ற படி மாற்றமடைகிறதோ
அவ்வாறே உண்மையான திறமையும்
படிப்படியாக வெளிப்படும் ;
ஜீவ ஊற்றாக வெளிப்படும் ;
வற்றாத நதியாக வெளிப்படும் ;
எல்லையில்லாமல் ஓடியாடும் ;
முற்றுப்புள்ளி இல்லாமல் சுழன்றாடும் ;
முடிவில்லாமல் வெளிப்படும்.

உண்மையான திறமை நித்தியமானது ;
களவாடிய திறமை அநித்தியமானது ;

பாதை மாறிப் போன
பயணத்தில்
பள்ளத்தின் சுவடுகள் !

        வழுக்கி விழுந்த
        வாழ்க்கையில்
        வழுக்கலின் வடுக்கள்!

நிலை கெட்டுப் போன
நித்தியத்தில்
நித்திரையின் காலடிகள் !

        கொட்டி வைக்கப் பட்ட
        கொடுமைகளில்
        கோபத்தின் இலக்கணங்கள்!

மறைத்து வைக்கப் பட்ட
மனதுகளில்
மாசற்ற மாணிக்கங்கள் !

       வார்த்து வைக்கப் பட்ட
       வார்த்தைகளில்
       வறுமையின் குறியீடுகள் !

செதுக்கி வைக்கப் பட்ட
சிற்பங்களில்
சிந்தனையின் ஊற்றுகள்!

         பற்றி வைக்கப் பட்ட
         பல்லவிகளில்
         பாடலின் புதுமைகள்!

உழைத்து பெறப் பட்ட
உவகையில்
உள்ளத்தின் உண்மைகள்!

       அன்பில் சேர்த்து வைத்த
       அரவணைப்பில்
       ஆசையின் கீதங்கள்!

இதனை உணர்ந்து கொள்பவர்
மறைப்புத் தன்மையில் உள்ள
மர்மங்களை முடிச்சு அவிழ்ப்பவர்
காலத்தின் கண்களை படம் பிடிப்பவர்
ஒன்று பலவாறாக மாறும் விதம் சிந்திப்பவர் .

அரைத்து வைக்கப்பட்ட மாவானது
எவ்வாறு பல்கி பெருகுகிறது
பொங்கி வழிகிறது
மாற்றம் அடைகிறது
என்பதில் அறிய துடிப்பவர்
உண்மை உணர வேண்டும்
உண்மையில் உள்ள மறைபொருள் தெரிய வேண்டும்
மறைபொருளின் விளக்கம் தெரிய வேண்டும்
ஆண்டவரே அனைத்துமாக உள்ளார்
அவரே உலகை இயக்குகிறார் ;
உலக உயிர்களை காக்கிறார் ;
உலக உயிர்களை வழி நடத்துகிறார் ;
உலகத்தை இயக்குகிறார் ;
பல்கிப் பெருக்குகிறார் ;
என்பதில் தெளிவு பெற வேண்டும் .

அழகு நயமாகவும் ,
கலை தோற்றமாகவும் ,
எழில் வண்ணமாகவும் ,
தென்றல் காற்றாகவும் ,
மழலை மொழியாகவும் ,
இசை பிம்பமாகவும் ,
கலையின் தோற்றமாகவும் ,
பல்வேறு கலை தோற்றமாகவும் ,
இந்த உலகத்தை படைத்து காப்பவர்
ஆண்டவர்  என்பதில் தெளிவு பெற வேண்டும்.

ஆண்டவரே நித்தியம்
மற்றவை அநித்தியம் என்று
உணரும் தன்மை கொண்டவராலேயே
தோற்றத்தின் ரகசியத்தையும்
பிறப்பின் மூலத்தையும்
படைப்பின் தன்மையையும்
அறிய முடியும்.

அரைத்து வைத்த மாவானது
எப்படி பல்கி பெருகுகிறதோ?
தனனுள் உள்ளது தான்
தன்னுள் கொண்டது தான்
தன்னுள் இருப்பது தான்
பெருக்கமடைய முடியும்
தன்னுள் இல்லாதது பெருக்க மடைய முடியாது.

உண்மையா திறமை ,
பெருகிய வண்ணம் இருக்கும்.
வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.
களவாடிய திறமை ,
வெளிப்பட்ட வண்ணம் இருக்காது
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மறைந்து விடும்

அதைப் போல என்றும் இருக்கும்
எல்லாம் வல்ல எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருக்கும்
எல்லாவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல ஆண்டவர்
இந்த பிரபஞ்சத்தை உயிர்களை உலகத்தை படைக்கிறார் .

ஆண்டவர்  ஒருவரால் மட்டுமே அனைத்தையும்
உருவாக்க முடியும் படைக்க முடியும்;
வெளிப்படுத்த முடியும் ; காக்க முடியும் .

படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும்
உருவாக்கப்பட்ட உயிர்களையும்
உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால்
ஆண்டவரை அறிய வேண்டும் ;
ஆண்டவரை உணர வேண்டும் ;
ஆண்டவருள் இணைய வேண்டும் ;
ஆண்டவர்  ஆசி பெற வேண்டும் ;
ஆண்டவர்  சித்தத்தின் படி நடக்க வேண்டும் ;
ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் ;
ஆண்டவரே உண்மை என்பதை உணர வேண்டும் ;
ஆண்டவரே அனைத்தும் என்பதில் தெளிவு பெற வேண்டும் ;
ஆண்டவரே அனைத்தையும் காக்கிறார்
என்பதில் தெளிவு பெற வேண்டும் ;

இத்தகைய தன்மை கொண்டவரால் மட்டுமே
பிரபஞ்ச படைப்பையும் ,
உயிர்களின் உயிர்ப்பையும்
அறிய முடியும் என்கிறார்  இயேசு .

உண்மைக்கும் , போலிக்கும்
வேறுபாடு தெரிந்தவர்களால் உண்மையை உணர்ந்து
உண்மையின் தோற்றத்தை உணர்ந்து
உண்மையின் வெளிப்பாட்டை உணர்ந்து
உண்மையே ஆண்டவராக இருக்கிறது
ஆண்டவரின் அருள்பார்வையால் கருணைக் கொடையால்
இநத உலகம் பல்வேறு வண்ணமாக
பல்கிப் பெருகுகிறது என்பதை உணர்ந்து
கொள்ள முடியும் என்கிறார்  இயேசு .



திருமூலர்:

“””ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள்
   ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்
   ஓங்காரத் தீதத் துயிர்மூன்றும் உற்றன
   ஓங்கார சீவ பரசிவ ரூபமே”””
                       --------திருமூலர்-------திருமந்திரம்---

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார்
அனைத்து இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்
கடவுள் இல்லாத இடமே இல்லை
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கும் போது
எதற்காக கோயில்கள் , வழிபாடுகள்
என்று பெரும்பாலானவர்களால் கேட்கப்படும் கேள்வி .

எல்லா இடத்திலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு ,

எல்லா இடத்திலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானவற்றை

பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் தேவையை தீர்த்துக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் கனவுகளை நிஜமாக்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
இன்பத்தின் வாசலை திறந்து கொள்ள முடியாதவர்களுக்கு ,
துயர மேகங்களை கலைக்க முடியாதவர்களுக்கு ,
கவலைகளை கழிக்க முடியாதவர்களுக்கு ,
இன்பத்தை நுகர முடியாதவர்களுக்கு ,
உண்மையின் இலக்கணத்தை அறிய முடியாதவர்களுக்கு ,
வெற்றியின் விலாசத்தை பார்க்க முடியாதவர்களுக்கு ,
தோல்வியின் சுமையிலிருந்து மீள முடியாதவர்களுக்கு ,
கண்ணீரின் தாக்கத்தை தீர்;க்க முடியாதவர்களுக்கு ,
சோகத்தை துhககி எறிய முடியாதவர்களுக்கு ,
மன அழுத்தத்தை தாங்க முடியாதவர்களுக்கு ,
கர்;ம வினையின் தாக்கத்திலிருந்து மீள முடியாதவர்களுக்கு ,
வறுமையின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டு
ஏற்றத்தின் சுகங்களை சுவைக்க முடியாதவர்களுக்கு ,

சுனாமியைப் போன்ற கோர தாண்டவம்
இதயத்தை ஆட்டி வைத்து
வாழ்க்கையைப் புரட்டி போட்டு
ரத்த ஆற்றின் சாவு மேட்டில்
நடந்து கொண்டிருக்கும் கடின வாழ்க்கையில்
இருந்து எழ முடியாதவர்களுக்கு ,
கட்டி வைக்கப் பட்டது தான் கோயில் .

எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு ,
படைக்கப் பட்டது தான் கோயில் .

எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன் தொடர்புகொள்ள முடிந்தவர்களுக்காக
படைக்கப் பட்டது அல்ல கோயில் .

இறைவனுடன் தொடர்பு கொள்ளத் தெரிந்தவர்கள்
கோயிலுக்கு செல்ல மாட்டார்கள்.
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனை உணர்ந்து வேண்டியதைப் பெற்று
இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்கள்
தான் அடைந்த பேரின்பத்தை
அனைவரும் பெறவேண்டும்
என்ற உயரிய நோக்கில்
அகத்தில் தான் கண்டதை ,
அகத்தில் தான் பெற்றதை ,
அகத்தில் தான் உணர்ந்ததை ,
அகத்தில் தான் அனுபவித்ததை ,
அகத்தில் தான் பெற்ற விளக்கத்தை ,
அகத்தில் தான் பெற்ற இறை அனுபவத்தை ,
அகத்தில் தான் பெற்ற ஆன்மீகத்தை ,
அகத்தில் தான் பெற்ற பேரின்பத்தை ,
அகத்தில் தான் சுவைத்த அனுபவத்தை ,
அகத்தில் தான் இன்புற்ற அமுதத்தை ,

புறத்தில் கோயிலாக வடிவமைத்து
சக்தியின் களமாக வடிவமைத்து
ஆற்றலின் இருப்பிடாமாக வடிவமைத்து
புறத்தை உணர்ந்து
புறத்தில் தெளிந்து
புறத்தேவைகளை நிறைவு செய்து
புறத்தேவைகளை பூர்த்தி செய்து
புறத்தின் முழுமையை முடித்து
அகத்தில் நுழைந்து
அக சூட்சுமத்தை உணர்ந்து
அக மறைபொருளில் தெளிந்து
அகத்திற்குள் ஓங்கி உயர்வு பெற்று
புறத்தை முழுமையாக விலக்கி
அகத்திற்குள் பிரவேசித்து
அகத்தின் சூட்சுமத்தை உணர்ந்து
இறை அனுபவம் பெற்று
இறை நிலை அடைய வேண்டும்
என்ற நோக்கில் வடிவமைக்கப்
பட்டதே கோயில் .


ஓம்:
ஓம் உச்சரிப்பதற்காகவோ , ஓதுவதற்காகவோ
கண்டு பிடிக்கப்பட்ட சொல் அன்று.
எல்லாச் சொற்களும் முடிந்து விட்ட நிலையில்
எல்லா ஓசைகளும் அடங்கி விட்ட நிலையில்
ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது
எல்லாச் சொற்களும் மறைந்து போய்
ஓம் என்பது மட்டுமே அதிர்கின்றது.

அதைச் சொல்லத் தொடங்கினால் அது நம்
காதுகளில் ஒலிக்கத் தொடங்கி விடும்.
அப்புறம் அந்த ஆதாரபூர்வமான ஓம்காரத்தை இழந்துவிடுவோம்.

மனமும் , அறிவும் , எண்ணங்களும்
ஒரு முடிவுக்கு வந்து விடும்
அதற்குப் பிறகு அபூர்வமானதொரு
அதிர்வு நிலை கொள்ளும்
அதைத் தான் இந்த நாடு ஓம் என்று சொன்னது .

எல்லையற்ற அமைதி , சூன்யம் விளையும் போது ,
அதற்கேயான ஓர்  ஒலி , ஓர்  ஓசை வந்து விடுகிறது - அதை
பிரபஞ்ச அமைதியின் ஓசை ,
அனாகதம் ,
எழுப்பப்படாத ஓசை ,
இசைக்கப்படாத சங்கீதம் ,
என்று சொல்வார்கள் .
ஓம் எந்த பெயர்  கொண்டு அழைக்கப்பட்டாலும்
ஓம் என்பது உண்டாக்கப்படும் ஒன்றல்ல .

இரண்டு கைகளின் மோதலினால்
ஓசை உண்டாகிறது பிறக்கிறது .
அது உண்டாக்கப்படும் ஓசை
எல்லா ஓசைகளும் மறைந்து விடுகிறபோது
இருமைப் பண்பே இல்லாமற் போய் விடும் போது
பூரணத் தன்மை நிலை பெற்று விடும் போது
அப்போது உண்டாக்கப்படாத ஓசை பிறக்கிறது
இந்திய முனிவர்கள் இதைத் தான் ஓம் என்று சொன்னார்கள்.

ஓம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஓசை அல்ல
தியானத்தின் அடியாழத்தில் கேட்கப்பட்டவை.
எல்லா ஓசைகளும் முடிவடைகிற
எல்லையில் வருவது இந்த ஓம்.

ஓம் என்பது பிரபஞ்ச ஒலி
ஓம் என்பது எழுப்பப்படும் ஒலி அல்ல
அது தன்னால் எழும்பும் ஒலி.
அது படைக்கப்படும் ஒலி அல்ல
அனைத்தையும் படைத்த ஒலி .

படைக்க காரணமானது,
ஆதி அந்தத்தில் இருப்பது,
தோற்றம் மறைவில் இருப்பது.

ஓம் என்பது தான் இருப்புநிலை
ஓம் என்பது தான் சுத்தவெளி
ஓம் என்பது தான் வெட்டவெளி
ஓம் என்பது தான் சிவகளம்
ஓம்--------ம்-----------ம்

ஆதியிலிருந்து தான் அனைத்தும் உண்டாகின
பஞ்ச பூதங்கள் எனப்படுபவை
நிலம் , நீர் , நெருப்பு, காற்று ,விண்
ஆகியவை ஆகும் .

விண் கூடி காற்று ,
காற்று எரிந்து நெருப்பு ,
நெருப்பு எரிந்து நீர் ,
நீர்  குறுகி இறுகி நிலம் உருவானது .

பஞ்சபூதங்கள் கூடி
உயிர்கள் ,உலகம், பிரபஞ்சம் தோன்றியது.
ஒன்று மூன்றாகி ,
மூன்று ஐந்தாகி ,
ஐந்து எட்டாகி ,
வருவது தான் மறைபொருள் .
அதை உணராமல் ரகசியம் தெரிய முடியாது .

இந்தப் பாடலில் திருமூலர்,
ஓன்று மூன்றாகியதை சொல்கிறார் ;
மூன்று ஐந்தாகியதை சொல்கிறார் ;
ஐந்து எட்டாகியதை சொல்கிறார் ;

இவை எல்லாமே சிவகளம் ,
இருப்பு நிலையின் சாரமே
இருப்பு நிலையின் பரிணாம வெளிப்பாடே ஆகும் .

உண்மை உணரும் போது தான்
இதன் உண்மை தெரியும்
உண்மை உணர்ந்த குருவால் இதன்
விளக்கம் பெற முடியும்.
புத்தகங்களை படித்து
உண்மை விளக்கம் பெற முடியாது.
உண்மை குருவை தேட வேண்டும்
உண்மை உணர்வை பெற வேண்டும்
உண்மை வழியை நாட வேண்டும்
உண்மை நிலையை அடைய வேண்டும்

உண்மை உணர முதலில் ஓரெழுத்து
உண்மை தெரிய வேண்டும்.
ஓம் என்பது எதற்கு ஓரெழுத்து என்று
அழைக்கப்படுகிறது என்பதில் தெளிவு பெற வேண்டும்.

அப்பொழுது தான் ஓம் என்ற இருப்பு நிலையே
பஞ்சபூதங்களாகி ,
அண்ட சராசரங்களாகி ,
அரூபம் , ரூபம், அரூபாரூபம் என்ற மூன்றாகி ,
அனைத்தும் இருப்பு நிலையின் சாராம்சத்தின் பிம்பமாகி ,
நிற்கும் நிலையை உணரும் போது தான்
அனைத்தும் சுத்தவெளி
அனைத்துமே இருப்ப நிலை
இருப்பு நிலையின் இயக்கமே இயக்க நிலை
இயக்க நிலையின் அடக்கமே இருப்புநிலை
இருப்பு நிலைக்குள் இயக்க நிலையும்
இயக்க நிலைக்குள் இருப்பு நிலையும்
சிவனுக்குள் சக்தியும்
சக்திக்குள் சிவனும்
இருப்பதை உணர்வதன் மூலம்

சக்தியை கழித்தால் சிவம்
சிவம் இயக்கம் பெற்றால் சக்தி

சிவம் இயக்கம் பெற்றால் சிவன் சக்தி
சக்தி கழிந்தால் சிவன் சிவமாகிறது
சக்தி இல்லாத சிவம் இருப்புநிலை
சக்தி உள்ள சிவம் இயக்கநிலை.

ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை
ஒன்றுக்குள் ஒன்று ,
ஒன்றை பிரிய ஒன்று ,
ஒன்றை நீங்க ஒன்று ,
ஒன்று உருவாக ஒன்று ,
ஒன்று தோன்ற ஒன்று ,
ஒன்று பிறக்க ஒன்று ,
ஒன்று முடிய ஒன்று ,
ஒன்று பெற ஒன்று ,
என்பதில் தெளிவு பெற வேண்டும் .

இயக்கநிலையில் உள்ள அனைத்துமே அழியக் கூடியது
இயக்க நிலையில் உள்ள அனைத்துமே மாற்றம் அடையக் கூடியது
இருப்பு நிலை ஒன்றே உண்மை ; மற்றதெல்லாம் பொய்
அழியாத நிரந்தரமான உண்மையை உணர்ந்து
உண்மையே இந்த பிரபஞ்சம் முழுவதும்
பொய்யாக நிரம்பி இருக்கிறது.

உண்மையை உணர்ந்து பொய்யை நீக்கி
பார்க்கும் திறன் உடையவர்களால் மட்டுமே
உண்மையே ஆண்டவனாக ,
பிரபஞ்சமாக ,
இறைநிலையாக ,
இறைத்தன்மையாக ,
நிரம்பி இருக்கிறது
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்
அறிவில் தெளிவு பெற முடியும்
என்கிறார் திருமூலர்.



இயேசு கிறிஸ்து - திருமூலர்:
இயேசு,
உண்மைக்கும் ,போலிக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்பவர்கள் மட்டுமே
உண்மையில் மறைந்துள்ள மறைபொருளையும்
மறைபொருளின் மூலத்தையும்
மூலமே ஆண்டவர்  என்பதையும் அறிந்து
கொள்ள முடியும் என்கிறார் .

அவ்வாறே ,
திருமூலரும் ,
உண்மையை உணரும் தகுதி
படைத்தவர்களால் மட்டுமே
எல்லாமாக உருவாகி இருப்பதே கடவுள் ,
எல்லாமாக விரிந்திருப்பதே கடவுள் ,
எல்லாமாக பரிணமித்திருப்பதே கடவுள் ,                                                                                                
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார் .

               
          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுநாற்பத்தியொன்று ந்தான்முற்றே “”
               

May 17, 2012

இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-பையூர்-பதிவு-40



இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-பையூர்-பதிவு-40

           “”பதிவு நாற்பதை விரித்துச் சொல்ல
            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு , இவைகளின்படி செய்கிறவன் எவனோ ,அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
                                                             ------- மத்தேயு - 7 : 24
பெருமழை சொரிந்து ,பெருவெள்ளம் வந்து ,காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும் ,அது விழவில்லை ;ஏனென்றால் ,அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”
                                                          ----------மத்தேயு - 7 : 25
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு ,இவைகளின் படி செய்யாதிருக்கிறவன் எவனோ ,அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.”
                                                              ------மத்தேயு - 7 : 26
பெருமழை சொரிந்து ,பெருவெள்ளம் வந்து ,காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினபோது அது விழுந்தது ;விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.”
                                                               -------மத்தேயு - 7 : 27
                                                              
சுட்டிக் காட்டப்படும் தவறை உணர்ந்து
திருத்திக் கொள்வது என்பது உயர்ந்த விஷயம்
உயர்ந்த நிலையில் உள்ளவர்களால்
உயர்ந்த மனம் படைத்தவர்களால்
சிந்திக்கும் திறன் உடையவர்களால்
ஆணவம் நீக்கியவர்களால்
தன்முனைப்பு அற்றவர்களால்
அறிவு தெளிவு பெற்றவர்களால்
அகம் பாவம் நீக்கியவர்களால்
ஆளுமைத் தன்மை விட்டவர்களால்
ஏற்றுக் கொள்ளும் திறன் உடையவர்களால்
கிரகிக்கும் ஆற்றல் உடையவர்களால்
யோசிக்கும் சக்தி பெற்றவர்களால்          
சீர்துhக்கி பார்க்கும் மனம் கொண்டவர்களால்
ஆராயும் திறன் பெற்றவர்களால்
மட்டுமே சுட்டிக் காட்டப்படும் தவறுகளை
உணர முடியும் ; அறிய முடியும் ;
அறிவு தெளிவு பெற முடியும்.

சுட்டிக் காட்டப்படும் தவறுகளை ஏற்றுக் கொண்டு
உணரும் திறன் பெற்றவர்களால் தான்
ஏற்றுக் கொண்ட துறையில் வெற்றி பெற முடியும்.

முன்னேற்றத்திற்கான சாவியை
வெற்றிக்கான திறவுகோலை பெற்று விட்டான் என்று பொருள்.
சுட்டிக் காட்டப்படும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும்
மனது இல்லாதவன் வெற்றிக்கான விலாசத்தை இழக்கப் போகிறான்;
முன்னேற்றத்திற்கான சூத்திரத்தை இழக்கப் போகிறான்;
இன்பக் கோட்டைகளைத் தகர்க்கப் போகிறான்;
துன்ப நினைவுகளை ஏற்கப் போகிறான்;
வாழ்வின் வசந்தத்தை நொறுக்கப் போகிறான்;
என்று பொருள்.

சமுதாயம் சுட்டிக் காட்டும் ;
மற்றவர்கள் சுட்டிக் காட்டும் ;
நம்மைச் சுற்றியவர்கள் சுட்டிக் காட்டும் ;
நம்மை உணர்ந்தவர்கள் சுட்டிக் காட்டும் ;
நம்மை உணராதவர்கள் சுட்டிக் காட்டும் ;
முகம் தெரியாதவர்கள் சுட்டிக் காட்டும் ;
தவறுகளை யோசிக்க வேண்டும்
அவர்கள் சொன்னதை
நினைத்து பார்க்க வேண்டும்
யோசித்து பார்க்க வேண்டும்

தான் என்ற ஆணவம்
தான் என்னும் தன்முனைப்பு இருக்கும் வரை,
சுட்டிக் காட்டப்படும் தவறுகளை
தன்னிடம் உள்ள குறைகளை உணர மாட்டான்
திருத்திக் கொள்ள மாட்டான்
தன்னை மாற்றிக் கொள்ள மாட்டான்
தான் என்னும் ஆணவம்,
தான் என்னும் தன்முனைப்பு,
எல்லாம் தெரிந்தவன் என்ற சிந்தனை அற்றவர்கள் தான்
சுட்டிக் காட்டப்படும் தவறுகளை
ஏற்று உணர்ந்து திருத்திக் கொள்வார்கள் .

படிப்பில் சொல்லப்படும் தவறுகளை
திருத்திக் கொள்ளவில்லையெனில்
கல்வியில் வெற்றி பெற முடியாது !

வியாபாரத்தில் செய்யப்படும் தவறுகளை
திருத்திக் கொள்ளவில்லையெனில்
வியாபாரத்தில் வெற்றி பெற முடியாது !

கொண்ட கொள்கையில் உள்ள தவறுகளை
திருத்திக் கொள்ளவில்லையெனில்
இலக்கினை அடைய முடியாது !
கொள்கையில் வெற்றி பெற முடியாது !

செயல்களில் உள்ள தவறுகளை
திருத்திக் கொள்ளவில்லையெனில்
முன்னேற்றத்தைக் காண முடியாது !

ஆணவம் நீக்கிய மனமும்
தன்முனைப்பு அற்ற குணமும் உடையவர்களால் மட்டுமே
மற்றவர்களை மதிக்கும் மனமும்
கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் குணமும்
வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையும்
தற்காலிகத்திற்கும் ,நிரந்தரத்திற்கும் உள்ள
மாறுபாட்டை உணர முடியும்.

தற்காலிகம் மாறிக் கொண்டே இருப்பது ,
அழிந்து கொண்டே இருப்பது ,
ஓடிக் கொண்டே இருப்பது ,
நிரந்தரம் என்றும் இருப்பது , மாறாமல் இருப்பது ,
ஆண்டவர்  மட்டுமே நிரந்தரம்
மற்ற அனைத்தும் தற்காலிகம்
ஆண்டவரிடம் தன்னை இணைத்துக் கொண்டவர்
மாறாத நிரந்தரத்தில் வர்ழ்வார்
ஆண்டவரிடம் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்
தற்காலிகத்தில் வாழ்வார்.

தற்காலிகத்தில் வாழ்பவர்  வாழ்க்கையானது
பள்ளத்தில் கட்டப்பட்ட வீட்டைப் போன்றது
எப்பொழுது வேண்டுமானாலும்
    கலைந்து விடும்
    அழிந்து விடும்
    குலைந்து விடும்
   சிதறி விடும்
   உடைந்து விடும்
   மறைந்து விடும்
   தகர்ந்து விடும்

பள்ளத்தில் கட்டப்பட்ட வீடானது
புயலாலும் ,மழையாலும், வெள்ளத்தாலும்,
இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்படும்;
புயலால் அடிக்கப்படும்;
சூறாவளியால் தாக்கப்படும்;
வெள்ளத்தால் அடிக்கப்படும்;
நிலைக்கு உள்ளாக்கப்படும்.
ஏனென்றால் இவை நிலையில்லாத
இடத்தில் கட்டப்பட்டவை.
தற்காலிகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கையானது
இதைப் போல் தான் ஆகும்.
துன்பத்திற்கு உள்ளாகி ஆற்றொணாத் துயரில் தள்ளி விடும்
மாறிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையை உண்மை என்று நம்பி
அடுத்த நிமிடம் நாம் உயிரோடு இருப்போமா?
என்பதில் கூட தெளிவு இல்லாமல்
   அழியக் கூடிய,
   மாறக் கூடிய,
   நிரந்தரமற்ற ,
தற்காலிமான இந்த வாழ்க்கையை
உண்மை என்று நம்பி
    பணத்தில் ஆடுகின்றனர் ;                      
    மோகத்தில் திளைக்கின்றனர் ;
    சுகத்தில் சுகிக்கின்றனர் ;                 
    மகிழ்ச்சியில் நனைகின்றனர்  ;
    மற்றவர்களை ஏமாற்றுகின்றனர் ;
    பொய்களை அவிழ்க்கின்றனர் ;
    போலியாக திரிகின்றனர் ;
    நல்லவராக நடிக்கின்றனர் ;
    கெட்டதை மறைக்கின்றனர் ;
    பண்பை மறக்கின்றனர் ;
    நல்லதை துறக்கின்றனர் ;
    கெட்டதை ஏற்கின்றனர் ;
    ஆணவத்தில் இருக்கின்றனர் ;
    மமதையில் சிரிக்கின்றனர் ;
    தன்முனைப்பில் வாழ்கின்றனர் ;
    அகம்பாவத்தில் திரிகின்றனர் ;
    குறைகளோடு அலைகின்றனர் ;
    கெட்டவைகளை ஏற்கின்றனர் ;
    தீமைகளில் மூழ்குகின்றனர் ;
    தகாதவைகளை செய்கின்றனர் ;
    தற்காலிகத்தில் வாழ்கின்றனர் ;
நிரந்தரத்தை உணர முடியாமல் தவிக்கின்றனர் .
அழியக் கூடிய தற்காலிகத்தில் வாழ்ந்து பழகப்பட்டவர்கள்
தற்காலிகத்தை உண்மை என்று நம்பி இருப்பவர்கள்
தற்காலிகத்தில் மூழ்கி இருப்பவர்கள்
தற்காலிகத்தில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள்
நிரந்தரத்தை அறிய வாய்ப்பில்லை
நிரந்தரம் என்றால் ஆண்டவர்  என்பதை உணர வேண்டும்.
ஆண்டவர்  மட்டுமே நிரந்தரம் மற்றவை எல்லாம் தற்காலிகமே
என்பதில் தெளிவு அடைய வேண்டும்.
ஆண்டவர்  மட்டுமே நிரந்தரம் என்பதில் தெளிவு வர வேண்டுமென்றால்
தற்காலிகத்திற்கு வெளியே வர வேண்டும் ;
தற்காலிகத்திலிருந்து விடுபட வேண்டும் ;
தற்காலிகத்திலிருந்து விலகி வர வேண்டும் ;
தற்காலிகத்தை துறக்க வேண்டும் ;
இத்தகைய தன்மை வர புறத்தில் உள்ளவை தற்காலிகம்
அகத்தில் ஆண்டவர்  வீற்றிருக்கும் இடமே நிரந்தரம்
என்பதை உணர வேண்டும் .

புறத்தை விட்டு அகத்திற்குள் வர வேண்டுமானால்
புறத்தை துறக்க வேண்டும்
புறத்தை முழுவதுமாக துறப்பவர்களால் மட்டுமே
புறத்தை இழக்கும் மணம் உடையவர்களால் மட்டுமே
புறத்தை விட்டு விட தைரியம் உள்ளவர்களால் மட்டுமே
புறத்தை இழந்து விட சம்பந்தம் கொண்டவர்களால் மட்டுமே
புறவாழ்க்கையை ,
தற்காலிக வாழ்க்கையை ,
நிரந்தரமில்லாத வாழ்க்கையை ,
அழியக் கூடிய வாழ்க்கையை ,
நிலையில்லாத வாழ்க்கையை,
துறப்பவர்களால் மட்டுமே
முற்றிலும் துறப்பவர்களால் மட்டுமே
நிரந்தரமான வாழ்க்கையை , நிரந்தரத்தை ,
கடவுளை , ஆண்டவரை அடைய முடியும் .
ஆண்டவர்  ஆசியைப் பெற முடியும் ;
ஆண்டவருடன் இணைய முடியும் ;
நிரந்தரமான வாழ்க்கையை பெற முடியும் ;
ஆண்டவரை உணர்ந்து ஆண்டவருடன்
இணைக்கப்பட்டவருடைய வாழ்க்கையானது
கன் மலையின் மேல்கட்டப்பட்ட வீட்டிற்கு சமம் .
என்றும் அழியாது .

  புயலால் பாதிக்கப்படாது ;
  சூறாவளியால் தாக்கப்படாது ;
  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாது ;
  துன்பங்கள் நிறைந்திருக்காது ;
  கவலைகள் சூழ்ந்திருக்காது ;
  வறுமைகளால் நிறைந்திருக்காது ;
  ஏழ்மையால் பாதிக்கப்பட்டிருக்காது ;
  தோல்வியால் தாக்கப்பட்டிருக்காது ;
  கண்ணீரால் நனைக்கப்பட்டிருக்காது ;
  துன்பங்களில் மாட்டியிருக்காது ;

வாழ்க்கையானது ,
     அன்பின் இலக்கணமாகவும் ,
     ஆசையின் இருப்பிடமாகவும் ,
     இன்பத்தின் உறைவிடமாகவும் ,
     ஈகையின் பிறப்பிடமாகவும் ,
     உண்மையின் தாயகமாகவும் ,
     எளிமையின் சின்னமாகவும் ,
     ஏற்றத்தின் பிம்பமாகவும் ,
     ஐயத்தின் தெளிவாகவும் ,
     ஓற்றுமையின் உயர்வாகவும் ,
     ஓர்மையின் இலக்கணமாகவும் ,
     ஓளஷதத்தின் பண்பாகவும் ,
இருக்கும் .

ஆண்டவரை உணர்ந்தவர்  வாழ்க்கை
ஆண்டவரை உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்  வாழ்க்கையானது
தாழ்வான எண்ணம் இல்லாமல்
உயர்வான எண்ணம் கொண்டவர்  வாழ்க்கையானது
தற்காலிகத்தை விடுத்து
நிரந்தரத்தை உணர்ந்தவர்  வாழ்க்கையானது நிரந்தரமானது
துன்பம் இல்லாமல் இருக்கும் .

கன்மலையின் மேல் கட்டப்பட்ட வீடானது
எப்படி பாதிக்கப்படாமல் இருக்கிறதோ
அவ்வாறு ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்
வாழ்க்கையானது இன்பமாக இருக்கும்
ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாமல்
தற்காலிகத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்க்கையானது ;
தாழ்வான எண்ணம் கொண்டவர்கள் வாழ்க்கையானது ;
நிரந்தரத்தை அறியாதவர்கள் வாழ்க்கையானது ;
நிரந்தரத்தை உணர முடியாதவர்கள் வாழ்க்கையானது ;
பள்ளத்தில் கட்டப்பட்ட வீட்டைப் போன்றது
பள்ளத்தில் கட்டப்பட்ட வீடானது எப்படி பாதிக்கப்பட்டு
அழிவை நோக்கி செல்லுமோ? அதைப் போல
ஆண்டவரை உணராத வாழ்க்கையானது
துன்பத்திற்கு உள்ளாகி அழிவுக்கு உட்படுத்தப்படும் என்கிறார்  இயேசு.



அழுகணிச் சித்தர்:                   
பையூரி லேயிருந்து பாழூரி  லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என்கண்ணம்மா
     பாழாய் முடியாவோ
                 -------அழுகணிச் சித்தர்----பெரியஞானக் கோவை           

ஆதியும் நீ , அந்தமும் நீ
அந்தத்தின் அருளும் நீ !

எண்ணும் நீ ,எழுத்தும் நீ
எழுத்தின் இலக்கணம் நீ !

எண்ணமும் நீ , சொல்லும் நீ
சொல்லின் செயலும் நீ !
      
கண்ணும் நீ , காட்சியும் நீ
காட்சியின் யதார்த்தம் நீ !

அறிவும் நீ , ஆற்றலும் நீ
ஆற்றலின் இயல்பு நீ !

ஆள்பவனும் நீ , ஆளப்படுபவனும் நீ
ஆளுமையின் பிராணனும் நீ !

விண்ணும் நீ , மண்ணும் நீ
மண்ணின் மூலம் நீ !

அன்பும் நீ , ஆசியும் நீ
ஆசியின் கருணையும் நீ !

ஓசையும் நீ , ஓம்காரமும் நீ
ஓம்காரத்தின் உருவமும் நீ !

ஒளியும் நீ , வளியும் நீ
வளியின் விதியும் நீ !
 
மதியும் நீ , மனதும் நீ
மனதின் பிறப்பும் நீ !

அண்டமும் நீ , அகிலமும் நீ
அகிலத்தின் சான்று நீ !

உரையும் நீ , உள்ளும் நீ
உள்ளின் உருவகமும் நீ !

பாடலும் நீ , பொருளும் நீ
பொருளின் மெய்யும் நீ !

இறப்பும் நீ , அழிவும் நீ
அழிவின் ஆக்கமும் நீ !

சான்று நீ , சன்மார்க்கம் நீ
சன்மார்க்கத்தின் விழி நீ !

பார்ப்பவன் நீ , பார்க்கப்படுபவன் நீ
பார்க்கப்படுபவனின் பாதை நீ !

இதயம் நீ , இல்லறம் நீ
இல்லறத்தின் நல்லறம் நீ !

சாந்தம் நீ , சித்தம் நீ
சித்தத்தின் சிந்தை நீ !

பாரும் நீ , பகலவனும் நீ
பகலவனின் தோற்றம் நீ !

இம்மையும் நீ  ,மறுமையும் நீ
மறுமையின் சாரம் நீ !

முதலும் நீ , முடிவும் நீ
முடிவின் முதலும் நீ !

என்பதில் தெளிவு பெற்று
யாருக்கு அறிவு ரேகை திறந்து கொள்கிறதோ அவருக்கு
ஞானப் பாதை கிடைக்கும்
ஞானத்தின் திறவுகோல் கிடைக்கும் .
      
      இளமை ராகம்
      இதய வீணையில்
      ஏற்றி வைக்கப்பட்ட தீபம் !

பருவ ராகம்
பள்ளி யறையில்
எழுதி வைக்கப்பட்ட கவிதை !

     கன்னி ராகம்
     கண்களின் ஓரத்தில்
     காட்டப் பட்ட காட்சி !

அழகு ராகம்
ஆசையின் பிம்பத்தில்
வார்க்கப் பட்ட நிழல் !

      அன்பு ராகம்
      ஆசையின் அரவணைப்பில்
      பொறித்து வைக்கப்பட்ட பொதிகைச்சாரல் !

இசை ராகம்
இளமை ஊஞ்சலில்
மாட்டி வைக்கப்பட்ட காவியம் !

      சோக ராகம்
      துன்பத்தின் சுமையில்
      முடித்து வைக்கப்பட்ட இன்பம் !

ஆசை ராகம்
அழகின் ஆராதனையில்
அனுபவிக்கப்பட்ட உண்மை நிஜம் !

      கல்வி ராகம்
      அறிவின் சிகரத்தில்
      நாட்டப்பட்ட ஞானக் கொடி !

சுதந்திர ராகம்
புரட்சியின் முடிவில்
பெற்றுக் கொண்ட தாகம் !

     அறிவு ராகம்
     சிந்தனையின் ஓரத்தில்
     எழுதப் பட்ட வரலாறு !

உழைப்பு ராகம்
இரத்தத்தின் இடையில்
தெறிக்கப் பட்ட சுயமரியாதை !

      அடிமை ராகம்
      இல்லாமையின் கண்களில்
      சுடர்  விடும் கனல் !

புரட்சி ராகம்
எரியும் நெருப்புக்கு
ஊற்றப்படும் அழியாத தன்மானம் !

      முதுமை ராகம்
      முடிந்து போனவைக்கு
      இருப்பிடம் நாடும் குடில் !

கவிதை ராகம்
கவிஞனின் கற்பனையில்
நடமாடும் ஞானக் கிடங்கு !

       சீர்திருத்த ராகம்
       சிந்தனையின் முடிவில்
       பொறிக்கப் படும் கல்வெட்டு !

நட்பு ராகம்
துன்பத்தின் தொடக்கத்தில் 
பெறப்படும் அனுபவ முத்திரை !

       அரசியல் ராகம்
       அறிவின் உழைப்பில்
       எழுதப்படும் முடியாத இலக்கியம் !


என்பதை உணர்ந்து
சிற்றின்பத்திற்கும் - பேரின்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை,     
நிரந்தர - தற்காலிக தன்மைக்குள்ள வேறுபாட்டை ,
ஜீவாத்மா - பரமாத்மாவுக்குள்ள வேறுபாட்டை ,
உணர்பவரால் மட்டுமே
நிரந்தரத்தைப் பற்றியும் , தற்காலிகத்தைப் பற்றியும் ,
எது நிரந்தர நிம்மதி எது ; தற்காலிக நிம்மதி,
எது நிரந்தர இன்பம்  ;எது தற்காலிக இன்பம் ,
என்பதை உணர முடியும் .

தாயின் கருவறையில் இருந்து
இந்த உலகத்தில் பிறக்கிறோம்
பாழாய் போய் இந்த உலகத்தில் ,
நயவஞ்சகம் நிரம்பிய இந்த உலகத்தில் ,
கயமைத்தனம் நிரம்பிய இந்த உலகத்தில் ,
சுயநலம் நிரம்பிய இந்த உலகத்தில் ,
மடமைத்தனம் நிரம்பிய இந்த உலகத்தில் ,
கெட்டவர்கள் நிரம்பிய இந்த உலகத்தில் ,
பிறக்கிறோம் .

பையூர்  என்றால் தாயின் கருவறை என்று பொருள் .
பாழூர்  என்றால் பாழாய் போன கெட்டுப் போன கெடுதல்கள்
நிறைந்த இந்த உலகத்தில் என்று பொருள் .

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் பிறப்பது
தான் வந்த கடமையை முடிக்க பிறக்கிறான்
கர்ம வினையை அனுபவித்துத் தீர்க்க பிறக்கிறான்

வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதன் பிறக்க வில்லை
வாழ்க்கையை வாழத்தான் என்று நினைக்கும் மனிதன்
சிற்றின்பத்தில் மாட்டிக் கொள்கிறான்
பிறவித் தொடரை நீட்டிக் கொள்கிறான்
பிறப்பு - இறப்பு சுழலில் சிக்கிக் கொள்கிறான்
வாழ்க்கைச் சகதியில் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறான்.

கர்ம வினையை தீர்க்கத் தான் பிறந்திருக்கிறோம்
கர்ம வினையின் தொடர்பால் பிறந்திருக்கிறோம்
என்பதை உணர்ந்து அதை கழிக்கும் நிலைகளைத் தேடுபவன்
சிற்றின்பம் என்பது ஒன்றும் இல்லை
பேரின்பத்தை உணர்ந்து ஆண்டவனுடன் இணைந்து விட்டால்
எல்லாம் கிடைக்கும் என்பதை உணர்கிறான்.
ஆனால் ஆண்டவனை உணர்ந்து அவனை
அடையக் கூடிய வழி தெரியவில்லை

மெய் என்றால் உண்மை
பொய் என்றால் உண்மை இல்லாதது
ஆண்டவன் மட்டுமே மெய்
மற்றதெல்லாம் பொய்
மாயை அழியக் கூடியது    
சிற்றின்பத்தில் சேர்ந்தது .

வேதாந்தம்:
வேதம் + அந்தம் = வேதாந்தம்
வேதம் என்றால் பஞ்ச பூதங்களைப் பற்றிக் கூறுவது
அந்த வேதத்திற்கு முடிவானது பரம்பொருள் என்று கண்ட நிலை
          வேதம் + அந்தம் =   வேதாந்தம்

ஐந்து பௌதிகப் பிரிவுகளை தெளிவாக்கி உணர்த்திய
வேத நுhல்கள் அந்த வேதத்திற்கு முடிவான
பரம் பொருள், மெய்ப் பொருள் கண்டு பிடித்த போது தான்
வேதம் +  அந்தம் = வேதாந்தம் என்ற பெயரைக் கொடுத்து
அதற்கு நிறைவு உண்டாக்கியது  .

வீடு:
வீடு என்றால் இடம்
நாம் தரையிலே உட்கார்ந்திருக்கிறோம்
தரை எங்கே இருக்கிறது - பூமியில்
பூமி எங்கே இருக்கிறது - பிரபஞ்சத்தில்
பிரபஞ்சம் எங்கே இருக்கிறது - சுத்த வெளியில்
சுத்த வெளி - அது தான் வீடு
அதற்கு ஒரு வீடு இல்லை
வீடு இல்லாத வீடு
மனிதன் அதையே அறிவாக அறியும் பேறு பெற்றால்
அது தான் வீடு பேறு .

கடவுளை அடையக் கூடிய உண்மையான வழிகள்
எனக்குத் தெரியவில்லை
உண்மையான வழி எது என்று எனக்குத் தெரிந்தால்
சிற்றின்பத்தை விலக்கி , பேரின்பத்தை அடைந்து,
இறவா நிலை அடைவேன்.
நித்தியம் அடைவேன்.
எல்லாம் பெறுவேன்.

பையூர் என்றால் தாயின் கருவறை என்று பொருள்.
மெய்யூர்  என்றால் மெய்ப்பொருள் என்று பொருள் .
பாழ் என்றால் வெறுமையானது என்று பொருள் .

பாழ் + தளம் = பாதாளம் :
பாழ்  =  வெறுமையானது
பாழ் + தளம்  =  பாழ்தளம் இன்று பேச்சு வழக்கில்
பாதாளம் என்று அழைக்கப்படுகிறது .

பாதாளம் என்றால் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள் .
இயக்க நிலை ஒடுங்குமிடம்  .
அனைத்திற்கும் முடிவான இடம் என்று பொருள் .

எங்கே முடிவு இருக்கிறதோ
அங்கே தான் தொடக்கமும் இருக்கும் !

எங்கே ஆரம்பம் இருக்கிறதோ
அங்கே தான் முடிவு இருக்கும் !

எங்கே தோற்றம் இருக்கிறதோ
அங்கே தான் மறைவு இருக்கும் !     

மெய்ப்பொருள்:
தாயின் கருவறையும் , மெய்ப் பொருளும் ஒன்று
ஏனென்றால் இரண்டும் அனைத்தையும் கொடுக்கும் என்கிறார்.
அதனால் தான் அதனை பாழ் என்கிறார்.

அனைத்தும் ஒடுங்குமிடமும் இது தான்
அனைத்தும் பிறக்குமிடமும் இது தான் !

கருவறையில் பிறப்பும் நடக்கிறது
கருவறையில் இறப்பும் நடக்கிறது !

மெய்ப் பொருளில் ஆக்கமும் இருக்கிறது
மெய்ப் பொருளில் அழிவும் இருக்கிறது !

எனவே தான் பையூரும் , மெய்யூரும் பாழ்
என்கிறார்  அழுகணிச் சித்தர்.

தாயின் கர்ப்பப்பையில் நாம் இருக்கும் போது
நமக்கு தேவையானவற்றை இறைவன் தாயின்
மூலம் நமக்கு அளிக்கிறான்
வேண்டியவைகள் அனைத்தும் உயிர்வாழத் தேவையானவைகள்,
இன்றியமையாதவைகள் ,முக்கியமானவைகளை இறைவன் அளிக்கிறான்
அதைப் போல இறைவனுடன் இரண்டறக் கலந்து இணைந்தால்
நாம் உயிர்  வாழத் தேவையான சிற்றின்ப சந்தோஷங்களையும்
பேரின்ப திறவு கோலையும் நமக்கு அளிப்பான்.

ஆண்டவனை உணர்ந்தால் எல்லாம் கிடைக்கும்
ஆண்டவனை உணராமல் விட்டால் எதுவும் கிடைக்காது
என்கிறார்  அழுகணிச் சித்தர்.



இயேசு கிறிஸ்து - அழுகணிச் சித்தர்:
இயேசு ,
ஆண்டவரை உணர்பவருடைய வாழ்க்கையானது
துன்பம் நீக்கி இன்பம் உடையதாய் இருக்கும்.
ஆண்டவரை உணராதவருடைய வாழ்க்கையானது
இன்பம் அற்றதாய் துன்பம் சூழ்ந்ததாய் இருக்கும் .
என்கிறார்  .

அவ்வாறே,
அழுகணிச் சித்தரும்,
கடவுளை உணர்ந்தால் எல்லாம் பெற்று
பேரின்பப் பெரு வெள்ளத்தில் நீந்துவேன்
கடவுளை உணராவிட்டால் பிறப்பு - இறப்பு
சுழற்சியில் சிக்கி துன்பக் கடலில் நீந்துவேன் என்கிறார்.
               

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                        போற்றினேன் நாற்பது  ந்தான்முற்றே “”